search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள் போராட்டம்"

    • நிகோலஸ் வெற்றியை எதிர்க்கட்சிகள் ஏற்க வில்லை.
    • வெனிசுலாவில் பதற்றம் நிலவி வருகிறது.

    தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் 51.2 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் எட்மண்டோ கான்சலஸ் 44.2 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனால் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நிகோலஸ் மதுரோவின் வெற்றியை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.

    தேசிய தேர்தல் கவுன்சிலின் முடிவுகள் மோசடியான ஒன்று. எங்களது வேட்பாளர் எட்மண்டோ கோன்சாலஸ், அதிபர் மதுரோவை தோற்கடித்ததற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

    தங்களது வேட்பாளர் எட்மண்டோ கோன்சா 70 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அவர்தான் நியாயமான முறையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.

    எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ கூறும்போது, நாங்கள் தான் வெற்றி பெற்றோம், வெனி சுலாவின் புதிய அதிபராக எட்மண்டோ கோன்சாலஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றார்.

    இதற்கிடையே நிகோலஸ் மதுரோவின் வெற்றியை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரோவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    முகமூடி அணிந்த இளைஞர்கள் சிலர் கம்பங்களில் தொங்க விடப்பட்டிருந்த மதுரோவின் பிரச்சார சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்தனர். பால்கன் மாநிலத்தில் முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேசின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் இடித்தனர்.

    இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாலைகளில் டயர்களை போட்டு எரித்தனர். சில வாகனங்களுக்கும் தீ வைக் கப்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதை யடுத்து போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர். இதில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.

    சில போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை நோக்கி சென்றனர். அவர் களை போலீசார் தடுத்து நிறுத்தினர். வன்முறை காரணமாக வெனிசுலாவில் பதற்றம் நிலவி வருகிறது.

    இதற்கிடையே அதிபர் நிகோலஸ் மதுரோவின் வெற்றியை அமெரிக்கா, சில தென் அமெரிக்க நாடுகள் ஏற்கவில்லை. அதே வேளையில் மதுரோவுக்கு ரஷியா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

    • நீட் பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாளைவரை ஒத்திவைப்பு.
    • ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றதைவிட முக்கியத்துவம் பெறுகிறது- ரிஜிஜு.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது நீட் பிரச்சனையை எதிர்க்கட்சிகள் இன்று கையில் எடுத்தன. இது தொடர்பாக மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்துளளார்.

    இது தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறுகையில் "எந்தவொரு விவகாரம் குறித்தும் விசாரணை நடத்த அரசு தயாராக இருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தை முடக்கும் வகையிலான காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை சிறந்தது அல்ல. நாடாளுமன்ற மரபுகளை காங்கிரஸ் மீறும் விதத்தை நான் கண்டிக்கிறேன்.

    ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றதைவிட முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், காங்கிரஸ் மக்களவை கண்ணியத்திற்கு எதிராக இதுபோன்ற பிரச்சனைகளை எழுப்புகிறது. நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் வேண்டாம். மற்ற பிரச்சனைகள் முதலில் ஆலோசிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறார்.

    நாங்கள் நீட் தொடர்பான விவாதங்களுக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அது விதிப்படை நடைபெற வேண்டும். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மூன்று நாட்கள் நடைபெறும். இந்த தீர்மானத்தின்போது உறுப்பினர்கள் அவர்கள் கருத்துகளை முன்வைக்கலாம்.

    இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டம் இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று காலை போராட்டத்தை தொடங்கினார்கள்.

    இந்நிலையில் மேல்சபையில் இருந்து ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் நேற்று இரவு முழுவதும் நீடித்தது. இதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மாறிமாறி பங்கேற்றனர்.

    குறிப்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட சஞ்சய் சிங் எம்.பி. இரவு முழுவதும் போராட்டத்தில் கலந்துகொண்டார். அவருடன் பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.க்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். விடிய விடிய எம்.பி.க்களின் தர்ணா நடந்தது.

    எம்.பி.க்களில் பெரும்பாலானவர்கள் கையில் 'மணிப்பூருக்காக இந்தியா' ('INDIA for Manipur') என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர். நள்ளிரவு வரை எம்.பி.க்கள் உட்கார்ந்து இருந்தனர். அதன்பிறகு அங்கேயே புல்தரையில் படுத்து தூங்கினார்கள்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டம் காலையில் தொடங்கியது. சுழற்சி முறையில் எம்.பி.க்கள் வந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 20 பேர் மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் 50 மணி நேர தொடர் போராட்டத்தை நடத்தி இருந்தனர்.

    இதைப்போல மீண்டும் ஒரு போராட்டத்தை அவர்கள் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள 26 எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறையில் இன்று காலை நடந்தது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பாராளுமன்ற இரு அவைகளிலும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இது தொடர்பான பேனர்களையும், பதாகைகளையும் வைத்து இருந்தனர்.

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

    இதற்கிடையே எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா எம்.பி.க்களும் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், அசோக் கெலாட் தலைமையிலான மாநில அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பா.ஜனதா பெண் உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

    • ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.
    • பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    புதுடெல்லி:

    அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.

    இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பெரும்பாலானோர் இன்று பாராளுமன்றத்திற்கு கருப்பு உடையில் வந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன், பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அதானி விவகாரம், ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மக்களவையில் பாராட்டு.
    • எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று போராட்டம்.

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் இளைஞர்களுக்கு அவர்கள் உத்வேகமாக இருப்பதாக கூறினார்.

    தொடர்ந்து கேள்வி நேரம் எடுக்கப்பட்ட நிலையில், ​​காங்கிரஸ் உறுப்பினர்கள் நான்கு பேரின் இடைநீக்கத்தை திரும்பப் பெறக் கோரி அக்கட்சியின் எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்பினர். அவையின் மையப் பகுதிக்கு வந்த அவர்கள் குரல் எழுப்பியதை கண்ட சபாநாயகர் இருக்கைகளுக்குச் சென்று அமருமாறும், சபையை நடத்த அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

    எதிர்க்கட்சிகள் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக, பாராளுமன்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குற்றம் சாட்டினார். எனினும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததை அடுத்து அவை முதலில் நண்பகல் 12 மணி வரையும் பின்னர் 2 மணிவரையும் ஒத்தி வைக்கப்பட்டது.

    இதேபோல் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது விவகாரத்தை பாராளுமன்ற மாநிலங்களவையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் எழுப்பினர். இந்த விவகாரத்திற்கும், சபைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், உறுப்பினர்கள் இருக்கைகளுக்குச் செல்லுமாறு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, கேட்டுக் கொண்டார்.

    மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று குரல் எழுப்பியதை அடுத்து, நண்பகல் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

    ×