search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீரன் சின்னமலை நினைவுநாள்"

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்புச்செயலாளர் பி. தங்கமணி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.
    • கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கும், சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது உருவப் படத்திற்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்புச்செயலாளர் பி. தங்கமணி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.

    சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொன்னையன் தலைமையில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீரன் சின்னமலை சிலைக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி நின்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வாழ்க... வாழ்க.. என வாழ்த்தி கோஷமிட்டனர்.

    சென்னை:

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியின்போது மழை பெய்து கொண்டிருந்தபோதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி நின்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வாழ்க... வாழ்க.. என வாழ்த்தி கோஷமிட்டனர்.

    நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், நிர்வாகிகள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி, விஜயபாஸ்கர், காமராஜ், மோகன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆதிராஜாராம், தி.நகர் சத்யா, வேளச்சேரி அசோக், வெங்கடேஷ்பாபு, கே.பி.கந்தன், ராஜேஷ் மற்றும் சிவராஜ், பகுதி செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ், சி.கே.முருகன், ஷேக் அலி, சைதை சுகுமார், என்.எஸ்.மோகன், ஷேக் அப்துல்லா, வேளச்சேரி மூர்த்தி, வக்கீல் சதாசிவம், டாக்டர் பரமசிவன், எம்.ஜி.ஆர்.நகர் குட்டி, வைகுண்ட ராஜா, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×