search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவினாசி பேரூராட்சி"

    • துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • வ.உ.சி.பூங்காவில் மூன்று குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ளன.

     அவினாசி:

    அவினாசி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்–தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்ற பொருள் படிக்கப்பட்டு தீரமானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கவுன்சிலர் சசிகலா பேசுகையில்,

    வ.உ.சி.பூங்காவில் மூன்று குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ளன. அவைகளை பாதுகாக்கும் வண்ணம் நிரந்தர காவலாளி அமைக்க வேண்டும். அதேபோல் வி.எஸ்.வி. காலனியில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டியை பாதுகாக்கும் படி அதற்கு உடனடியாக கம்பி வேலி அமைக்க வேண்டும். வார்டில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தார் சாலை மற்றும் சாக்கடை வசதிகள் வேண்டி கடந்த ஒரு வருடமாக வலியுறுத்தியும் பணி நடைபெறவில்லை. எனவே அப்பணிகளையும் விரைந்து செய்து தர வேண்டும் என்றார். 

    • அவினாசி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
    • 170 பேருக்கு சீருடை மற்றும் இனிப்பு வழங்கினார்

    அவினாசி :

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவினாசி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. அவினாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை தாங்கி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 170 பேருக்கு சீருடை மற்றும் இனிப்பு வழங்கினார். நல்லது நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகி ரவிக்குமார், துளிர்கள் அமைப்பு ஸ்ரீகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இவர்களுக்கான புத்தாடைகள் எச்.பி., பங்க் உரிமையாளர் ராஜ் மற்றும் அவரது துணைவியார் கீதா ராஜ் வழங்கினர். நிறைவாக சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி நன்றி கூறினார்.

    • அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
    • 1.50 டன் குப்பைகள் அவினாசியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் கொண்டு செல்லப்பட்டு உரங்களாக தயாரிக்கப்படுகிறது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் ஓட்டல், பேக்கரி, தள்ளுவண்டி கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இவைகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பெறப்படுகிறது.

    தினமும் 11.50 டன்குப்பைகள் அவினாசியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் கொண்டு செல்லப்பட்டு இயற்கை உரம், மண்புழு உரம் ஆகிய உரங்களாக தயாரிக்கப்படுகிறது. தரமான இந்த உர விற்பனையை அவினாசி பேரூராட்சி அலுவலகம் மற்றும் வளம் மீட்பு பூங்காவில் பேரூராட்சி உதவி இயக்குனர் (பொறுப்பு) கணேசன், அவினாசி பேரூராட்சி தலைவர் பொ. தனலட்சுமி, செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இது குறித்து பேரூராட்சி தலைவர் பொ. தனலட்சுமி கூறுகையில், வளம் மீட்பு பூங்கா, மற்றும் பேரூராட்சி அலுவலகத்தின் மூலம் உரவிற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் மாடி தோட்டம், வீட்டுத் தோட்டம் மற்றும் விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் மண்புழு உரம் 5 கிலோ 50 ரூபாய், இயற்கை உரம் 10 கிலோ 50 ரூபாய் என பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

    பேரூராட்சி அலுவலகம் மற்றும் வளம் மீட்பு பூங்காவில் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த இயற்கை உரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என்றார்.

    • வ.உ.சி.பூங்காவில் காலை மற்றும் மாலைவேளையில் பெண்கள் உள்ளிட்ட பலர் நடைபயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
    • வ.உ.சி.பூங்காவில் சிறுவர் சிறுமியர் அங்கு விளையாடி வருகின்றனர்.

     அவினாசி :

    அவினாசி இஸ்மாயில் வீதியில் வ.உ.சி.பூங்கா உள்ளது. இங்கு காலை மற்றும் மாலைவேளையில் பெண்கள் உள்ளிட்ட பலர் நடைபயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். மற்றும் சிறுவர் சிறுமியர் அங்கு விளையாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று வி.எஸ்.வி.காலனி பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நவின் உள்ளிட்ட இருவர் பூங்காவிற்குள் உட்கார்ந்து மது அருந்திகொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு பணியில் இருந்த பேரூராட்சி ஊழியர் சதீஸ்குமார்(30) என்பவர் இங்கு பெண்கள் உள்ளிட்டவர்கள் நடைபயிற்சி செய்துவரும் இடத்தில் மது அருந்தக்கூடாது வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு பனியன் கம்பெனி தொழிலாளர்கள் இருவரும் சதீஸ்குமாரை நீ யார் எங்களை வெளியேற சொல்வதற்கு என்று தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து சதீஸ்குமார் அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×