என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானி தேவி"

    • ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி சீனாவில் நடைபெறுகிறது.
    • இதில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்றார்.

    பீஜிங்:

    ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி சீனாவில் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. பின், 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை இத்தாலியில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவிற்காக தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். சிறப்பாக விளையாடி காலிறுதியில் உலக சாம்பியனான மிஸாகி யமுராவை வீழ்த்தினார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் 14-15 என்ற புள்ளிக்கணக்கில் பவானி தோல்வியடைந்தார். இதன்மூலம் பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்திய வீராங்கனை ஒருவர் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்று சாதனை படைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 35-வது தேசிய சீனியர் வாள் வீச்சுப் போட்டிகள் கேரளாவில் நடைபெற்று வருகிறது.
    • இந்த போட்டி கடந்த டிசம்பர் 31-ந் தேதி தொடங்கி வருகிற ஜனவரி 3-ந் தேதி வரை நடக்கிறது.

    35-வது தேசிய சீனியர் வாள் வீச்சுப் போட்டிகள் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி கடந்த டிசம்பர் 31-ந் தேதி தொடங்கி வருகிற ஜனவரி 3-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கிஷோ நிதி மற்றும் பெண்கள் பிரிவில் பவானி தேதி கலந்து கொண்டனர்.

    சிறப்பாக விளையாடிய கிஷோ நிதி, பவானி தேவி ஆகிய இருவரும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர். 15-5 புள்ளிக் கணக்கில் பவானி தேவியும், 15-11 புள்ளிக் கணக்கில் கிஷோ நிதியும் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    ×