என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரெண்ட் போல்ட்"

    • சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.
    • புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9-வது இடங்களில் இந்த இரண்டு அணிகளும் இடம் பெற்றுள்ளனர்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். இதனால் புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9-வது இடங்களில் இந்த இரண்டு அணிகளும் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இந்த இரு அணிகளில் இடம் பிடித்த வேகப்பந்து வீச்சாளர்களான டிரெண்ட் போல்ட் (மும்பை), பத்திரனா (சென்னை) ஆகியோர் பந்து வீச்சில் அரிதான ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

    அந்த வகையில் அவர்கள் இருவரும் 4 ஓவர்கள் பந்து வீசி 50-க்கும் கூடுதலான ரன்களை வாரி வழங்கியுள்ளனர். போல்ட் ஆர்சிபி அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 57 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

    அதேபோல சென்னை வீரர் பத்திரனா 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டும் எடுக்காமல் 52 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். இந்த இரு பந்துவீச்சாளர்களும் இப்படி ரன்களை வாரி வழங்குவது அரிதான சம்பவமாக பார்க்கப்படுகிறது. 

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • பவர் பிளேயில் மொத்தம் 3 விக்கெட்டுகளை போல்ட் வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். ராஜஸ்தான் அணி சார்பாக முதல் ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார். 4-வது பந்தில் இஷான் 1 ரன் எடுத்தார். ஓவரின் 5-வது பந்தையும் தனது முதல் பந்தையும் சந்தித்த ரோகித் டக் அவுட் ஆனார். அடுத்த வந்த நமனும் 0 ரன்னில் அவுட் ஆனார்.

    முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட் அவர் வீசிய 2-வது ஓவரில் ப்ரீவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஆக மொத்தம் பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை போல்ட் படைத்துள்ளார்.

    போல்ட் 80 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீத்தியுள்ளார். 2-வது இடத்தில் புவனேஸ்வர் குமார் உள்ளார். இவர் 116 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • மும்பை அணியில் 3 வீரர்கள் டக் அவுட் ஆகினர்.
    • ராஜஸ்தான் தரப்பில் சாஹல், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். ட்ரெண்ட் போல்ட்டின் அசத்தலான பந்து வீச்சால் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. ரோகித், நமன் டக் அவுட் ஆகினார். போல்ட் வீசிய 2-வது ஓவரில் ப்ராவிஸ் (0) முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

    இஷான் 1 ரன் எடுத்தார். ஓவரின் 5-வது பந்தையும் தனது முதல் பந்தையும் சந்தித்த ரோகித் டக் அவுட் ஆனார். அடுத்த வந்த நமனும் 0 ரன்னில் அவுட் ஆனார்.

    முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட், அவர் வீசிய 2-வது ஓவரில் ப்ரீவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு சிக்ஸ் 2 பவுண்டரிகளை விளாசிய இஷான் கிஷன் 16 ரன்களில் வெளியேறினார்.

    இதனால் மும்பை அணி 20 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து கேப்டன் பாண்ட்யாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

    சிறப்பாக ஆடிய பாண்ட்யா 34 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சாவ்லா 3 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய திலக் 32 ரன்னிலும் டிம் டேவிட் 17 ரன்களிலும் அவுட் ஆகினர்.

    இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சாஹல், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மும்பை தரப்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சாஹல், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி முதல் 3 விக்கெட்டுகளை உடனே இழந்தாலும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய பராக் பொறுப்புடன் ஆடிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அதிரடியாக விளையாடிய பராக் அரை சதம் விளாசினார்.

    இறுதியில் ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை போல்ட் 17 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
    • நடப்பு தொடரிலும் நியூசிலாந்து சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக உள்ளார்.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து, தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. எனவே அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியவில்லை.

    இதையடுத்து, நியூசிலாந்து அணி 3-வது ஆட்டத்தில் உகாண்டா அணியுடன் இன்று மோதியது. இதில் உகாண்டா அணியை 40 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து இலக்கை வெறும் 5.2 ஓவர்களிலேயே கடந்து வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சவுதி 3 விக்கெட்டும், போல்ட், சாண்ட்னர் மற்றும் ரவீந்திரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், போட்டி முடிந்ததும் பேட்டி அளித்த நியூசிலாந்து முன்னணி வீரரான டிரெண்ட் போல்ட், இதுவே தனது கடைசி டி20 உலகக் கோப்பை என அதிரடியாக அறிவித்தார்.

    எதிர் வரும் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டமே போல்ட்டின் கேரியரில் கடைசி டி20 உலகக் கோப்பை போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடியுள்ள போல்ட் 32 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். நடப்பு தொடரிலும் நியூசிலாந்து சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக உள்ளார்.

    • இந்த முடிவால் நியூசிலாந்து அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் என்று எனக்கு தெரியும்.
    • நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் புதன்கிழமை தனது சொந்த வேண்டுகோளின் பேரில் நியூசிலாந்து கிரிக்கெட்டுடனான (NZC)மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    33 வயதான வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இந்த முடிவு அவருக்கு கிடைத்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இறுதியாக அவரது கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டது. இதனால் இனி வரும் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது.

    "போல்ட் 317 டெஸ்ட் விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 169 விக்கெட்டுகளையும் மற்றும் டி20 போட்டியில் 62 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். சமீப காலமாக நியூசிலாந்து அணியுடன் குறைவான பங்கை கொண்டிருந்தார். போல்ட் விளையாட தயாராக இருக்கும் பட்சத்தில் அணியில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்" என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.

    இது குறித்து டிரெண்ட் போல்ட் கூறியதாவது:-

    இது எனக்கு மிகவும் கடினமான முடிவு. இந்த நிலைக்கு வருவதற்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவது ஒரு குழந்தை பருவ கனவாக இருந்தது. என்னால் முடிந்த அனைத்தையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

    கடந்த 12 ஆண்டுகளில் பல சாதனைகள் புரிந்தேன். இந்த முடிவு எனது மனைவி கெர்ட் மற்றும் எங்கள் மூன்று மகன்களை பற்றியது. குடும்பம் எப்போதுமே எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்து வருகிறது. அதற்கு முதலிடம் கொடுப்பதிலும், கிரிக்கெட்டுக்குப் பிறகு நம்மைத் தயார்படுத்திக் கொள்வதிலும் நான் வசதியாக உணர்கிறேன்.

    இந்த நடவடிக்கையானது நியூசிலாந்து அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் என்று எனக்கு தெரியும். எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு இன்னும் பெரிய ஆசை உள்ளது. மேலும் சர்வதேச அளவில் வழங்குவதற்கான திறமை என்னிடம் இருப்பதாக உணர்கிறேன். இருப்பினும், தேசிய ஒப்பந்தம் இல்லாதது எனது தேர்வுக்கான வாய்ப்புகளை பாதிக்கும் என்ற உண்மையை நான் மதிக்கிறேன். மேலும் இந்த அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான நேரம் சரியானது என்று நான் உணர்கிறேன்.

    இவ்வாறு போல்ட் கூறினார்.

    ×