என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்னி பேருந்து"

    • ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பு என புகார்.
    • பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 9 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைத்ததால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தென்மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

    இந்நிலையில் விடுமுறை முடிந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் நேற்று முதல் சென்னை உள்ளிட்ட தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பஸ்கள் மற்றும் ரெயில்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. ரெயில்களில் காத்திருப்பு பட்டியலில் ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் அரசு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் முழுவதுமாக நிரம்பிவிட்டதால் பொதுமக்கள் தனியார் பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் டிக்கெட் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, 1800 425 6151, 044- 24749002, 044-26280445, 044-26281611 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    • விளாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனிமொழி.
    • ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை மேலும் நிரூபிக்கும் வகையில் உள்ளார் கனிமொழி கதிர்வேல்.

    பொள்ளாச்சி:

    ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்பதற்கு நிறைய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. படிப்பு, வேலை, தொழில் தன்னம்பிக்கை, குடும்பம் என எல்லாவற்றிலும் ஆண்களை விட பெண்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றால் அது மிகையாகாது. இதனால் தான் பெண்களின் முக்கியத்துவத்தை போற்றவும், அவர்களின் பிரதிநிதித்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாகவே மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

    தாயாக, மனைவியாக, மகளாக என ஒரு சமூகத்தில் நீக்கமற நிறைந்திருப்பது பெண்கள்தான். ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றாலும் சரி.. ஒரு குடும்பத்தில் தலைமுறையே உயர வேண்டும் என்றாலும் பெண்களின் கல்வி அவசியமானது என்று மூத்தோர்கள் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.

    அந்த வகையில், ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை மேலும் நிரூபிக்கும் வகையில் உள்ளார் கனிமொழி கதிர்வேல்.

    விளாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனிமொழி. இவர் உடுமலையைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும், இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

    MA B.Ed படிப்பை முடித்த ஆசிரியராக பணியாற்றிய கனிமொழி தற்போது இரவு நேரங்களில் இயங்கும் தனியார் ஆம்னி பேருந்தை, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இயக்கி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.

    இவர் அழகன் டிராவல்சில் பொள்ளாச்சி- சென்னைக்கு இரவு நேரத்தில் ஆம்னி பேருந்தை இயக்கி வருகிறார். பல சிரமங்களை சந்தித்தாலும் தினந்தோறும் 620 கி.மீ. பேருந்துடன் பயணிப்பதாக தெரிவித்துள்ளார். 

    • ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது
    • அரசு பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் என அமைச்சர் பேட்டி

    சென்னை:

    தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஆம்னி பேருந்துகளின் அனைத்து சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன்படி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளை சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் போக்குவரத்து துறை செயலாளர் கோபால், ஆணையர் நிர்மல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பண்டிகை காலங்களில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    பின்னா செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இரண்டொரு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர் என்றார். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், அரசு பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் என்றும், ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிக்கவில்லை என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.
    • சென்னையில் இருந்து நெல்லைக்கான டிக்கெட் 3500 வரை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார்

    சென்னை:

    இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி திங்கட்கிழமையும் விடுமுறை என்பதால் வெளியூரில் இருப்பவர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். தொடர் விடுமுறைகள் கிடைப்பதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்து மற்றும் ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. காத்திருப்போர் பட்டியலும் நீண்டு காணப்படுகிறது.

    இதையடுத்து ஆம்னி பஸ் மூலம் பயணம் மேற்கொள்ள பலர் முன்பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பஸ் கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக சென்னையிலிருந்து திருச்சிக்கு அதிகபட்சம் 800 வரை வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 2,300 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கோவைக்கு வழக்கமாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 3000 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து மதுரை மற்றும் நெல்லைக்கு வழக்கமாக 1400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3500 வரை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×