என் மலர்
நீங்கள் தேடியது "பழையகோட்டை சந்தை"
- புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
- 50 மாடுகள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
காங்கயம்:
நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் விற்பனைக்காக 87 மாடுகள் கொண்டு வரப்பட்டன. இதில் 50 மாடுகள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
- 108 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.
காங்கேயம் :
காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையானது திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூா்-பழையகோ ட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 108 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில், 55 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
- மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
- 107 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
காங்கயம் :
திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 107 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் 74 மாடுகள் மொத்தம் ரூ.30 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.73 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலைப்பசு விற்பனையானது.