என் மலர்
நீங்கள் தேடியது "இர்பான் பதான்"
- கோலி- ஜெய்ஸ்வால் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
- 82 ரன்கள் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
மெல்போர்ன்:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
இதில் 51 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ஜெய்ஸ்வால் - விராட் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 82 ரன்கள் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
இந்நிலையில் இந்த ரன் அவுட்டுக்கு விராட் கோலிதான் காரணம் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்தார். அதை மற்றொரு இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மஞ்ரேக்கர் - இர்பான் பதான் இடையேயான உரையாடல் பின்வருமாறு:-
மஞ்ரேக்கர்:
இந்த தருணத்தை நாம் விராட் கோலியின் பக்கத்திலிருந்து கொஞ்சம் பார்க்க வேண்டும். அங்கே பந்தை மட்டும் பார்த்து ரன் இல்லை என்று விராட் கோலி சொன்னது பள்ளி வயது சிறுவனை போல் செய்த தவறாகும். பொதுவாக ரன்கள் எடுப்பதற்கு எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன்தான் அழைப்பை கொடுக்க வேண்டும். ஆனால் விராட் கோலி வேண்டாம் என்று சொன்னதால் ஜெய்ஸ்வாலுக்கு அங்கே வாய்ப்பு இல்லை.
பதான்:
கிரிக்கெட்டில் பந்து பாய்ண்ட் திசைக்கு அடிக்கப்பட்டால் எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன்தான் ரன் எடுப்பதற்கான அழைப்பை கொடுக்க வேண்டும் என்ற இன்னொரு உண்மை. அதை நிராகரிக்க ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்மேனுக்கு முழு சுதந்திரம் உள்ளது. சில நேரங்களில் வேண்டாம் என்றும் சொல்லலாம்.
மஞ்ரேக்கர்:
ஆனால் இர்பான் நீங்கள் இதைக் கேட்க விரும்பவில்லையெனில் வேறு எதுவுமில்லை. இர்பான் பதான் என்ற பெயரில் ரன்கள் எடுக்க எப்படி ஓடுவது என்ற புதிய பயிற்சி கையேடு வெளியிடப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர்களுக்கிடையேயான வாக்குவாதம் அமைந்தது.
- ரோகித் கடந்த 15 இன்னிங்ஸ்கள் முறையே 6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10, 3, 9 என வெளியேறினார்.
- 15 போட்டிகளில் மொத்தமாக 164 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. அவர் கடந்த 15 இன்னிங்ஸ்கள் முறையே 6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10, 3, 9 என வெளியேறினார். மொத்தமாக 164 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். சராசரி 10.93 ஆகும். பார்டர் கவாஸ்கர் டிராபில் ரோகித் சர்மாவின் அதிகபட்ச ரன்கள் 10 ரன்கள் ஆகும்.
இந்நிலையில் ரோகித் கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் டெஸ்ட் அணியில் நீடித்திருக்க மாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா தற்போது ரன்களை எடுப்பதில் தொடர்ந்து சிரமப்படுகிறார் என்ற யதார்த்ததை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவர் கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் இந்திய அணியில் நீடித்திருக்கவே மாட்டார்.
இவ்வாறு இர்பான் கூறினார்.
- சச்சின் பலமுறை சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
- சுனில் கவாஸ்கரிடம் விராட் கோலி ஆலோசனை கேட்டால் நிச்சயமாக அவர் நல்ல தீர்வை கொடுப்பார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த தோல்விக்கு இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் முக்கிய காரணம் என விமர்சனங்கள் என தொடங்கியுள்ளன.
குறிப்பாக மூத்த வீரரான விராட் கோலியின் பேட்டிங் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அவர் இந்த டெஸ்ட் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் மொத்தமே 190 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரது சராசரி 24 ரன்களுக்கு குறைவாக உள்ளது.
இந்நிலையில் விராட் கோலியின் ஆட்டம் குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் விமர்சகருமான இர்பான் பதான்
இந்தியாவுக்கு சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் தேவையில்லை. அவர்களுக்கு அணி கலாச்சாரம் தேவை. கடைசியாக விராட் கோலி உள்ளூர் போட்டிகளில் எப்போது விளையாடினார் என்று உங்களால் சொல்ல முடியுமா? அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் பலமுறை சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். கோலியை குறைத்து மதிப்பிடுவதற்காக நான் இதனை சொல்லவில்லை. ஒரே மாதிரியாக அவர் அவுட் ஆகி வெளியேறுகிறார் என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். சுனில் கவாஸ்கரிடம் விராட் கோலி ஆலோசனை கேட்டால் நிச்சயமாக அவர் நல்ல தீர்வை கொடுப்பார்.
தவறிலிருந்து பாடம் பெற்று அதனை திருத்திக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் விராட் கோலி அதில் ஆர்வம் காட்டவில்லை.
என்று பதான் கூறியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி 9 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ளார். அவற்றில் 8 முறை அவர் ஆட்டம் இழந்தார். அவை அனைத்தும் ஒரே மாதிரியாக நடந்தவை என்பதால் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
- கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஷகீன் அப்ரிடியின் பந்து வீச்சில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானார்கள்
- இப்போது இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள் என்று வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்தார்.
மும்பை:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.
6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரர் ஷகீன்ஷா அப்ரிடி காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டது. வலது கால் முட்டி தசை நாரில் காயமடைந்த அவர் ஆசிய கோப்பை போட்டி தொடங்குவதற்குள் குணம் அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் குணமடையாததால் போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதற்கிடையே ஷகீன்ஷா அப்ரிடி விலகல், இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்குத்தான் பெரும் நிம்மதியாக இருக்கும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.
கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஷகீன்ஷா அப்ரிடி பந்து வீச்சில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள் என்று வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில், வக்கார் யூனிஸ் கருத்துக்கு இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக இர்பான் பதான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும் போது, ஆசிய கோப்பை போட்டித்தொடரில் இந்திய அணியில் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் இல்லாதது மற்ற அணிகளுக்கு நிம்மதியை தரும் என்று கூறியுள்ளார்.
மேலும் இர்பான் பதான் கூறும்போது, ஆசிய கோப்பை போட்டி மிகவும் முக்கியமானது. ஆனால் நான் 20 ஓவர் உலக கோப்பையை எதிர்நோக்கும் போது, விராட் கோலி ஆசிய கோப்பையில் சிறந்த பார்முக்கு திரும்ப வேண்டும்.
ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் கோலி சிறப்பாக விளையாடுபவர். எனவே இந்திய அணிக்கு சிறந்த பார்மில் உள்ள விராட்கோலி தேவை. இது அவருக்கும், இந்திய அணிக்கும் முக்கியமானது, என்றார்.