என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்கற்கள்"

    • ராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது
    • நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்களுக்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன.

    விண்கற்கள் பூமியைத் தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். சமீபத்தில் அமரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய ஆய்வில், இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இதிலிருந்து  தற்காத்துக்கொள்ள போதுமான பாதுகாப்பை இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்றும் பீதியைக் கிளப்பியிருந்தது.

    இந்நிலையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட உலக விண்கல் தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

     

    அந்த நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலில் அவர் பேசுகையில்,அபோபிஸ் [Apophis] என்ற ராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2036 இல் மீண்டும அது பூமியைத் தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமிக்கும் மனித குலத்துக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். வரலாற்றில் பலமுறை இதுபோன்ற சமபவங்கள் நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்று எந்த உத்தரவாதமும் இல்லை

     

    பூமித்த தாய்க்கு எதுவும் ஆகக்கூடாது என்றே நாம் விரும்புகிறோம். உலகத்தில் மனித குளம் என்றென்றும் வாழவேண்டும் என்பதே நமது விருப்பம் ஆனால் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்களுக்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. நாம் தயாராக இருக்க வேண்டும். நடக்க உள்ளதை எதிர்க்க நாம் மாற்று வழிகளை யோசித்தாக வேண்டும். பூமிக்கு அருகில் வரும் ஆபத்தை நம்மால் சில சமயங்களில் மட்டுமே கணிக்க முடிகிறது. ஆபத்துகளை கண்டறிய நாம்  இன்னும் தொழிநுட்பத்தை முன்னேற்றியாக வேண்டும். விண் கற்களை குறித்த புரிதலை நாம் மேம்படுத்தியாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    • 2020 டபிள்யூ.ஜி என அழைக்கப்டும் இந்த விண்கல் 500 அடி விட்டம் கொண்டது.
    • விண்கற்கள் செல்லும் பாதையில் குறுக்கே எதுவும் இல்லை.

    பூமியை 3 பெரிய விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக அமெரிக்க விண்வெளி கழகமான நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    பூமியை 3 விண்கற்கள் மிக நெருக்கமாக கடந்து செல்ல இருக்கிறது என்பதை நாசா கண்டுபிடித்திருக்கிறது. அதன்படி முதல் விண்கல் பூமியை கடந்து செல்கிறது. 2024 டிபி2 என்று பெயிரிடப்பட்ட இந்த விண்கல் 110 அடி விட்டம் இருக்கும். 7.31 லட்சம் கி.மீ தொலைவில் இது பூமியை கடந்து செல்கிறது. இதன் பாதை இப்போது வரை சீராகத்தான் இருக்கிறது. ஒருவேளை கடைசி நேரத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு இதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம். 2-வது விண்கல் 2007 யூடி3.பூமியிலிருந்து 42 லட்சம் கி.மீ தொலைவில் இது கடந்து செல்ல இருப்பதால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் 3-வது விண்கல்தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    2020 டபிள்யூ.ஜி என அழைக்கப்டும் இந்த விண்கல் 500 அடி விட்டம் கொண்டது. பூமியிலிருந்து சுமார் 30 லட்சம் கி.மீ தொலைவில் மணிக்கு 33,947 கி.மீ வேகத்தில் இது செல்கிறது. இதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டு பூமியை மோதினால், அது விழுந்த இடத்தில் 2 கி.மீ ஆழத்திற்கு 4 கி.மீ அகலத்திற்கு பெரும் பள்ளம் உருவாகும். மேலும் 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும். விண்கல் விழுந்த இடத்திலிருந்து 500 முதல்1000 கி.மீ சுற்றளவுக்கு எந்த கட்டிமும் இருக்காது. எல்லாம் தரைமட்டமாகிவிடும். தவிர, எரிமலை வெடிப்பு, சுனாமி ஏற்படும்.

    ஆனால் இது எதுவும் தற்போது நடக்காது என்று நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் இந்த விண்கற்கள் செல்லும் பாதையில் குறுக்கே எதுவும் இல்லை. இதனால் பூமி பக்கம் திரும்பும் இல்லை என்றனர்.

    • உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக 6 பேர் கொண்ட குழுவினர் சர்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டனர்.
    • நடப்பாண்டு செப்டம்பர் மாதம் விண்கற்கள் கண்டறியும் ஆய்வு நடத்தப்படுகிறது.

    உடுமலை :

    சர்வதேச விண்கற்கள் கண்டறியும் நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப தன்னார்வ அமைப்புகள், அரசுத்துறைகளுடன் இணைந்து விண்வெளியில் உள்ள விண்கற்களை கண்டறிய ஆய்வு நடத்துகிறது.

    மாதம்தோறும் நடத்தப்படும் இந்த ஆய்வில், ஆசிரியர்கள், அறிவியல் தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.அதன்படி கடந்தாண்டு, இரு முறை உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக 6 பேர் கொண்ட குழுவினர் சர்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டனர். இதேபோல நடப்பாண்டு செப்டம்பர் மாதம் விண்கற்கள் கண்டறியும் ஆய்வு நடத்தப்படுகிறது.

    லேப்டாப், கம்ப்யூட்டர் உதவியுடன் ஆய்வில் பங்கேற்கலாம்.தகவல் அறிய கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை 8778201926 என்ற வாட்ஸ்ஆப் எண், galilioscienceclub@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    ×