என் மலர்
நீங்கள் தேடியது "பஞ்சாப் கிங்ஸ்"
- பிட்ச் எளிதாக விளையாட கூடிய அளவில் இல்லை.
- இது நிச்சயம் இந்த சீசனில் மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 111 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணி 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. பரபரப்பாக சென்ற போட்டியில் அடுத்த 33 ரன்கள் எடுப்பதற்குள் மீதி 7 விக்கெட்டுகளையுமே கொல்கத்தா அணி இழந்தது. இதனால் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் எனக்கு 50 வயதாகிறது என்றும் இதுபோன்ற பரபரப்பான போட்டியை தவிர்க்க வேண்டும் என பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எனது இதய துடிப்பு அதிகமாகவே உள்ளது. எனக்கு 50 வயது ஆகிறது. இது போன்ற பரபரப்பான ஆட்டத்தை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற குறைந்த இலக்கு கடினமானதாக இருக்கும் என வீரர்களிடம் 2-வது இன்னிங்சிஸ் தொடங்கும் முன்பே கூறினேன்.
பிட்ச் எளிதாக விளையாட கூடிய அளவில் இல்லை என்பதை போட்டியின் மூலம் தெரிந்திருக்கும். சாஹல் அபாரமாக பந்து வீசி வருகிறார். சாஹலுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு இருந்தது. போட்டிக்கு முன்பு தனியாக அவரிடம் உன்னாள் விளையாட முடியுமா என கேட்டேன். என்னால் முடியும். என்னை விளையாட விடுங்கள் என கூறினார்.
எங்களுடைய பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. வீரர்களின் சாட் தேர்வு மோசமாக அமைந்திருக்கிறது. எங்கள் வீரர்கள் களத்தில் நல்ல எனர்ஜியுடன் செயல்பட்டார்கள்.
நாங்கள் இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தாலும், அது விறுவிறுப்பான போட்டியாக தான் அமைந்திருக்கும். இது நிச்சயம் இந்த சீசனில் மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது. எங்கள் அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள். நான் ஐபிஎல் போட்டிகளில் பல போட்டிகளுக்கு பயிற்சியாளராக இருந்திருக்கிறேன். ஆனால் இதுதான் சிறந்த வெற்றியாக நான் கருதுகிறேன்.
என்று பாண்டிங் கூறியுள்ளார்.
- ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது.
- இந்த போட்டியில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 112 ரன் இலக்கை கூட தொட முடியாமல் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 95 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.
இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் இதுதான் ஒரு அணிக்கு குறைந்த ஸ்கோரை இலக்காக வைத்து கிடைத்த வெற்றியாகும்.

இதற்கு முன்பு சென்னை அணி 2009-ம் ஆண்டில் பஞ்சாப்புக்கு எதிராக 117 ரன்னை இலக்காக நிர்ணயித்து அதில் 24 ரன் வித்தியாசத்தில் வென்றதே, குறைந்த இலக்கில் கிடைத்த வெற்றியாகும். அந்த 16 ஆண்டுகால சாதனையை பஞ்சாப் முறியடித்தது.
- ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின.
- பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசண்டிகர்:
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 111 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா 95 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யசுவேந்திர சாஹல். அவர் 4 ஓவர் வீசி 28 ரன் கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார்.
ஐ.பி.எல். வரலாற்றில் சாஹல் 8-வது முறையாக 4 விக்கெட்டை தொட்டுள்ளார். இதன் மூலம் அவர் சுனில் நரைன் சாதனையை சமன் செய்தார். சுனில் நரைன் 8 தடவை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.
அதற்கு அடுத்தப்படியாக மலிங்கா 7 தடவையும், ரபடா 6 முறையும் 4 விக்கெட் எடுத்துள்ளார்கள்.
இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் 2 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவர் என்ற சாதனையை புரிந்தார். அவர் பஞ்சாப்புக்கு எதிராக 36 விக்கெட் சாய்த்தார். இதற்கு முன்பு உமேஷ் யாதவ் 35 விக்கெட் (பஞ்சாப்புக்கு எதிராக) வீழ்த்தி இருந்தார்.
- 112 ரன்களை அடிக்கமுடியாமல் 95 ரன்களுக்கு சுருண்டு கொல்கத்தா அணி தோல்வி
- கடந்தாண்டு கொல்கத்தா நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி சேஸ் செய்து சாதனை படைத்திருந்தது
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் மிக குறைந்த ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.
கடந்தாண்டு இதே கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஸ்கோரை சேஸ் செய்து பஞ்சாப் கிங்ஸ் அணி சாதனை படைத்திருந்தது. கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இமாலய இலக்கை 18.4 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி சேஸ் செய்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 112 ரன்களை அடிக்கமுடியாமல் 95 ரன்களுக்கு சுருண்டு கொல்கத்தா அணி தோல்வி
- 16 ஆண்டுகளுக்கு சி.எஸ்.கே. அணியின் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் முறியடித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் மிக குறைந்த ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 116 ரன்கள் அடித்து வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு சி.எஸ்.கே. அணியின் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் முறியடித்துள்ளது.
- டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
- கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 37 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் டி காக் 2 ரன்களும், நரைன் 5 ரன்களும், ரஹானே 17 ரன்களும், ரகுவன்ஷி 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
- பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார்.
- கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதிவருகின்றனர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா 22, ஷ்ரேயாஸ் 0 என ஒரே ஓவரில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் 2-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.
- கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி 3-ல் தோல்வியும் அடைந்துள்ளது.
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 18-வது ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் (குஜராத், லக்னோ, சென்னைக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (ராஜஸ்தான், ஐதராபாத்துக்கு எதிராக) சந்தித்துள்ளது.
கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி (ராஜஸ்தான், ஐதராபாத், சென்னைக்கு எதிராக), 3-ல் தோல்வி (பெங்களூரு, மும்பை, லக்னோவுக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் இருக்கிறது.
ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 21-ல் கொல்கத்தாவும், 12-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெர்குசனுக்கு காயம் ஏற்பட்டது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் நான்கு ஆட்டங்களில் விளையாடிய பெர்குசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் வலிமையான அணிகளில் ஒன்றாக திகழும் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று 2-ல் தோல்வி அடைந்து 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 2 பந்துகளை மட்டுமே வீசிய லாக்கி பெர்குசன், தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதான் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நான்கு ஆட்டங்களில் விளையாடிய பெர்குசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு மோதி இருக்கின்றன.
- 21-ல் கொல்கத்தாவும், 12-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்றிரவு நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.
பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் (குஜராத், லக்னோ, சென்னைக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (ராஜஸ்தான், ஐதராபாத்துக்கு எதிராக) சந்தித்துள்ளது. முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சபாப் 245 ரன்கள் குவித்த போதிலும் பந்து வீச்சு கைகொடுக்காததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 8 பவுலர்களை பயன்படுத்தியும் ஐதராபாத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இப்போது சொந்த ஊரில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் தயாராகியுள்ளனர். பஞ்சாப் அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (3 அரைசதத்துடன் 250 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (194 ரன்), பிரப்சிம்ரன் சிங், வதேரா பேட்டிங்கில் மிரட்டுகிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், மார்கோ யான்சென் வலு சேர்க்கிறார்கள். ஆனால் ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் இதுவரை ஜொலிக்கவில்லை. அவர்கள் பார்முக்கு வந்தால், பஞ்சாப் மேலும் வலிமையடையும்.
ஓராண்டுக்கு முன்பு கொல்கத்தாவுக்கு ஐ.பி.எல். கோப்பையை வென்றுத்தந்து சாதனை படைத்த ஸ்ரேயாஸ் அய்யர், எதிர்பாராத திருப்பமாக அந்த அணியில் தக்க வைக்கப்படவில்லை. அதன் பிறகு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர், இப்போது தனது பழைய அணியை நேக்கு நேர் சந்திக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தின் போது காயத்தால் பாதியில் வெளியேறிய பஞ்சாப்பின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் (4 ஆட்டத்தில் 5 விக்கெட்) காயத்தன்மை தீவிரமாக இருப்பதால் அனேகமாக எஞ்சிய போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்று அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார். அவர் விலகுவது, பஞ்சாப்புக்கு சற்று பின்னடைவு தான்.
கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி (ராஜஸ்தான், ஐதராபாத், சென்னைக்கு எதிராக), 3-ல் தோல்வி (பெங்களூரு, மும்பை, லக்னோவுக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 103 ரன்னில் சுருட்டிய கொல்கத்தா அணி அந்த இலக்கை 10.1 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. அதனால் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள். பேட்டிங்கில் கேப்டன் ரஹானே (204 ரன்), குயிடான் டி காக், சுனில் நரின், வெங்கடேஷ் அய்யரும், பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஆரோரா, ஹர்ஷித் ராணாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
மொத்தத்தில் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இந்த மைதானத்தில் நடப்பு சீசனில் நடந்துள்ள 2 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணி 200 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி பெற்றுள்ளன. அதனால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 21-ல் கொல்கத்தாவும், 12-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷசாங் சிங், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் அல்லது ஆரோன் ஹார்டி, மார்கோ யான்சென், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப்சிங், யாஷ் தாக்குர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயின்டான் டி காக், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப்சிங், மொயீன் அலி, ஹர்ஷித் ராணா, வைபவ் ஆரோரா, வருண் சக்ரவர்த்தி.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- நான் சரியாக விளையாடாத போதும் அணி நிர்வாகமும், கேப்டன் கம்மின்சும் என் மீது நம்பிக்கை வைத்தனர்.
- ஒட்டுமொத்த அணியும் என்னுடைய பெற்றோருக்காக காத்திருந்தது. அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற அபிஷேக் சர்மா கூறியாதவது:-
நான் சரியாக விளையாடாத போதும் அணி நிர்வாகமும், கேப்டன் கம்மின்சும் என் மீது நம்பிக்கை வைத்தனர். எனக்கும், டிராவிஸ் ஹெட்டுக்கும் இந்த நாள் மிகவும் சிறப்பானது. ஆடுகளத்தில் இருந்த பவுன்ஸ் காரணமாக பின்புறம் சில ஷாட்டுகளை விளையாடினேன். ஒட்டுமொத்த அணியும் என்னுடைய பெற்றோருக்காக காத்திருந்தது. அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

அணிக்குள் அதிகம் ஆலோசனையில் ஈடுபடவில்லை. எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இந்த போட்டி எனக்கு மிகவும் சிறப்பானது. தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தேன். இளம் வீரராக அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது மிகவும் கடிமனாக இருந்தது. யுவராஜ் சிங்குக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். அவருடன் நான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறேன். அவரது அறிவுரைகள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. சூர்யகுமார் யாதவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடனும் தொடர்ந்து பேசி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
- அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார்
நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 247 ரன்கள் எடுத்து வென்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார். அத்துடன் அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.
போட்டி முடிந்த பின்பு அபிஷேக் சர்மாவின் கொண்டாட்டத்தை பஞ்சாப் அணியின் இணை நிறுவனர் ப்ரீத்தி ஜிந்தா Recreate செய்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.