என் மலர்
நீங்கள் தேடியது "ஷாஹீன் அப்ரிடி"
- 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தால் நம்மால் சேஸிங் செய்ய முடியவில்லையே என நிருபர் கேள்வி.
- பாபர் அசாம், ரிஸ்வான் பதில் கூறாமல் அமைதியாக இருந்த நிலையில், ஷாஹீன் அப்ரிடி பதில் அளித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சொந்த நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோசமாக விளையாடியது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்து சென்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-4 என இழந்தது. ஒருநாள் தொடரை 0-3 என இழந்தது.
இந்த நிலையில் ஆறு அணிகள் விளையாடும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நேற்று தொடங்கியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஆறு அணி கேப்டன்களும் ஒன்றாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது டி20 கிரக்கெட்டில் பாகிஸ்தான் தேசிய அணிக்கு 200 ரன்களை சேஸிங் செய்யக்கூடிய திறன் இல்லையே?. ஒட்டுமொத்த நாட்டின் மனஉறுதியை சீர்குலைத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 200 ரன்களுக்கு மேலான இலக்கை நோக்கி செல்லும்போது நமக்கு எங்கே குறைபாடு உள்ளது. மனநிலை அல்லது நோக்கத்தில் குறைபாடு உள்ளதா? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பாபர் அசாம் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார். ரிஸ்வானை பார்த்து நீங்கள் பதில் சொல்லுங்கள் என சைகை காட்டினார். அவரும் மவுனம் காத்தார். இதனால் இக்கட்டான நிலை ஏற்பட்டது.
உடனே, வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி "இது நம்முடைய அணி, இது பாகிஸ்தான் அணி. நீங்கள் 200 ரன் சேஸிங் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையிலேயே, இது பேட்ஸ்மேன்களை மட்டும் பற்றியது கிடையாது. பந்து வீச்சாளர்களின் பொறுப்பும் உள்ளது. அவர்கள் 200 ரன்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது.
ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு நன்றாகத்தான் இருக்கிறது. 200 அல்லது அதற்கு மேல் விட்டுக்கொடுத்தாலும், அதை சேஸிங் செய்ய நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். நாங்க ஒரு அணி. நாங்க ஒரு குடும்பம். சமீப காலமாக நம்மோட ஆட்டம் நன்றாக இல்லை என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட்டை மீண்டும் உச்சத்துக்கு கொண்டு வருவது நம்ம வேலை" என்றார்.
- ஹரிஸ் ராஃப் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
- ஷாஹீன் ஷா அப்ரிடி ஆறு இடங்கள் சரிந்து தரவரிசையில் 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தானுக்காக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஹரிஸ் ராஃப் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மறுபுறம், தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஷாஹீன் ஷா அப்ரிடி ஆறு இடங்கள் சரிந்து தரவரிசையில் 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நியூசிலாந்தின் ஜேக்கப் டபி டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் 23 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்தார்.
பேட்டர் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் சீபர்ட் 20 இடங்கள் முன்னேறி 13-வது இடத்திற்கும் மற்றொரு நியூசிலாந்து வீரர் ஆலன் 8 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் பின்தங்கி 8-வது இடத்தில் உள்ளார்.
நமீபியாவின் கெர்ஹார்ட் எராஸ்மஸ் ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டி20 பேட்டர் தரவரிசையில் முதல் இடத்தில் டிராவிஸ் ஹெட் உள்ளார். டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2-வது இடத்தில் அபிஷேக் சர்மாவும் 4,5-வது இடங்கள் முறையே திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் தொடர்கின்றனர்.
டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் அகேல் ஹோசின் உள்ளார். 2-வது இடத்தில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தியும் 6-வது மற்றும் 9-வது இடங்கள் முறையே ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.
- பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது
- அப்ரிடி முதல் ஓவரை டிம் சீஃபர்ட் வைத்து மெய்டனாக வீசினார்.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இரு அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி தனது 2-வது ஓவரையும் அணியின் 3-வது ஓவரையும் வீசினார். அந்த ஓவரில் நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட் 4 சிக்சர்களை பறக்க விட்டார். மொத்தமாக அந்த ஓவரில் 26 ரன்கள் எடுக்கப்பட்டது.
முதல் ஓவரை டிம் சீஃபர்ட்டை வைத்து தான் அப்ரிடி மெய்டன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பாகிஸ்தான் இந்த ஆண்டு சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது,
- பாபர் அசாம் 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 3 அரை சதம் உட்பட 348 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. ஆட்டங்களில் ஆரம்பம் முதல் இறுதி வரை இங்கிலாந்து முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. ராவல்பிண்டி மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முல்தானில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்திலும், கராச்சியில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் இந்த ஆண்டு சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இது அவர்களின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை பாதித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 3 அரை சதம் உட்பட 348 ரன்கள் எடுத்தார். ஆனால் ஏமாற்றமளிக்கும் முடிவுக்குப் பிறகு, அவரது கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.
பாபரின் கேப்டன்சிக்காக பலர் அவரை விமர்சித்து வரும் நிலையில், அவரது அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, அவரது கேப்டனுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்.
கொஞ்சம் மரியாதை காட்டுங்கள் என்று ரசிகர்களை வலியுறுத்திய ஷஹீன் டுவிட்டரில் ஒரு பெரிய பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், பாபர் அசாம் எனது பெருமை, பாகிஸ்தானின் பெருமை என்று பாராட்டிய அவர், ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தொடருமாறு கேட்டுக் கொண்டதுடன், கதை இன்னும் முடிவடையவில்லை என்றும் குறிப்பட்டிருந்தார்.
பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் தோல்வியைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தற்போது முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்று வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப்பின் பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
- அணியின் எதிர்காலம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆலோசனை நடத்தவில்லை என ஷாஹீன் அப்ரிடி அதிருப்தி.
பாகிஸ்தான் அணியின் டி20 அணி கேப்டனாக இருப்பவர் ஷாஹீன் அப்ரிடி. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் நியூசிலாந்து அணிக்கெதிராக பாகிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் பாகிஸ்தான் 1-4 எனத் தோல்வியடைந்தது.
விரைவில டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பை, டி20 அணியின் எதிர்கால திட்டம், பயிற்சியாளர் நியமனம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி ஷாஹீன் அப்ரிடியிடம் கலந்து ஆலோசனை நடத்தவில்லை. இது ஷாஹீன் அப்ரிடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பாபர் அசாம் உடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஷாஹீன் அப்ரிடி கலந்து கொள்ளவில்லை. கேப்டனாக தொடரை வைக்க விருப்பம் இல்லை என்றால் தன்னை நீக்கி விட்டு, அதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என ஷாஹீன் அப்ரிடி எதிர்பார்க்கிறார்.
மேலும் அவருக்கு நெருக்கமான சிலர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தொடர்பான குழப்பத்தில் இருந்து விலகி இருக்க வலியுறுத்தியுள்ளனர். இதனால் ஷாஹீன் அப்ரிடி கேப்டன் பதவியை ராஜினாமா செய்யலாம் எனத் தெரிகிறது.
தற்போது ஷாஹீன் அப்ரிடி காகுலில் உள்ள பயிற்சி முகாமில் உள்ளார். இவர் சீனியர் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சதாப் கான், பஹர் சமான் ஆகியோரிடம் கேப்டன் பதவி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் தனது முடிவை அறிவிக்கலாம்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் அணியை இரண்டு முறை சாம்பியன் பட்டம் வாங்கும் அளவிற்கு வழிநடத்தி சென்றார். ஆனால், சமீபத்தில் முடிவடைந்த தொடரில் கடைசி இடம் பிடித்தது.
- விரைவில டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது
- டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் நியூசிலாந்து அணிக்கெதிராக பாகிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் பாகிஸ்தான் 1-4 எனத் தோல்வியடைந்தது.
விரைவில டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பை, டி20 அணியின் எதிர்கால திட்டம், பயிற்சியாளர் நியமனம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி ஷாஹீன் அப்ரிடியிடம் கலந்து ஆலோசனை நடத்தவில்லை. இது ஷாஹீன் அப்ரிடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பாபர் அசாம் உடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஷாஹீன் அப்ரிடி கலந்து கொள்ளவில்லை. கேப்டனாக தொடரை வைக்க விருப்பம் இல்லை என்றால் தன்னை நீக்கி விட்டு, அதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என ஷாஹீன் அப்ரிடி எதிர்பார்க்கிறார்.
மேலும் அவருக்கு நெருக்கமான சிலர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தொடர்பான குழப்பத்தில் இருந்து விலகி இருக்க வலியுறுத்தியுள்ளனர். இதனால் ஷாஹீன் அப்ரிடி கேப்டன் பதவியை ராஜினாமா செய்யலாம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது. ஆதலால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் இந்தியா, அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.
- ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்
- பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
அண்மையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ஷாஹீன் அப்ரிடி ராஜினாமா செய்தார். அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.
2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது. ஆதலால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 2011ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி க்ரிஸ்டன் தற்போது பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் மஹ்மூத், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மே 22 முதல் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு மேற்கொள்ளும் டி20 சுற்றுப்பயணத்தில் இருந்து கிர்ஸ்டன் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் இந்தியா, அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.
- பாகிஸ்தானின் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அரை சதமடித்தனர்.
- 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
டப்ளின்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனில் இருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்ரும் 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் அதிரடியாக ஆடி 73 ரன்கள் குவித்தார்.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. பாபர் அசாம் (75 ரன்), முகமது ரிஸ்வான் (56 ரன்) அரைசதம் அடித்து அசத்தினர்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.
- வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
- இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த போட்டி முடிவடைந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூதை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஷாஹீன் அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி கூறுகையில், ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் சில குறை இருப்பதால் அதனை நிவர்த்தி செய்வதற்காக பயிற்சி செய்யப் போகிறார். மேலும், அவருக்கு தற்போது குழந்தை பிறந்திருப்பதால் அவர் குழந்தையுடனும் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
முதல் டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கிய பாகிஸ்தான், 2-வது டெஸ்டில் அப்ரார் அகமத் என்ற லெக் ஸ்பின்னரையும், மிர் ஹம்ஸா என்ற வேகப்பந்துவீச்சாளரையும் சேர்த்துள்ளது.
- பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதல் இடம் பிடித்துள்ளார்.
- பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி முதல் இடம் பிடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.
ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். ரோகித் சர்மா 2-ம் இடமும் சுப்மன் கில் 3-ம் இடமும் விராட் கோலி 4-ம் இடமும் பிடித்துள்ளனர்.
ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி முதல் இடம் பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் 2-ம் இடமும் தென் ஆப்பிரிக்காவின் கேஷவ் மகராஜ் 3-ம் இடமும் இந்தியாவின் குல்தீப் யாதவ் 4-ம் இடமும் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் பும்ரா 6-ம் இடமும் முகமது சிராஜ் 8-ம் இடமும் பிடித்துள்ளனர்.
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கடந்தார்.
- 74-வது டி20 போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றுவகை போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷாஹீன் அப்ரிடி பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் ஷாஹீன் அப்ரிடி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அப்போது தான் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கடந்தார்.
இதுதவிர இவர் ஒருநாள் போட்டிகளில் 112 விக்கெட்டுகளையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 116 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் ஷதாப் கான் ஆகியோரும் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர்.
இதன் காரணமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷாஹீன் அப்ரிடி பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 74-வது டி20 போட்டியில் விளையாடிய போது ஷாஹீன் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
முன்னதாக தனது 71வது டி20 போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப்-க்கு பிறகு பாகிஸ்தான் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை மிக வேகமாக எடுத்த இரண்டாவது வீரர் ஆனார் ஷாஹீன் அப்ரிடி.
- பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது.
- பாபர் அசாம் முதல் ஓவரிலேயே டக் அவுட் முறையில் வெளியேறினார்.
பாகிஸ்தானில் முத்தரப்பு தொடர் நடைபெற உள்ளது. அதில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றனர். இந்த தொடர் பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் சாம்பியன்ஸ் டிராபிக்கு பயனுள்ளதாக அமையும். இந்த தொடருக்காக 3 அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடர் மற்றும் சாம்பியன் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி போட்டியில் விளையாடி உள்ளனர். அப்போது பாபர் அசாம் பேட்டிங் ஆட களமிறங்கினார். அவருக்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி பந்து வீசினார். அவர் வீசிய பந்தில் பாபர் அசாம் முதல் ஓவரிலேயே டக் அவுட் முறையில் வெளியேறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீம காலமாக பாபர் அசாம் பேட்டிங்கில் தடுமாறி வருவது பாகிஸ்தான் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.