என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் எழுத்து"

    • அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ. மாணிக்கம் திறந்து வைத்தார்.
    • எம்எல்ஏ மற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் புதியதாக திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்களை கண்டால் இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை என்று ஆதங்கப்பட வைக்கிறது.

    ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ. மாணிக்கம் திறந்து வைத்தார். அங்கன்வாடி மைய கட்டித்திற்குள் குழந்தைகள் கற்பிப்பதற்காக வரையப்படு இருந்த தேசிய கொடி, தேசிய தலைவர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெயர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டு இருந்தன.

    கொய்யா பழத்துக்கு கோய்யா பலம், வெண்டைக்காய்க்கு வெட்டககாய், வாழை பழத்துக்கு வாழைபலம், தர்பூசனிக்கு தர்புசணி என்று எழுதப்பட்டு இருந்தது. ஆங்கில மாதங்களும் தவறாக எழுதப்பட்டு இருந்தது.

    இதனை கண்ட எம்எல்ஏ மற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கு இப்படியா தவறாக எழுதுவது என்று பெற்றோர் ஆதங்கப்பட்டனர். இதையடுத்து அவற்றை திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தமிழ் எண்கள் பயன்படுத்தப்பட்டன.
    • மைல் கற்கள் நடவு செய்யும் மரபு இருந்து வருகிறது.

    அவிநாசி :

    திருப்பூர் அருகே 200 ஆண்டு பழமைவாய்ந்த தமிழ் எழுத்துகள் மற்றும் எண்கள் அடங்கிய மைல்கல், சாலையோரம் படிகட்டு கல்லாக பயன்படுத்தப்படுகிறது.கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் வியாபாரம் செய்ய பல இடங்களுக்கு செல்லும் வணிகர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே மடங்களும், அவர்கள் செல்லுமிடம் அறிந்துகொள்ள மைல் கற்களும் வைக்கப்பட்டிருந்தன.

    மைல் கற்களில் தூரங்களை குறிப்பிட தமிழ் எழுத்துகளை ஒத்து காணப்படும் தமிழ் எண்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த கற்கள் இன்றும் பல இடங்களில் மண்ணோடு மண்ணாக கேட்பாரற்று கிடக்கின்றன.திருப்பூர், வீரராஜேந்திரன் தொல்லியல் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:-

    பண்டைய காலங்களில், பெருவழியில் பயணம் செய்யும் மக்களுக்காக மைல் கற்கள் நடவு செய்யும் மரபு இருந்து வருகிறது. திருப்பூர் திருமுருகன்பூண்டியில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப்பணி நடக்கும் இடத்தையொட்டி, சாலையோர நடைபாதை மீது ஏற எளிதாக படிக்கட்டுக் கல்லாக 200 ஆண்டு பழமைவாய்ந்த மைல்கல் போட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த மைல் கல் 80 செ.மீ., உயரம், 45 செ.மீ., அகலத்தில் உள்ளது. இதில் அவிநாசி, காங்கயம், பல்லடம் ஆகிய இடங்களுக்கு செல்லும் தொலைவு, தமிழ் எண்களால் பொறிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கூட மைல் கல்லில் தமிழ் எழுத்துகள், எண்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×