என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வங்கி ஊழல்"
- ஆன்லைன் சேவை நிறுத்தப்பட்டதால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு.
- வட்டி மானியம் வசதியான வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டதாக புகார்.
ஹெனான்:
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பல கிராமப்புற வங்கிகளில் நிதி மோசடி நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சட்டவிரோதமாக பெறப்பட்ட நிதியின் ஒரு பகுதியை வங்கி அதிகாரிகள் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்
வங்கிகளின் வட்டி மானியம் தரகர்களால் சுரண்டப்பட்டதாகவும் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அது வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ஹெனான் மாகாணத்தில் உள்ள நான்கு கிராமப்புற வங்கிகள் தங்கள் ஆன்லைன் சேவைகளை நிறுத்திவிட்டன, இதனால் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வங்கிகள் நிதி முறைகேடு சீன மக்களிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீன மத்திய வங்கியின் கிளைக்கு வெளியே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் வைப்பு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக 234 அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்