என் மலர்
நீங்கள் தேடியது "பயிற்சி மையம்"
- மாணவி ஒருவரின் உடல் இன்று காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
- நாளை மறுநாள் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு எழுத இருந்தார்.
கோச்சிங் சென்டர்கள் மண்டியிருக்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த வருடம் கோட்டாவில் வெவ்வேறு பயிற்சி மையங்களில் படித்து வந்த 17 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
இந்நிலையில் இந்த வருட தொடக்கத்தில் ஒரே மாதத்தில் 6 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டுமே 2 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
கோட்டாவின் ராஜீவ் நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மாணவி ஒருவரின் உடல் இன்று காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்த மாணவியின் பெயர் அஃப்ஷா ஷேக்[23 வயது], இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர். அஃப்ஷா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோட்டாவுக்கு வந்து ராஜீவ் நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ பரீட்சைக்கு கோட்டாவில் பயிற்சி மையத்தில் படித்து வந்த அசாமின் நாகோன் பகுதியைச் சேர்ந்த பராக் என்ற மாணவர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டார்.
மஹாவீர் நகர் பகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டில் இன்று மதியம் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. நாளை மறுநாள் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு எழுத இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும், ஒரு இலட்சம் முதல் இரண்டு லட்சம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் கோட்டாவிற்கு வருகிறார்கள். இங்கு காளான்கள் போல் பெருகி வரும் பயிற்சி மையங்கள் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளது - கடந்த ஆண்டு மட்டும் ரூ.3,500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது.
- இந்த விஷயத்தைப் பற்றி பேச பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார்
- சிசிடிவி காட்சிகளில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் காணலாம் .
பயிற்சி மையத்தில் தனது மகளுடன் பேசியதற்காக மாணவன் ஒருவரைப் பெண்ணின் தந்தை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தில் உள்ள பாவ்நகர் பகுதியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது.
கடந்த பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமை, பயிற்சி மையத்தில் ஒரு மாணவர் ஆபீஸ் ரூமுக்குள் ஆசிரியர் முன்னிலையில் கத்தியால் குத்தப்பட்டார். இந்த தாக்குதல் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
காயமடைந்த மாணவர் கார்த்திக் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் அந்த மையத்தில் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து வருகிறார். அதே மையத்தில் படித்து வரும் ஒரு பெண் மாணவியுடன் தொலைப்பேசியில் கார்த்திக் பேசி வந்துள்ளார்.
பெண்ணின் தந்தை ஜெகதீஷ் ராச்சாட் இதைப் பற்றி அறிந்ததும், இந்த விஷயத்தைப் பற்றி பேச பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். உரையாடலின் போது, ராச்சாத் திடீரென ஒரு கத்தியை எடுத்து கார்த்திக்கை பலமுறை சரமாரியாகக் குத்தினார்.
சம்பவ இடத்திலிருந்த ஒரு ஆசிரியர் தலையிட்டு அவரை தடுத்தார். சிசிடிவி காட்சிகளில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் காணலாம். பலத்த காயங்களுடன் கார்த்திக்கை மீட்டு பயிற்சி மைய அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பெண்ணின் தந்தை ஜெகதீஷ் ராச்சாட்டை கைது செய்தனர்.
- நரிக்குறவர் குழந்தைகளுக்கான பயிற்சி மையத்தை நிர்வகிக்க தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் ஒன்றியம் -கல்வெட்டு மேடு இந்திரா நகர்ப்பகுதியில் உள்ள நரிக்குறவர் குழங்தைகளுக்கான உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தை நிர்வகிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தொண்டு நிறுவனம் தேசிய அறக்கட்டளை சட்டம்/சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் இருந்தால் ஆண்டுதோறும் புதுப்பித்திருக்க வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் அந்த நிறுவனத்தின் பெயரில் 80ஜி/12எ விதிவிலக்கு சான்றிதழ் (Exemption Certificate) கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் கட்டாயமாக அந்நிறுவனத்தின் பெயரில் பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.
தர்பான் போர்டல் கட்டாயம் பதிவு செய்திரு த்தல் வேண்டும். கடந்த 3 நிதியாண்டுகளில் தொண்டு நிறுவனத்தின் வரவு-செலவு சார்ந்த ஆண்டுத் தணிக்கை விபரங்களை வைத்திருத்தல் வேண்டும். 2019-2020, 2020-2021 மற்றும் 2021-2022 ஆண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல்செய்திருக்க வேண்டும். அரசு சாரா தொண்டு நிறுவனம்/சுயஉதவிக் குழுவானது உண்டு உறைவிடப் பள்ளி நடத்துதல் மற்றும் நலிவடைந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கான சமூக சேவை செய்தல் போன்ற செயல்பாடுகளில் குறைந்தது 3 ஆண்டு கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மையத்தை நடத்துவதற்கு போதுமான இடவசதி இருத்தல் வேண்டும்.
மையம் செயல்பட தேர்வு செய்யப்படும் இடம் சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து கட்டிட உறுதித்தன்மை, தீ பாதுகாப்பு தடுப்பு, சுகாதாரம், உணவுப்பாதுகாப்பு சான்றிதழ்கள் ஆகியவை தொடர் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும். தொண்டு நிறுவனங்கள் இளஞ்சிறார் சட்டம்/விடுதிகள் சட்டம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பப்படிவம் மின்னஞ்சல் மூலமாக சிவகங்கை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாவட்ட திட்ட அலுவலகத்தில் நாளை (3-ந் தேதி) முதல் மாவட்ட ஒருங்கிணைப்பாளரை தொடர்புக் கொண்டு பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10-ந் தேதி மாலை 5.00 மணிக்குள் சிவகங்கை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.