என் மலர்
நீங்கள் தேடியது "ஆடு கடத்தல்"
- நூதன முறையில் கார் மூலம் மர்ம கும்பலால் ஆடுகள் கடத்தப்பட்டன.
- கொட்டகை அமைத்து 20 ஆடுகள் வளர்த்து வருகிறார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே கீழ் தனியாலம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குப்பு (வயது 60). இவர் அதே பகுதியில் இவரது வீட்டில் கொட்டகை அமைத்து 20 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து விட்டு தனது வீட்டில் உள்ள கொட்டகையில் கட்டி விட்டு தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் காரில் அங்கு வந்த மர்ம கும்பல் ஆட்டுக்கயிறு கத்தியால் அறுத்து சுமார் 11 ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர்.