என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் பவன் கல்யாண்"

    • ஆந்திர மக்கள் பவன் கல்யாணை நம்ப தயாராக இல்லை.
    • எங்கள் மீது நம்பிக்கை உள்ளதால் தான் ஆந்திர மக்கள் வாக்களித்து 155 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளோம்.

    திருப்பதி:

    அமராவதியை ஆந்திராவில் தலைநகரமாக அறிவிக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் ஆளுங்கட்சிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

    அமைச்சர் ரோஜா கார் மீது ஜனசேனா கட்சியினர் கல் வீசியது சம்பந்தமாக நடிகர் பவன் கல்யாணுக்கும், அமைச்சர் ரோஜாவுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்சி கூட்டத்தில் பேசிய நடிகர் பவர் கல்யாண் பணம் வாங்கிக்கொண்டு பேசுவதாக கூறுபவர்களை செருப்பால் அடிப்பேன் என ஆவேசமாக கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரோஜா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளிலும் நிறுத்த கூட ஆட்கள் இல்லை. இதனால் அவர் சந்திரபாபு நாயுடு உடன் சேர்ந்து கொண்டு ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்.

    கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை சந்திரபாபு நாயுடு திருப்பி அனுப்பினார்.

    அப்போது வாய் திறந்து பேச முடியாத பவன் கல்யாண் தன்னை பொதுக்கூட்டத்தில் பேச முடியாதவாறு திருப்பி அனுப்பியதாக கூறுகிறார்.

    அப்போது கஷ்டப்படாத நீங்கள் இப்போது ஏன் கஷ்டப்படுகிறீர்கள்.

    பவன் கல்யாண் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் ஆந்திராவில் உள்ள ஆண்கள் 3 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சட்டம் கொண்டு வருவார்.

    ஆந்திர மக்கள் அவரை நம்ப தயாராக இல்லை. எங்கள் மீது நம்பிக்கை உள்ளதால் தான் ஆந்திர மக்கள் வாக்களித்து 155 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரையரங்கில் இருந்த இருக்கைகள், ஏ.சி உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி ரசிகர்கள் சேதப்படுத்தினர்.
    • சுமார் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் பிரபல சினிமா நடிகரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் உள்ள லீலா மஹால் திரையரங்கில் 2 காட்சிகள் பவன் கல்யாண் ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த தியேட்டரில் 700 பேர் மட்டுமே உட்கார்ந்து படம் பார்க்க முடியும். ஆனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் சினிமா தியேட்டருக்குள் நுழைந்தனர். அவர்கள் உட்கார்ந்து படம் பார்க்க முடியாததால் போதையில் இருந்த ரசிகர்கள் சினிமா திரையை பிளேடால் கிழித்தனர். இதுகுறித்து சினிமா தியேட்டர் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு 4 போலீசார் மட்டுமே வந்ததால் அவர்களால் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து 2-வது காட்சி திரையிடப்பட்டது. அப்போது ஆவேசமடைந்த பவன் கல்யாண் ரசிகர்கள் திரையை முழுவதுமாக கிழித்து அதில் ஹாப்பி பர்த்டே பவன் கல்யாண் என எழுதினர்.

    மேலும் திரையரங்கில் இருந்த இருக்கைகள், ஏ.சி உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். சுமார் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சினிமா தியேட்டர் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதால் இதனை சீரமைக்க 5 நாட்கள் ஆகும் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவன் கல்யாண் பிறந்த நாளில் சினிமா தியேட்டர் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விரதத்தை தொடங்கினார்.
    • ஒழுங்காக ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் முதலமைச்சர் சிம்மாசனத்தை காலி செய்து விட்டு போங்கள்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பிரபல நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி ஆரம்பித்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க தற்போதே களத்தில் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் அவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் இருந்து ஆந்திர மக்களை பாதுகாக்கவும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஜனசேனா கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவும் தீக்சை விரதத்தை தொடங்கியுள்ளார். 4 மாதம் விரதம் இருக்கும் அவர் சூரியன் அஸ்தமான நேரத்திற்கு பிறகு மட்டும் ஒரு வேளை உணவை சாப்பிடுகிறார்.

    பவன் கல்யாண் நேற்று விஜயவாடா வந்தார். அங்குள்ள அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விரதத்தை தொடங்கினார்.

    இதை தொடர்ந்து பசுவை பொன்னையா ஆடிட்டோரியத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

    பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளையை தடுத்து நிறுத்த முடியாமல் ஜெகன்மோகன் ரெட்டி திணறி வருகிறார். ஒழுங்காக ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் முதலமைச்சர் சிம்மாசனத்தை காலி செய்து விட்டு போங்கள்.

    நீங்கள் ஒழுங்காக ஆட்சி செய்யாததால் மக்கள் கூட்டம் ஜனசேனா கட்சியை நாடி வருகின்றனர். ஜனசேனா கட்சியினரை மிரட்டும் வேலையில் ஒய். எஸ்.ஆர். காங்கிரசார் ஈடுபடக்கூடாது.

    ஆட்சிக்கு வந்த உடனேயே மதுபான விலையை உயர்த்தி விட்டனர். போலி மதுபான ஆலைகளில் உற்பத்தியாகும் மலிவான மதுபானங்களை குடித்து ஏராளமானோர் இறந்துள்ளனர்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் நிர்வாக திறமையின்மை காரணமாக ஆந்திர மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை ஜனசேனா கட்சி கைப்பற்றும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சியை பலப்படுத்த பல்வேறு வியூகங்களை வகுத்து களமிறங்க நடிகர் பவன் கல்யாண் தயாராகி உள்ளார்.
    • நடிகர் பவன் கல்யாண் விஜயதசமி முதல் 6 மாதங்களுக்கு ஆந்திரா முழுவதும் தீவிர சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.

    அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சியை பலப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 150 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

    தெலுங்கு தேசம் கட்சிக்கு 25 இடங்களும் நடிகர் பவன் கல்யாணி ஜனசேனா கட்சிக்கு 1 இடமும் கிடைத்தது. பவன் கல்யாண் 2 இடங்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியில் இருந்த தலா ஒரு எம்.எல்.ஏ., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தாவினர். தற்போது தெலுங்கு தேசம் கட்சிக்கு 23 எம்.எல்.ஏ.க்களும் ஜனசேனா கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை.

    இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சியை பலப்படுத்த பல்வேறு வியூகங்களை வகுத்து களமிறங்க நடிகர் பவன் கல்யாண் தயாராகி உள்ளார்.

    விஜயதசமி முதல் 6 மாதங்களுக்கு ஆந்திரா முழுவதும் தீவிர சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். திருப்பதியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் பவன் கல்யாண் காளஹஸ்தி, சித்தூர், கர்னூல், கடப்பா, விஜயவாடா மாவட்டங்களில் நகரங்கள் தொட்டு கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    அப்போது தனது கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க உள்ளார்.

    பொதுமக்களிடம் தனது கட்சி கொள்கைகள் மற்றும் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் செய்யப்படும் நல திட்டங்கள் குறித்து பேச உள்ளார்.

    சுற்றுப்பயணத்திற்கு செல்லும்போது முதலமைச்சர் செல்லும்போது எப்படி போலீஸ் கான்வாயில் செல்கிறாரோ அதேபோல் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக புதியதாக 8 கருப்பு நிற கார்களை வாங்கியுள்ளார்.

    அந்த கார்கள் பிரசாரத்திற்கு தயாரான நிலையில் உள்ளது.

    முதலமைச்சராவதற்கு முன்பாக சென்டிமென்டாக கான்வாயில் செல்வதற்காக கார்களை வாங்கி இருப்பதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். எப்படியாவது தனது கட்சியை பலப்படுத்தி முதலமைச்சராக வேண்டும் என பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்காக சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாராகியுள்ளார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முழுவதும் நடைபயணம் செய்து தனது கட்சியை பலப்படுத்தி ஆட்சியை பிடித்தார்.

    அதேபாணியில் தற்போது நடிகர் பவன் கல்யாணும் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார்.

    ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் சட்டப்பேரவை தேர்தலில் காஜீவாக்கா, பீமாவரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். #PawanKalyan
    அமராவதி:

    பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா சட்ட சபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    ஆட்சியை பிடிப்பதில் தெலுங்குதேசம் கட்சிக்கும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் சட்டப்பேரவை தேர்தலில் விசாகப்பட்டினம் மாவட்டம் காஜீவாக்கா, மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

    விஜயவாடாவில் உள்ள ஜனசேனா கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது இது அறிவிக்கப்பட்டது.

    பவன் கல்யாண் எந்த தேதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கங்காதரம் தெரிவித்து உள்ளார்.



    பவன் கல்யாண் கடந்த 2014 தேர்தலில் தெலுங்கு தேசம் - பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது அவர் இந்த இரு கட்சிகளையும் எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #PawanKalyan
    சி.பி.ஐ. முன்னாள் இணை இயக்குநர் வி.வி. லக்‌ஷ்மிநாராயணா விஜயவாடாவில் இன்று நடிகர் பவன் கல்யாண் முன்னிலையில் ஜனசேனா கட்சியில் சேர்ந்தார். #FormerCBIJD #Lakshminarayana #Janasena #PawanKalyan
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரணை செய்த சி.பி.ஐ. சிறப்பு குழுவில் முன்னர் இணை இயக்குநராக பதவி வகித்தவர் வி.வி. லக்‌ஷ்மிநாராயணா.

    பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்த அவர், சமூகச்சேவைகளில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், விஜயவாடாவில் இன்று நடிகர் பவன் கல்யானை சந்தித்த லக்‌ஷ்மிநாராயணா, அவரது தலைமையிலான ஜனசேனா கட்சியில் இணைந்தார். இதேபோல், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் இன்று ஜனசேனாவில் இணைந்தார்.



    இந்த இணைப்பு நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடையே பேசிய பவன் கல்யாண், வரும் தேர்தலில் கூட்டணி தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். #FormerCBIJD #Lakshminarayana #Janasena  #PawanKalyan
    பாராளுமன்ற தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பவன் கல்யாணின் ஜன சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. #JanaSena #BSP #AndhraPradesh #Telangana #Mayawati #PawanKalyan
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பவன் கல்யாணின் ஜன சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இதுதொடர்பாக, உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் இரு கட்சி தலைவர்களும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாயாவதி கூறுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், ஜன சேனா கட்சியும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தொகுதி ஒதுக்கீடுகள் இறுதி நிலையை அடைந்துள்ளன. மேலும் ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என குறிப்பிட்டார்.



    இதேபோல், ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் கூறுகையில், ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றனர். நம் நாட்டிற்கு சகோதரி மாயாவதிஜி பிரதமராக பதவியேற்க வேண்டும் என்பதே நமது குறிக்கோள். அதை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். #JanaSena #BSP #AndhraPradesh #Telangana #Mayawati #PawanKalyan
    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #VanthaRajavathaanVaruven #STR
    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.

    இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்கள் இன்று வெளியாகிறது. லைகா புரொக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பிப்ரவரி 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #VanthaRajavathaanVaruven #STR #VRV#MeghaAkash #STRTheKing #SundarCBonanza #VRVHappyFamily #VRVFromFeb1st 

    `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் ரெட்கார்டு பாடல் மூலம். சினிமாவில் சிம்புவுக்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்ட சர்ச்சைக்கு சிம்பு பதில் அளித்துள்ளார். #VanthaRajavathaanVaruven #STR
    சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து இருக்கும் படம், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இதில், சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யாகிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். ரெட்கார்டு எனத் தொடங்கும் இந்த பாடலை அறிவு எழுத, சிம்பு பாடியுள்ளார்.



    ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில், சிம்புவுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட விவகாரத்தில், சிம்புவுக்கு நடிக்க ‘ரெட் கார்டு’ (தடை) போடப்படும் எனத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, இந்த பாடலின் வரிகள் எழுதப்பட்டு இருப்பது, சிம்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. #VanthaRajavathaanVaruven #STR #VRV #RedCardu #MeghaAkash

    சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் முன்னோட்டம். #VanthaRajavathaanVaruven #STR
    லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.

    சிம்பு நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்திரன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ், விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், படத்தொகுப்பு - என்.பி.ஸ்ரீகாந்த், நடனம் - பிருந்தா, சதீஷ்,  கலை இயக்குநர் - குருராஜ், தயாரிப்பாளர் - சுபாஷ்கரன், தயாரிப்பு நிறுவனம் - லைகா புரொடக்‌ஷன்ஸ், கதை - திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், திரைக்கதை, இயக்கம் - சுந்தர்.சி.

    தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

    படம் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #VanthaRajavathaanVaruven #VRV #STR 

    வந்தா ராஜாவாதான் வருவேன் டீசர்:

    சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #VanthaRajavathaanVaruven #STR
    `செக்கச்சிவந்த வானம்' படத்திற்கு பிறகு சிம்பு அடுத்ததாக சுந்தர்.சி. இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்திரன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி 3-ஆம் தேதி சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே படத்தை பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #VanthaRajavathaanVaruven #VRV #STR 

    2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்கள் ரிலீசாகவிருக்கும் நிலையில், சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பொங்கல் ரிலீசில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. #STR #VanthaRajavathanVaruven
    பொங்கல் வெளியீடாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியாக இருக்கின்றன. பேட்ட படத்துக்கு இசை வெளியீடு முடிந்து விளம்பரப் பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால், ‘விஸ்வாசம்’ தொடர்பாக இதுவரை பாடலோ, டீசரோ வெளியிடப்படவில்லை. இந்த வாரம் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆனால், பொங்கலுக்கு வருவதாகச் சொன்ன சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் முடியவில்லை. அத்துடன் ரஜினி, அஜித் படங்கள் வெளியாவதால் திரையரங்குகளும் போதிய அளவில் கிடைக்காது என்பதால், பொங்கல் போட்டியில் இருந்து இந்தப் படம் விலகி இருக்கிறது. 

    சுந்தர்.சி இயக்கிவரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம், பவன் கல்யாண் நடித்த ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக். சிம்பு ஜோடியாக கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். 



    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டபோது ‘பொங்கல் வெளியீடு’ என குறிப்பிட்டார்கள். ஆனால் ‘பேட்ட’ படத்தின் பொங்கல் வெளியீடு அறிவிப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட டீசரில் விரைவில் வெளியீடு என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் பொங்கல் வெளியீட்டிலிருந்து ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ விலகி உள்ளது உறுதியாகி இருக்கிறது. #STR #VanthaRajavathanVaruven

    ×