என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேவி ஸ்ரீபிரசாத்"
- இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஓ பெண்ணே என்ற தனி இசைப்பாடலை உருவாக்கியுள்ளார்.
- இதன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைப்பெற்றது, இதில் கமல் கலந்துக் கொண்டார்.
பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஓ பெண்ணே என்ற தனி இசைப்பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கி அவரே அதில் பாடி நடித்தும் இருக்கிறார். இதன் தமிழ் பாடலை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கமல்ஹாசன் பேசும்போது, எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்போது பதற்றம் இருக்காது. சந்தோஷமாக இருக்கும். இளையராஜாவை சந்திக்கையில் சத்தமாக பேசலாமா வேண்டாமா என்று கொஞ்சம் பயமாக இருக்கும்.
பேசாமல் இருந்தாலும் அவர் கொடுக்கும் இசையை சந்தோஷமாக வாங்கி கொண்டு வரலாம். நான் இளையராஜாவுக்கு பெரிய ரசிகன். தேவி ஸ்ரீபிரசாத் தசாவதாரம் படத்துக்கு கொடுத்த பின்னணி இசை பிரமாதமாக இருந்தது. தற்போது தனி இசை பாடலை உருவாக்கி உள்ள அவரது முயற்சி சிறப்பானது. ஆரம்ப காலத்தில் தனி பாடல்கள் சினிமாவை விட பிரபலமாகி உள்ளன. பிறகு சினிமா அத்தனையையும் விழுங்கி விட்டது. படத்துக்கு என்ன இசை உண்டோ அதைத்தான் கிட்டத்தட்ட நூறு வருடமாக போட்டுக்கொண்டு இருக்கிறோம்.
இசைக்கலைஞர்களை தனியாக விட்டால் அழகான பாடல்கள் உருவாகும். அமெரிக்காவில் சினிமா நட்சத்திரங்களை விட தனி இசை ஆல்பம் வெளியிடுபவர்கள் பெரிய பணக்காரர்கள். தனியாக ஜெட் விமானம் வைத்து பறந்து கொண்டு இருக்கிறார்கள். சுருதிஹாசன் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது உலகில் அதிக படங்கள் எடுக்கும் நாடு இந்தியா என்பதால் இங்கு சினிமா கற்றுக்கொள்ளலாம். இசையையும் கற்றுக்கொண்டு வர வேண்டும் என்று சொன்னேன். சினிமாவை விட பெரிதாக வளரக்கூடிய வாய்ப்பு வருங்காலத்தில் இசைக்கு இருக்கிறது என்று நான் நம்புகிறேன் என்று சொல்லி இசையை கற்க அனுப்பினேன். இசை இன்னொரு தொழிலாக உருவாக வேண்டும். இது இசைக்கும் நல்லது இசை ரசிகர்களுக்கும் நல்லது என்றார்
- தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜிதா பொன்னடா.
- இவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தை ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக தகவல் பரவியது.
தமிழில் 'செவன்' படத்தில் நடித்தவர் பூஜிதா பொன்னடா. இவர் தற்போது 'பகவான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜிதா பொன்னடாவும், பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் வலைத்தளத்தில் தகவல் பரவியது.
தேவி ஸ்ரீபிரசாத் தமிழில் வில்லு, சச்சின், சிங்கம், கந்தசாமி, வீரம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இன்னும் திருமணம் செய்து கொள்ளமல் இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத், ஏற்கனவே சில நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகை பூஜிதா பொன்னடாவை மணந்துள்ளதாக தகவல் பரவி வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பூஜிதா பொன்னடா அளித்துள்ள விளக்கத்தில், "நான் தேவி ஸ்ரீபிரசாத்தை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல. இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து உருவாகின்றன என்று புரியவில்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை, சமூக வலைத்தளத்தில் எனக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புகின்றனர்" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்