என் மலர்
நீங்கள் தேடியது "கைேரகை"
- 6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டதிற்கு கைரேகை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
- 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில்,பல்லடம் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமரின் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டதிற்கு கைரேகை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
பல்லடம் வடக்கு ஒன்றிய தலைவர் பூபாலன் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில்100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஊக்கத்தொகை திட்ட கைரேகை பதிவு செய்து புதுப்பித்துக் கொண்டனர். இதில் பா.ஜ.க.,நிர்வாகிகள் நித்யா ஆனந்தகுமார்,லதா, ஆதி கேசவன்,மகேஷ், குப்புராஜ், அய்யப்பன், திரிலோகசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.