என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அண்ணா பிறந்தநாள் விழா"
- முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பல்லடம் கடைவீதியில் நடைபெற்றது
- கூட்டத்திற்கு நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
பல்லடம் :
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க பல்லடம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பல்லடம் கடைவீதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கரைப்புதூர் நடராஜன், கே.பி.பரமசிவம், தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், முன்னாள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத் தலைவர் பானு பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பல்லடம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., சிறப்பு பேச்சாளர் அப்சரா ரெட்டி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்தகூட்டத்தில்,மாவட்ட நிர்வாகிகள் சிவாச்சலம்,அரி கோபால், புத்தரச்சல் பாபு, மற்றும் தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராஜ், லட்சுமணன், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
- அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- மனிதநேய மக்கள் கட்சி சாயல்குடி நகர் தலைவர் ஜாபர் அலி நன்றி கூறினார்.
சாயல்குடி
சாயல்குடியில் இந்தியா கூட்டணி மற்றும் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் அண்ணா பிறந்த தின விழா கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகை தீன் தலைமை வகித்தார். ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கி ணைப்பா ளர் பாஸ்கரன் வரவேற்றார்.
மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர், மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் கணே சன், சாயல்குடி தி.மு.க. பேரூர் செயலாளர் வெங்க டேஷ்ராஜ், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள் பால்ராஜ், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், துணை சேர்மன் மணி மேகலை பாக்கியராஜ், தி.மு.க. நகர இளைஞரணி செயலாளர் விக்னேஷ் ராம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
த.மு.மு.க. தலைமை பிரதிநிதி சம்சுதீன் சேட், புரட்சிகர இளைஞர் மாவட்ட பொருளாளர் தமிழ் முருகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் காமராஜ், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் பாண்டி, மாவட்ட பிரதிநிதி புனித ராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
அண்ணாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மனிதநேய மக்கள் கட்சி சாயல்குடி நகர் தலைவர் ஜாபர் அலி நன்றி கூறினார்.
- குன்னூரில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் கலந்து கொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை குன்னூர் நகரசெயலாளர் சரவணகுமார் செய்திருந்தார். அமைப்பு செயலாளர் கே.ஆர். அர்ஜூணன், பேரவை மாவட்டசெயலாளர் சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குன்னூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி, குன்னூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹேம்சந்த், வர்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பெரியார்-அண்ணா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவேண்டும் என பசும்பொன்பாண்டியன் அறிக்கையை வெளியிட்டார்.
- அண்ணா பிறந்தநாள் விழா காலை 9மணிக்கு நடைபெறுகிறது.
மதுரை
அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டி யன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாளை கொண்டாடுவது தமிழனின் கடமையாகும். திராவிடப்பெருநாளாகும் வருகிற 15-ந்தேதி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்திட அ.தி.ம.மு.க. நிர்வாகிகளையும் அன்புடன் வேண்டுகிறேன்.
அன்று தலைமைக்கழகத்தில் சார்பில் எனது தலைமையில் மதுரையில் உள்ள அன்னை இல்லத்தில் அண்ணா பிறந்தநாள் விழா காலை 9மணிக்கு நடைபெறுகிறது.
பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது தமிழர்களின் கடமையாகும். சனாதன, வகுப்புவாத சக்திகளை தமிழ் மண்ணில் நுழைய விடாமல் தடுக்க பெரியாரின் பிறந்தநாளை திருவிழாவாக அ.தி.ம.மு.க.வினர் கொண்டாடி மகிழ வேண்டும்.
பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் பிறந்தநாள் விழாவை நாடு போற்றும் வகையில் கொண்டாட வேண்டுகிறேன்.தலைமைக்கழகத்தின் சார்பில் மதுரை மேலூரில் 17-ந் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் திராவிட விடுதலைக் கழகம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.
காலை 8 மணிக்கு பெரியார் படத்திற்கு தலைமைக்கழகத்தில் மரியாதை செலுத்தப்பட்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படும். இதில் அ.தி.ம.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், பகுதி, வட்ட, ஊர்க்கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் அண்ணா, பெரியார் பிறந்தநாள் விழாவை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்