என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய வம்சாவளி"
- பத்மபூஷன் டாக்டர். ஏ.சிவதாணு பிள்ளை, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனர் விருது வழங்கி அவரை கவுரவித்தார்.
- டாக்டர் ஷீபா பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
யுனைடெட் சமாரிடன்ஸ் அறக்கட்டளையின் சர்வதேசத் தலைவரும், தொழில்நுட்ப வல்லுநருமான டாக்டர் ஷீபா லூர்தஸ், யுனெஸ்கோவின் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால், நிலையான சூழலுக்கான கிரியேட்டிவ் இன்ஜினியர்ஸ் என்ற கருப்பொருளின் கீழ், உலகளாவிய சிறந்த பெண் பொறியாளர் விருதைப் பெற்றுள்ளார்.

டாக்டர் ஷீபா லூர்தஸ்க்கு, பத்மபூஷன் டாக்டர். ஏ.சிவதாணு பிள்ளை, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனர் விருது வழங்கி அவரை கவுரவித்தார்.
பன்முகத்தன்மை கொண்ட டாக்டர் ஷீபா லூர்தஸ், ஸ்வீடிஷ் என்ஆர்ஜ என்றாலும் அவர் தென்னிந்தியாவின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
பல விருதுகளுக்கு சொந்தக்காரரான அவர், மிஸ் தமிழ்நாடு டைட்டில் வின்னர். கண்ணழகி மற்றும் கூந்தலழகி, தென்னிந்தியா பட்டத்தை வென்றவர். யுனைடெட் சமாரிடன்ஸ் இந்தியா தேசிய இயக்கத்தின் தலைவர்.

டைம்ஸ் ஆஃப் யுனைடெட் சமாரிடன்ஸ் இந்தியா இதழ் மற்றும் 'யுனைடெட் சமாரிடன்ஸ்' வெளியீடுகளின் உரிமையாளர்/ஆசிரியர்.
அறிவாற்றல் உளவியலாளர் மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞர் எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி.
அதுமட்டுமின்றி, டாக்டர் ஷீபா பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். தெற்காசியாவில் ஒரு சாதனை திருப்புமுனை மற்றும் 2 சர்வதேச நோபல் குடிமகன் விருதுகளை வென்றுள்ளார்.

இதுவரை, டாக்டர் ஷீபா தனது வாழ்க்கையில் 20+ லட்சம் மரங்களை நட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், அப்துல் கலாமின் நினைவு தினம் மற்றும் உலக சேவை தினத்திற்காக 6 நாடுகளில் 15,000 ஏழை மக்களுக்கு டாக்டர் ஷீபா உணவளிக்கிறார்.
டாக்டர் ஷீபா இதுவரை 45க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை ஊக்குவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லை ஆய்வுக் கட்டுப்பாட்டிலிருந்து அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு அவர் ஆதரவளித்து வருகிறார்.
- மோசடி செய்ததாக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- ஷ்ரதா அகர்வாலுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பிராட் பர்டிக்கு 2 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சிகோகோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முன்னாள் நிர்வாகிகளான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி ஷா (வயது 38 ), ஷ்ரதா அகர்வால் (38) மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பிராட்பர்டி (35) ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து 1 பில்லியன் டாலர் ( இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7,500 கோடி ) மோசடி செய்ததாக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ரிஷி ஷாவுக்கு 7 ஆண்டு 6 மாதம் ஜெயில் தண்டனையும், ஷ்ரதா அகர்வாலுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பிராட் பர்டிக்கு 2 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
- அச்சம்மா செரியன், அவசர பிரிவில் பணியில் இருந்தபோது அவரை நோயாளி ஒருவர் கத்தரிக்கோலால் கழுத்தில் திடீரென்று குத்தினார்.
- அச்சம்மா செரியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மான்செஸ்டர்:
இந்தியாவை சேர்ந்தவர் அச்சம்மா செரியன்(வயது 57). இவர் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட்ஹாம் ராயல் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அச்சம்மா செரியன், அவசர பிரிவில் பணியில் இருந்தபோது அவரை நோயாளி ஒருவர் கத்தரிக்கோலால் கழுத்தில் திடீரென்று குத்தினார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள், அவரை மீட்டு அவசர பிரிவில் சேர்த்தனர். மேலும் தாக்குதல் நடத்திய நபரை மடக்கி பிடித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நர்சை கத்தியால் குத்திய ரோமன் ஹக்கை (வயது 37) கைது செய்து மான்செஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவர் மீது கொலை முயற்சி மற்றும் கத்தியால் குத்தப்பட்ட பொருளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரை காத்திருக்க வைத்ததால் கோபம் அடைந்து நர்சு மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இதற்கிடையே அச்சம்மா செரியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலையிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சம்மா செரியன் இங்கிலாந்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் ல்ட்ஹாம் ராயல் ஆஸ்பத்திரியில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
- டாக்டர் விவேக் மூர்த்திதான் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் பதவியையும் வகிக்கிறார்.
- டாக்டர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தொழில் அதிபர், எழுத்தாளர் என பல முகங்களை இவர் கொண்டுள்ளார்.
வாஷிங்டன்
உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாக இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் டாக்டர் விவேக் மூர்த்தி (வயது 45) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்துள்ளார்.
டாக்டர் விவேக் மூர்த்திதான் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் (தலைமை அறுவை மருத்துவ நிபுணர்) பதவியையும் வகிக்கிறார். இந்த பதவியுடன் அவர் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாகவும் இருப்பார் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
டாக்டர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தொழில் அதிபர், எழுத்தாளர் என பல முகங்களை இவர் கொண்டுள்ளார். இவரது மனைவி ஆலிஸ் சென். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
டாக்டர் விவேக் மூர்த்தியின் பூர்வீகம், இந்தியாவின் கர்நாடக மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய வம்சாவளி ஷெபாலி ரஸ்தான் துக்கால் (வயது 50).
- இதற்கான ஒப்புதலை செனட் சபை வழங்கி விட்டது.
வாஷிங்டன்
நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துக்கால் (வயது 50) என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான முறையான ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வழங்கி விட்டது.
காஷ்மீரி பண்டிட் இனத்தை சேர்ந்த இவர் இந்தியாவில் இன்றயை உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் பிறந்தவர். தனது 2 வயதிலேயே குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். அங்குள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் பட்டமும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவர். தனது நியமனம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் செனட் சபையின் வெளியுறவு குழு விசாரணை நடத்தியபோது இவர், "நான் இந்தியாவில் பிறந்தேன், அமெரிக்காவில் உருவாக்கப்பட்டேன்" என குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.
அதுமட்டுமின்றி, "சின்சினாட்டியில் என்னை வளர்த்தெடுத்தவர் என் அம்மா. என் அப்பா என் இளம் வயதிலேயே பிரிந்து சென்று விட்டார். அது எனது வாழ்க்கையின் திசையை, ஆழமாகவும் நிரந்தரமாகவும் பாதித்தது" எனவும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், "இரக்கம், பச்சாதாபம், நேர்மை மற்றும் வியர்வை சமத்துவம் ஆகியவை நம் நாட்டில் ஏதோ ஓன்றைக் குறிக்கின்றது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்கள் நம்மை நம்பிக்கை மற்றும் சுதந்திரத்தின் கலங்கரை விளக்கமாகப் பார்க்க இதுவே காரணம். எனது கதை தனித்துவமானது இல்லை என்றாலும் கூட, இது அமெரிக்க உணர்வு மற்றும் அமெரிக்க கனவின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை பிரதிபலிக்கிறது" எனவும் தெரிவித்தார்.