search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசுப் பள்ளிகள்"

    • கடந்த 20 ஆண்டுகளாக இக்கிராமத்தில் இருந்து ஒருவர் கூட தனியார்ப் பள்ளியில் படிக்கவில்லை.
    • இதுவரை தனியார்ப் பள்ளி வாகனங்கள் எதுவும் இக்கிராமத்திற்கு வந்ததில்லை.

    அரசுப் பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்க்கும் கர்நாடக கிராம மக்களின் முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மாதகவுடனகோப்பலு கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் மட்டும் தான் சேர்க்கின்றனர்.

    அரசுப் பள்ளிகளை ஊக்குவிக்கவும் கன்னட மொழியை பாதுகாக்கவும் தனியார் பள்ளிகளை இக்கிராம மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.

    கடந்த 20 ஆண்டுகளாக இக்கிராமத்தில் இருந்து ஒருவர் கூட தனியார்ப் பள்ளியில் படிக்கவில்லை. இதுவரை தனியார்ப் பள்ளி வாகனங்கள் எதுவும் இக்கிராமத்திற்கு வந்ததில்லை.

    தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, இக்கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இக்கிராமத்தில் இருந்து அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பெங்களூரு, மைசூர் போன்ற இடங்களில் பணிபுரிகின்றனர்.

    • அரசுப் பள்ளிகளில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.
    • 22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதற்கான பணி இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    அரசுப் பள்ளிகளில் இணைய வேகத்தை 100 எம்பிபிஎஸ் என்ற அளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 6223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை 5,907 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    6992 நடுநிலைப் பள்ளிகளில் 3267 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மொத்தமுள்ள 24,338 தொடக்கப் பள்ளிகளில் 8,711 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 19,668 அரசுப் பள்ளிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இணையதள வசதி வழங்கப்படும்.

    மேலும், அரசுப் பள்ளிகளில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    • மதுரையில் நேற்று இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு.

    தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. மதுரை கீழ அண்ணாதோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், அந்த பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.

    இந்த நிலையில், சென்னை உள்ளிட அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள  மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

    ×