என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விளையாட்டு - கல்வி அறக்கட்டளை"
- அரசு, மாநகராட்சி, தனியார் பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
- போட்டி முடிவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
திருப்பூர் :
திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் 27-வது நிட்சிட்டி கைப்பந்து போட்டிகள் சிறுபூலுவப்பட்டியில் உள்ள டிசெட் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அரசு, மாநகராட்சி, தனியார் பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் மாணவர்களுக்கான மூத்தோர் பிரிவில் வித்ய விகாசினி பள்ளி முதலிடமும், பிரண்ட்லைன் பள்ளி 2-ம் இடமும், கே.எஸ்.சி. அரசு பள்ளி 3-ம் இடமும், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளி 4-ம் இடமும் பிடித்தது. இதேபோல் மாணவர்களுக்கான மிகமூத்தோர் பிரிவில் வேலவன் பள்ளி முதலிடமும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி 2-ம் இடமும், பிரண்ட்லைன் பள்ளி 3-ம் இடமும், ஏ.வி.பி. டிரஸ்ட் பள்ளி 4-ம் இடமும் பிடித்தது.
மாணவிகளுக்கான மூத்தோர் பிரிவில் வித்ய விகாசினி பள்ளி முதலிடமும், செயிண்ட் ஜோசப் பள்ளி 2-ம் இடமும், இன்பன்ட் ஜீசஸ் பள்ளி 3-ம் இடமும், லிட்டில் கிங்டம் பள்ளி 4-ம் இடமும் பிடித்தது. மாணவிகளுக்கான மிக மூத்தோர் பிரிவில் வித்ய விகாசினி பள்ளி முதலிடமும், வேலவன் பள்ளி 2-ம் இடமும், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி 3-ம் இடமும், ஏ.வி.பி. டிரஸ்ட் பள்ளி 4-ம் இடமும் பிடித்தது.
இந்த போட்டியில் வித்ய விகாசினி பள்ளி அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டி முடிவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. டிசெட் தலைவர் நிக்கான்ஸ் வேலுச்சாமி வரவேற்றார். பொருளாளர் தேவராஜன், துணைத் தலைவர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் தலைவர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முடிவில் டிசெட் செயலாளர் துரைசாமி நன்றி கூறினார். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சாம்பியன் கோப்பையும், கலந்து கொண்டு வீரர்-வீராங்கனைகளுக்கு தனிநபர் கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்