என் மலர்
நீங்கள் தேடியது "துப்பாக்கி சண்டை"
- தீவிரவாதியான ஆசீப் ஷேக்கின் வீடு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
- எல்லையில் போர் விமானங்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.
புதுடெல்லி:
காஷ்மீரில் பிரபல சுற்றுலா தலமான பகல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்ட னர்.
கொடூரமாக துப்பாக்கி சூடு நடத்திய 6 தீவிர வாதிகளையும் பாகிஸ்தானில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இயக்கி இருப்பதை இந்திய ராணுவத்தினர் உறுதி செய்துள்ளனர். இதை யடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக 7 முக்கிய தடை அறிவிப்புகளை இந்தியா வெளியிட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய தீவிர வாதிகள் பாகிஸ்தான் ஆக்கி ரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முகாம்களில் இருந்து ஊடுருவியதும் தெரிய வந்தது. இதனால் அந்த தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்பதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்கப்பட்டது.
அப்போது பயங்கர வாத முகாம்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த ஆதரவு தெரிவித்தன. உலகின் பெரும்பாலான நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. இதனால் இந்தியா எந்த நேரத்திலும் அதிரடி தாக்குலை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று பீகாரில் நடந்த கூட்டத்தில் பேசும் போது, "காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணி கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உலகின் எந்த மூளைக்கு ஓடினாலும் தேடி பிடித்து வேரோடு அழிப்போம். அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் கற்பனைக்கும் எட்டாத வகையில் இருக்கும்" என்று எச்சரித்தார்.
பிரதமர் மோடியின் இந்த எச்சரிக்கை பாகிஸ்தானில் நேற்று மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கியது. இந்திய விமானங்கள் எந்த நேரத்திலும் வந்து குண்டு வீசலாம் என்று பாகிஸ்தான் ராணுவத்தில் பயம் ஏற்பட்டது. இதையடுத்து எல்லையில் போர் விமானங்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.
அதற்கு பதிலடி நடவடிக்கையாக எல்லைப் பகுதிகளில் இந்திய ராணு வம் நேற்று திடீரென போர் பயிற்சிகளை தொடங்கியது. இது பாகிஸ்தானியர்களுக்கு கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா ஏதோ ஒரு பெரிய தாக்குதலுக்கு திட்டமிடுவதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு முழுக்க தூங்கவில்லை.
இந்த நிலையில் இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறினார்கள். நேற்று நள்ளிரவு சில முகாம்கள் மீது பாகிஸ்தான் எல்லைப் பகுதி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு இந்திய வீரர்களும் துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே விடிய விடிய துப்பாக்கி சண்டை நீடித்தது. இன்று அதிகாலை பாகிஸ்தான் வீரர்கள் நீண்ட தூரத்துக்கு பின்வாங்கி சென்றனர். அவர்கள் தரப்பில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா? என்பது தெரிய வில்லை.
இந்திய பாதுகாப்பு படையினர் இதுகுறித்து கூறுகையில், "எல்லையில் வாலாட்டிய பாகிஸ்தான் வீரர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது" என்ற னர்.
இதற்கிடையே காஷ்மீரில் தீவிரவாதிகளை தேடிப் பிடித்து அழிப்பதற்கு பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் பகல் காமில் தாக்குதல் நடத்த உதவி செய்ததாக காஷ்மீரை சேர்ந்த தீவிரவாதிகள் ஆசீப்ஷேக், அதில் ஆகிய 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் காஷ்மீரில் எங்கு பதுங்கி இருக்கிறார்கள் என்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குல்னர் என்ற இடத் தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினரும், உள்ளூர் போலீசாரும் ஒருங்கிணைந்து சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது ஒரு வீட்டுக்குள் இருந்து பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டை நோக்கி பாதுகாப்பு படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 ராணுவ வீரர்களும், ஒரு போலீஸ் அதிகாரியும் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவி செய்த காஷ்மீர் உள்ளூர் தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படை சார்பில் தீர்மானிக் கப்பட்டது. அதன்படி முக்கிய லக்ஷர் இ தொய்பா தீவிரவாதியான ஆசீப் ஷேக்கின் வீடு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
அதுபோல அனந்தநாக் மாவட்டத்தில் பிஜ்பெரா என்ற இடத்தில் இருக்கும் மற்றொரு தீவிரவாதியான அதில் தோகர் என்பவன் வீடும் இன்று காலை குண்டு வைத்து தகர்த்து எறியப் பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கையில் 2 தீவிரவாதிகளின் வீடும் தரைமட்டமாக்கப்பட்டன. தொடர்ந்து அவர்களை வேட்டையாடு வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
- இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை.
- தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். அன்றில் இருந்து பாகிஸ்தானுக்கு அவர்கள் தலைவலியாக மாறி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பயங்கர வாதிகள் பாகிஸ்தானின் சைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாண எல்லைப்பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படை வீரர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.
தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருவதைதொடர்ந்து அவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு இறங்கி உள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கைபர் பக்துன்க்வா தேரா இஸ்மாயில்கான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் உளவு துறைக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 10 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ராணுவ அதிகாரி ஒருவரும் உயிர் இழந்தார்.
தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.
- பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
- துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
பந்திபோரா:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அங்குள்ள சிந்திபந்தி கிராமத்தில் பாதுகாப்பு படையினர் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, போலீசார் மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழு பந்திபோராவில் சுற்றிவளைத்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
- பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் உள்ள ஹடிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்து பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பயங்கரவாதிகள் குறித்து தகவல் கொடுத்தால் தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர்.
- பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
ஜம்மு காஷ்மீர்:
ஜம்மு-காஷ்மீரில் மலைப்பாங்கான மாவட்டத்தில் ஜூன் 11-12 தேதிகளில் இரட்டை பயங்கரவாத தாக்குதலில் 6 பாதுகாப்பு வீரர்கள் காயம் அடைந்தனர். இரட்டை தாக்குதல்களுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் தங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். மற்றும் மாவட்டத்தில் ஊடுருவி செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்து தகவல் கொடுத்தால் தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர்.
இந்த நிலையில் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்து பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஈரானில் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலுகிஸ்தான் மாகாணங்களில் இயங்கி வரும் பயங்கரவாத கும்பல் சட்ட விரோத போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பயங்கரவாத கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
ஈரானில் ஹிஜாப் விவகாரம் சூடுபிடித்து உள்ளது. அங்கு பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் ஈரான்-பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள ஒரு போலீஸ் நிலையைத்தில் மர்மகும்பல் திடீரென தாக்குதல் நடத்தினார்கள், அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து போலீசாரும் அவர்களை நோக்கி திருப்பி சுட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் உளவுத்துறை அதிகாரி கர்னல் அலிமவுசலி உள்பட 19 பேர் இறந்ததாக ஈரான் தெரிவித்து உள்ளது. இந்த சண்டையில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை.
ஈரானில் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலுகிஸ்தான் மாகாணங்களில் இயங்கி வரும் பயங்கரவாத கும்பல் சட்ட விரோத போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
இதனால் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஈரானில் ஏற்கனவே ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் இதற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்மந்தம் எதுவும் உள்ளதா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.