என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பக்தி"
- நாக வாகனம் மனிதனின் மூலாதார சக்தியான குண்டலினி சக்தியைக் குறிப்பதாகும்.
- குண்டலினி சக்தியின் விரிவு மற்றும் ஒடுக்கங்கள் உலகத் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் எடுத்துரைக்கின்றன.
நாக வாகனம் மனிதனின் மூலாதார சக்தியான குண்டலினி சக்தியைக் குறிப்பதாகும்.
குண்டலினி சக்தியின் விரிவு மற்றும் ஒடுக்கங்கள் உலகத் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் எடுத்துரைக்கின்றன.
குண்டலினி சக்தியானது புருவ மத்தியான சுழுமுமுனையில் இருந்து ஞானம் பெறத் துணை நிற்கும்
சுழுமுனையை மறைத்துக் கொண்டிருக்கின்றது.
எனவே சுழுமுனையிலே நிலை கொண்டிருக்கும் ஞானசக்தியானது இறைவனது
கருணையாலேயே வாய்க்கப் பெற வேண்டும் என்னும் தத்துவத்தை நாகவாகனம் உணர்த்துகிறது.
- இறைவன் விழாக் காலங்களில் பல்லக்கில் எழுந்தருளும் காட்சி ‘திரோபவக் கோலம்‘ எனப்படுகிறது.
- தேர்த் திருவிழா இந்துக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.
இறைவன் விழாக் காலங்களில் பல்லக்கில் எழுந்தருளும் காட்சி 'திரோபவக் கோலம்' எனப்படுகிறது.
திரோபவம் என்றால் மறைத்தல் என்று பொருள்.
உயிர்கள் பூமியில் வாழ்கின்ற காலத்தில் அறிந்தோ அறியாமலோ வினைகளை செய்கின்றன.
இவ்வாறாகப் பிறவி தோறும் அவை செய்த நன்மை தீமைகளின் அடிப்படையில் இறைவன் அருள்புரிகின்றான்.
மறைப்பு நிலையாக இருந்து இறைவன் அடைவதற்கு அரியவன் என்னும் தத்துவத்தை பல்லக்கு வாகனம் உணர்த்துகின்றது.
தேர்த் திருவிழா இந்துக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.
தேரோட்டம் ஏன் திருவிழாக்களில் நடைபெறுகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.
இத் திருவிழாவின்போது தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மக்களுக்கு ஆசீர் வழங்க இறைவனின் திருவருள் எனக் கூறலாம்.
தேர்த் திருவிழா பார்க்கும் ஒவ்வொருவர் மனத்திலும் ஏழுவகைப் பிறப்பையும் மாய மல குணம்
ஏழும் நீக்கப் பெறுவதில் உட்கருத்தே ஏழாம் திருவிழாவாகும்.
மேலும் எந்தத் திருக்கோவிலிலும் இல்லாத பஞ்ச மூர்த்திகளின் திருத்தேரோட்டம் ஒரே நாளில்
நடைபெறுவது இத்திருத்திலத்திற்கு சிறப்பாகும்.
முப்புரம் ஆணவம், கன்மம், மாயை மூன்று அசுரர்கள் - தாருதாக்கன், கமலாக்கன், வித்யூன்மா,
மூவகை ஆன்மாக்கள்- விஞ்ஞானாகலர், பிரனாயகலர், சகலர்.
பரம்பொருளாகிய சிவபெருமானே ஆன்மாக்கட்கு மும்மல பந்த வாதனைகளை நீக்கி
பேரானந்தப் பெருவாழ்வளிப்பவர் என்ற உட்பொருளைத் தேர்திருவிழா விளக்குகிறது.
- இடபம் (காளை) தியாகத்தின் வடிவமாகும்.
- இக்காட்சி கைலாயத்தில் இறைவனைக் காணும் காட்சியாகும்.
இடபம் (காளை) தியாகத்தின் வடிவமாகும்.
மனிதன் தன்னலமற்றவனாக, பொது நலம் உடையவனாக வாழ வேண்டும்
என்னும் தத்துவத்தை உணர்த்துவதாக இடப வாகனம் அமைந்திருக்கின்றது.
ரிஷப வாகனம் பல மெய்ப்பொருள்களைக் கொண்டது.
ரிஷபத்தின் தத்துவம் மெய்ஞ்ஞானம் உடைய அனைவரும் இறைவனின் திருப்பாதங்களை அடைய வழி வகுக்கும் வாகனமாகும்.
ரிஷபத்தின் உருவத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு அவயமும் ஒவ்வொரு தத்துவத்தை விளக்குவதாகும்.
இக்காட்சி கைலாயத்தில் இறைவனைக் காணும் காட்சியாகும்.
- இவ்வுலகம் கோள்களின் இயக்கத்தால் ஆகியது.
- உலகம் முழுவதும் சூரிய, சந்திரனால் நிலைத்துள்ளது என்பதாகும்.
இவ்வுலகம் கோள்களின் இயக்கத்தால் ஆகியது.
சிவபெருமான் சூரிய சந்திரப்பிரபை வாகனங்களில் எழுந்தருளி அருள் வழங்கும் காட்சி திதிக்கோலம் என்று அழைக்கப்படுகிறது.
தன்னால் படைக்கப்பட்ட அண்டத்தைத் தானே காத்து வரும் தன்மை உடையவன் என்பதை
எடுத்துக் காட்டும் கோலமே சூரிய சந்திரப் பிரபை வாகனத்தின் தத்துவமாக அமைகின்றது.
உலகம் முழுவதும் சூரிய, சந்திரனால் நிலைத்துள்ளது என்பதாகும்.
திதிக் கோலத்தின் பொருள் என்னவெனில், படைக்கப் பெற்ற அனைத்து உயிர்களையும் இறைவனாகிய பரம்பொருள்
சூரிய சந்திரகோள்களுக்கு இடையே ஞானம் பெறும் தீச்சுடராக விளங்குவதாலேயே
பகலும் இரவும், தட்ப வெப்பமும் உண்டாகிறது.
எந்தவொரு தொழிலையும் செய்யவும், எந்தவொரு பொருளையும் பார்க்கவும் முடிகிறது.
அதனால் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது என்பதால் அண்ட சராசரங்களையும்காத்து வருகின்றார்
என்ற உண்மை விளங்கவே இந்தச் சூரிய சந்திர பிரபை வாகனத்தின் உட்பொருளை நினைவில் கொண்டு
பரம்பொருளைத் தரிசித்து அருள் பெறுவோம்.
- கற்பகமரம் கேட்டதைக் கொடுக்கும் தன்மை கொண்டது.
- படைத்தல், காத்தல், அழித்தல், மீண்டும் படைத்தல் என்னும் தத்துவ நிலையை உள்ளடக்கியது.
கற்பகமரம் கேட்டதைக் கொடுக்கும் தன்மை கொண்டது.
எனவே உயிரினங்கள் அனைத்திலும் இறைவன் உறைந்து விளங்குவான் என்னும்
தத்துவத்தை நிலை நிறுத்தவே கற்பகத்தரு வாகனம் வீதி உலாவில் பயன்படுத்தப்படுகின்றது.
இறைவனிலேயே எல்லாம் தொடக்கமாக அமைத்து அங்கேயே ஒடுங்குவதால், மீண்டும் படைப்புகள்
உண்டாக்கப்படுவதால் படைத்தல், காத்தல், அழித்தல், மீண்டும் படைத்தல் என்னும் தத்துவ நிலையை
உள்ளடக்கிய கற்பக விருட்சம் வாகனமாகப் பயன்படுத்தப் படுகின்றது.
- ஆலயங்களில் நடைபெறும் விழாக்களில் இறைவனின் திருவீதி உலா முக்கியத்துவம் வாய்ந்தது.
- இறைவன் ஐந்து தொழில்களையும் செய்து வருகிறான்.
ஆலயங்களில் நடைபெறும் விழாக்களில் இறைவனின் திருவீதி உலா முக்கியத்துவம் வாய்ந்தது.
உலக மக்களுக்கும், கோவிலுக்கு வர இயலாத முதியோர்கள், நோயாளிகளுக்காகவும் அருள் பாலிப்பதற்காக
இறைவன் திருவீதி எழுந்தருள்கிறார்.
அப்படி வீதி உலா வரும் இறைவனுக்காக பல்வேறு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உலக உயிர்களின் நன்மைக்காக இறைவன் ஆற்றிவரும் ஐந்தொழில்களின் தத்துவக் கருத்துக்களை
உணர்த்தும் நோக்கில் வாகனங்களும் உருவாக்கப்படுகின்றன.
திருவண்ணாமலை ஆலயத்தில் நடைபெறும் விழாக்களில் கற்பக விருட்சம், சூரிய சந்திரப் பிரபை,
இடப வாகனம், நாக வாகனம், பல்லக்கு லிங்கார வட்ட சொரூபப் பிரபை, யானை வாகனம், தேர்,
குதிரை வாகனம், அதிகார நந்தி பூத வாகனம், ராவணனின் திருக்கயிலை வாகனம் முதலியன குறிப்பிடத்தக்கனவாகும்.
இறைவன் ஐந்து தொழில்களையும் செய்து வருகிறான்.
அவரை விழாக்காலங்களில் அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு முடித்து
வாகனங்களில் ஏற்றி அவர் அழகை ரசித்து இன்புற்று ஈடு இணையற்ற பேரின்பம் பெற வழிபாடு செய்கிறோம்.
இதில் தீபத்திருவிழா உள்ளிட்ட உற்சவ நாட்களில் பத்து நாட்களும் அண்ணாமலையார்
வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கின்றார்.
அவ்வாகனங்களின் உட்பொருள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
- தஞ்சையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் புன்னைநல்லூர்.
- திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது.
தஞ்சையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் புன்னைநல்லூர்.
இத்தலத்தில் மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் பாம்புப் புற்றுக்கு பக்தர்கள்
பால், முட்டை ஆகியவற்றை வைத்து வணங்குகின்றனர்.
12 அடிக்குமேல் நீளம் உள்ள பாம்பு ஒன்று 6-4-1988-ல் இங்கு சட்டை உரித்து விட்டுச் சென்றிருக்கிறது.
அதை பொதுமக்களின் பார்வைக்காக கண்ணாடிப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழி பட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
சங்கரன்கோவில்
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது.
நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர்.
இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரைவில் நடைபெறும்.
- காஸ்யபருக்கும் கத்ரு என்பவருக்கும் பிறந்தவர் நாகர்.
- தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கினார், நாகர்.
ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாகபஞ்சமி விரதத்தை தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் விரதத்தை பின்பற்ற வேண்டும்.
நாக பஞ்சமி விரதம் ஏற்பட்டதற்கான புராண நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:
காஸ்யபருக்கும் கத்ரு என்பவருக்கும் பிறந்தவர் நாகர்.
தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கினார், நாகர்.
இதனால் கோபம் கொண்ட தாயர் கர்து, தாய் சொல்லை கேளாததால் தீயில் விழுந்து இறந்து போகும்படி மகனுக்கு சாபம் கொடுத்தாள்.
ஜனமேஜயன் மூலம் அந்த சாபம் எப்படி நிறைவேறியது என்பதை பார்க்கலாம்.
பரிசட்த்து மன்னன் பாம்புகளின் தலைவனாக விளங்கிய "தட்சகன்" என்ற கொடிய நாகத்தால் கடிக்கப்பட்டு இறந்தான்.
தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இணத்தையே அழிக்க உறுதி பூண்டான் பரிசட்த்தின் மகன் ஜனமேஜயன்.
அதற்காக "சர்ப்பயக்ஞம்" என்ற வேள்வியை நடத்தினான்.
பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன.
அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்க்கு சாப நிவர்த்தி கொடுத்தார்.
அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் ஒரு பஞ்சமி தினமாகும்.
எனவே இந்த நாக பஞ்சமி விரதம் ஆனி மாத சுக்லபஷ பஞ்சமியில் கொண்டாடும் வழக்கம் உள்ளது.
இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும்.
புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
விரதமுறை
நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பால் அபிஷேகம் செய்வார்கள்.
பின் மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள்.
பால், முட்டை முதலியவற்றை நிவேதன பொருளாக வைத்து வழிபடுவார்கள்.
மூன்று அல்லது ஒன்பது முறை கோவிலை சுற்றி வலம் வருவார்கள்.
- நாக ராஜ விரதத்தை சுக்ல சஷ்டி விரதம் எனவும் கூறுகிறார்கள்.
- மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி தூப தீப ஆராதனை செய்து விட்டு வர வேண்டும்.
நாக ராஜ விரதத்தை சுக்ல சஷ்டி விரதம் எனவும் கூறுகிறார்கள்.
இந்த நாகராஜ விரத பூஜை செய்பவர்கள் முற்பிறவியில் செய்த சர்ப்பதோஷங்கள் விலகி,
சத்புத்திர சந்ததிகள் ஏற்பட்டு சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்று கூறுகிறது சர்ப்ப தோஷ பரிகார நூல்.
இந்த விரதத்தையும் பூஜையையும் பெண்களே செய்ய வேண்டும்.
ஏதாவது ஒரு மாதத்தில் சுக்ல பட்ச சஷ்டி அன்று செய்ய வேண்டும். இதற்கு வெள்ளியிலோ, தங்கத்திலோ, செம்பிலோ, நாகவடிவம்
செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
சுக்ல பஷ சஷ்டியன்று அதிகாலையில் குளித்து ஆசார அனுஷ்டானங்களை முடித்து விநாயகரை வழிபட வேண்டும்.
பூஜை அறையிலோ கூடத்திலோ கலசம் அமைத்து அலங்கரித்து, நாகவடிவத்தை வைத்து சந்தனம் மற்றும் கும்குமம்
திலகமிட்டு பசும்பால், தேன், கல்கண்டு, கனி வகைகள், வைத்து நிவேதினம், செய்து தூபதீபம் காட்டுப் பிராத்தனை செய்ய வேண்டும்.
பிரார்த்தனை முடிந்ததும் பசும் பாலில் தேனைக் கலந்து பிறருக்கு பிரசாகமாக தந்துவிட்டு, விரதமிருப்பவர்களும் சாப்பிடலாம்.
காலையில் உபவாசமிருந்து பகல் நிவேதனப் பொருட்களை சாப்பிட்டு விட்டு, வேறு உணவு ஏதும் சாப்பிடாமல் இருக்கவேண்டும்.
மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி தூப தீப ஆராதனை செய்து விட்டு வர வேண்டும்.
அதன்பிறகு இரவு பலகாரம் சாப்பிடலாம். நாகராஜ விரதமிருப்பவர்கள் முறைப்படி இதைக் கடைப்பிடித்தால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.
அதற்கு அடையாளமாக நேரிலோ கனவிலோ சர்ப்பம் படம் விரித்து ஆடுவதைக் காணலாம் என சர்ப்ப தோஷபரிகார நூல் கூறுகிறது.
- கேரளவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது.
- பதிந்துள்ள மையை எடுத்து அரசர் உடலின் மீது பூசி, மந்திரத்தை உச்சரித்து கொண்டே தடவினார்.
கேரளவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது.
அந்த ஊரில் வசித்த நம்பூதிரி ஒருவர், வாசுகி, நாகயட்சி ஆகியோரின் நாக உருவத்தை சிலையாக செய்து
தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தார்.
ஒருநாள், நம்பூதிரிக்கு சருமவியாதி ஏற்பட்டு உடலில் பல இடங்களில் அரிப்பு உண்டானது.
அதற்கு நிறைய மருத்துவர்களை பார்த்தும் பல மருந்துகளை சாப்பிட்டும் சரும வியாதி குணமாகவில்லை.
நம்பூதிரி வணங்கும் நாகர் சிலைகளின் அருகில் இருந்த தீபத்தின் ஒளியில் இருந்து வரும் கரும்புகை,
சிலைகள் மேல் பதிந்ததால் சிலைகள் கருமையாக காட்சி கொடுத்தது.
அதை சுத்தம் செய்வதற்காக நம்பூதிரி, தன் கைகளால் அந்த சிலைகளின் மீது படிந்திருந்த கருப்பு நிறத்தை துடைத்தார்.
அந்த கருப்பு மை நம்பூதிரியின் கைகளில் பட்டு அவரே அறியாத வண்ணம் உடல் முழுவதும் வேகமாக பரவியது.
தன் உடலில் ஒட்டி இருந்த கருப்பு மையை கவனித்த நம்பூதிரி, அந்த மையை துடைத்தார்.
அப்போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. ஒவ்வாமையால் ஏற்பட்டு இருந்த தோல் நோய் நல்லவிதமாக குணம் அடைந்தது.
இந்த விஷயம் தெரிந்து பாண்டிய நாட்டின் மன்னர், "எனக்கு பல வருடங்களாக பாடாய்படுத்தி வரும்
இந்த சருமவியாதியை தீர்க்க, கேரளாவில் உள்ள அந்த நம்பூதிரியை அழைத்து வாருங்கள்" என்றார்.
மதுரை வந்த நம்பூதிரியும் அரசரின் சருமவியாதியை தீர்க்க, தான் வழிபடும் நாகர் சிலைகளின் மீது
பதிந்துள்ள மையை எடுத்து அரசர் உடலின் மீது பூசி, மந்திரத்தை உச்சரித்து கொண்டே தடவினார்.
மன்னரின் உடலில் இதுநாள் வரை இருந்த சருமவியாதி நீங்கியது.
இதை கண்டு அரசர் மகிழ்ந்து அந்த நம்பூதிரிக்கு பொன்னும் பொருட்களும் அள்ளி கொடுத்து அத்துடன்
பாதுகாப்புக்கு இரண்டு காவலர்களை துணை அனுப்பி நம்பூதிரியை சகல மரியாதையுடன்
கேரள தேசத்திற்கு திரும்ப அனுப்பி வைத்தார்.
- பரிகாரத் தலங்களில் செய்யும் வழிபாடுகள் மூலமாக ராகு, கேது தோஷங்கள் நம்மை விட்டு விலகுகின்றன.
- சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆச்சாரத்துடன் செய்ய வேண்டும்.
பரிகாரத் தலங்களில் செய்யும் வழிபாடுகள் மூலமாக ராகு, கேது தோஷங்கள் நம்மை விட்டு விலகுகின்றன.
சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆச்சாரத்துடன் செய்ய வேண்டும்.
சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும்.
பிக்னிக் செல்லது போல் செல்லாமல், பக்தி யாத்திரையாக மேற்கொள்ள வேண்டும்.
தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.
* காளஹஸ்தி
திருப்பதிக்கு மிக அருகில் உள்ளது. சென்னை-திருப்பதி சாலையில் உள்ளது.
ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் காளஹஸ்தி செல்லலாம்.
* திருநாகேஸ்வரம்
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு நாகருக்கு பாலாபிஷேகம் செய்யலாம்.
* திருமணஞ்சேரி
இது கும்பகோணத்திலிருந்து குத்தாலம் சென்று, அங்கிருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது.
* திருப்பாம்புரம்
கும்பகோணத்திலிருந்து திருவாரூர், நாகப்பட்டினம் - காரைக்கால் சாலையில் உள்ளது.
* வாழைத் தோட்டத்து அய்யன் கோவில்
திருப்பூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் மங்கலம் கிராமத்துக்கு அருகில் உள்ளது. அங்குள்ள புற்றுமண் சர்வரோக நிவாரணியாகும்.
* கீழ்பெரும்பள்ளம்
கேது சேஷத்திரம் - இங்கும் பரிகாரம் செய்து வைக்கப்படுகிறது. மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உள்ளது.
* மன்னார்சாலா - கேரளா
எர்ணாகுளம் அடுத்த ஆலப்புழையிலிருந்து ஒரு மணி நேரம் பயணத்தில், திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் ஹரிபாடு என்னுமிடத்தில், 5 கி.மீ தொலைவில் மன்னார்சாலா உள்ளது.
* பாம்பு மெய்காட்டு அம்பலம்
திருச்சூரிலிருந்து மாலா என்னும் ஊரில் உள்ளது.
- பாலாதிர்ஷ்ட தோஷம் இருக்கும் குழந்தைகளுக்கு முதுகில் எல்லாம் மச்சம் இருக்கும்.
- தொடை, தலை போன்று ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன்.
கழுத்தில் மாலைப் போட்டுக் கொண்டு, அதாவது கொடி சுத்தி குழந்தைப் பிறப்பது நாக தோஷத்தினால் ஏற்படுவது என்று இன்றும் கிராம மக்கள் கருதுகிறார்கள்.
ராகு - கேதுவின் ஒளிக்கற்றை, அதாவது கிரகணங்களால் பாதிக்கப்படுபதனால் ஏற்படும் விளைவுகளை நாக தோஷம் என்கிறோம்.
ஒரு சில குழந்தைகள் பிறக்கும்போதே மஞ்சள்காமாலை நோயுடன் பிறக்கின்றன. இதற்கும் கிரகண பாதிப்புதான் காரணம்.
லக்னத்தில் ராகு இருந்து சந்திரனுடன் கேது சேர்ந்தால் குழந்தை நீலமாகப் பிறக்கும்.
ராகு - கேது சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தால் அதனை சர்ப தோஷம் என்று கூறுவார்கள்.
லக்னம், லக்னத்தில் இருந்து முதல் இரண்டு இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலோ, லக்னாதிபதியை பாவ கிரகங்கள் பார்த்தாலோ பாலாதிர்ஷ்ட தோஷம் என்று கூறுவர்.
பாலாதிர்ஷ்ட தோஷம் இருக்கும் குழந்தைகளுக்கு முதுகில் எல்லாம் மச்சம் இருக்கும்.
நாக தோஷம் வலுவாக இருக்கும் பிள்ளைகளுக்கு பாம்பு போலவே மச்சம் இருக்கும்.
தொடை, தலை போன்று ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன்.
அதற்கேற்ற பலன்களை அது கொடுக்கும்.
நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று
கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்