என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போதை பாக்குகள் விற்றவர்கள் கைது"
- தேனி மாவட்டம் பல்வேறு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
- மதுபாட்டில் மற்றும் போதை பாக்குகள் விற்றவர்களை கைது செய்து அதனை பறிமுதல் செய்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை டாஸ்மாக் கடை அருகே கடமலைக்குண்டு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மதுவிற்ற செல்வம்(42) என்பவரை கைது செய்து 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பழனிசெட்டிபட்டி போலீசார் முல்லைநகர் பகுதியில் ரோந்து சென்றபோது புகையிலை, போதை பாக்கு விற்ற முனியம்மாள்(42) என்பவரை கைது செய்தனர். மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றபோது பூதிப்புரம் பெட்டிக்கடையில் மதுவிற்ற பொன்னாங்கன்(56) என்பவரை கைது செய்து 11 மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கண்டமனூர் போலீசார் டி.மீனாட்சிபுரம் மேற்குதெரு பகுதியில் ரோந்து சென்றபோது மாயழகன்(51) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கூடலூர் வடக்கு போலீசார் ரோந்து சென்றபோது கே.எம்.பட்டி விளக்கு அருகே மதுவிற்ற பரமசிவம்(52) என்பவரை கைது செய்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
போடி நகர் போலீசார் தேவர் காலனியில் ரோந்து சென்றபோது மதுவிற்ற நாகராஜ்(48) என்பவரை கைது செய்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ராயப்பன்பட்டி போலீசார் ேராந்து சென்றபோது சின்னஓவுலாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே மதுவிற்ற முருகன்(51) என்பவரை கைது செய்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்