என் மலர்
நீங்கள் தேடியது "போதைபொருள் கைது"
- சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாகியிருக்கும் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார் ஷைன் டாம் சாக்கோ
- ஷைன் டாம் சாக்கோ ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியல் படப்பிடிப்பு தளத்தில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் போதையில் அத்துமீறியதாகவும், ஆகையால் போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகருடன் நடிக்கமாட்டேன் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் நடிகை வின்சியிடம் அத்துமீறியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது. ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாகியிருக்கும் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார்.
இந்தநிலையில் கேரளாவில் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய நபராக இருக்கும் சஜீரை போலீசார் தேடிவந்தனர். அவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோவுடன் தங்கியிருக்கலாம் என்று கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர். அப்போது நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.
அவர் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள், ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகியிருந்தது. நடிகர் ஷைன் டாம் சாக்கோ எதற்காக தப்பி ஓடினார்? என்ற சந்தேகம் போலீசா ருக்கு எழுந்தது. ஆகவே அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக அவரை போலீசார் தேடினர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் தமிழகத்திற்குள் தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரது செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை.
ஆகவே அவரை விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு வழங்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலைய அதிகாரிகள், திருச்சூர் முண்டூரில் உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இல்லத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை.
நடிகரின் தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் நடிகர் விசார ணைக்கு ஆஜராக வேண்டிய நோட்டீசை போலீசார் கொடுத்தனர். இன்று காலை 10 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டரின் முன்பு ஆஜராக வேண்டும் என்று நடிகருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
நடிகர் ஒரு பயணத்தில் இருப்பதாவும், ஆகவே அவர் இன்று பிற்பகல் 3 மணிக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராவார் எனவும் அவரது தந்தை தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜரானார்.
அவரிடம், போலீசார் வந்தபோது தப்பி ஓடியது ஏன்? ஓட்டலில் எதற்காக அறை எடுத்து தங்கியிருந்தார்? தப்பியோடி தலைமறைவாகியது ஏன்? என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்து வதற்காக 32 கேள்விகளை போலீசார் தயாரித்து வைத்திருந்தனர்.
விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடம் போலீசார் சரமாரியாக கிடுக்கிப்படி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். தற்பொழுது ஷைன் டாம் சாக்கோ நடிகரை போலிசார் கைது செய்துள்ளனர்.
இவர் மீது போதை தடுப்பு பிரிவு 27 மற்றும் 29 சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போதை பொருள் பயன்படுத்தியதுக்காகவும் , கிரிமினல் செயல்களில் ஈடுப்பட்டதற்காகவும் இந்த பிரிவில் கைது செய்துள்ளனர்.
சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1 கிலோ கஞ்சா பறிமுதல்
- போலீசார் விசாரணை
நெமிலி:
நெமிலி அடுத்த பள்ளூர் கிராமம் வாராகி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அரசப்பன்.இவரது மகன் தணிகை வேல் (59). இவர் அதே பகுதியில் பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது கடையில் கஞ்சாவை மறைத்து வைத்து அந்தப் பகுதியில் விற்பனை செய்யப் படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்யனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று பிற்பகல் எஸ்பி தீபா சத்யன் பள்ளூர் கிராமத்தில் உள்ள தணிகைவேலின் கடையில் சோதனை மேற்கொண்டார்.
அப்போது கடையின் மேல் கூரையில் இருந்து பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றார்.