என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ருதன்ஜெய் நாராயணன்"

    • புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதன்ஜெய் நாராயணன் திருப்பூர் சப்-கலெக்டராக இன்று காலை பதவி ஏற்றார்.
    • எனது முழு உழைப்பும் திருப்பூர் மக்களுக்காக இருக்கும் என்ற பொறுப்பேற்ற பின் ஸ்ருதன்ஜெய் நாராயணன் கூறினார்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பயிற்சி பெற்று வந்த சப்-கலெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டனர்.

    அதன்படி திருப்பூர் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் சப்-கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் பணி நியமனம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதன்ஜெய் நாராயணன் திருப்பூர் சப்-கலெக்டராக இன்று காலை பதவி ஏற்றார். இவர் நடிகர் சின்னிஜெயந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொறுப்பேற்ற பின் ஸ்ருதன்ஜெய் நாராயணன் கூறியதாவது:-

    எனது முழு உழைப்பும் திருப்பூர் மக்களுக்காக இருக்கும். திரைத்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எனது பெற்றோர் சிறு வயது முதலே கல்வியை முதன்மையாக போதித்தனர். அவர்களுக்கு எனது நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2020ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற அதிகாரிகள், வெளிமாநிலங்களில் பயிற்சி பெற்று வந்தனர்.
    • ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 12 பேர் தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார் அவர் கடந்த, 2020ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற அதிகாரிகள், வெளிமாநிலங்களில் பயிற்சி பெற்று வந்தனர். பயிற்சி நிறைவடைந்த நிலையில், பல்வேறு அரசுத்துறைகளிலும் பணியாற்றி வந்தனர். புதுடில்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 12 பேர் தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களில், மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்த ஸ்ருதன்ஜெய் நாராயணன், திருப்பூர் சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர் வருவாய் கோட்டத்தின் சப்-கலெக்டராக நியமிக்கப்ப ட்டுள்ள ஸ்ருதன்ஜெய் நாராயணன், சினிமா நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×