என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதீஷ்"

    • நடிகர் சதீஷ் காமெடியனாக பல படங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
    • கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது சதீஷுக்கு.

    நடிகர் சதீஷ் காமெடியனாக பல படங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காமெடி கலாட்டாக்களை செய்து வந்த இவர் நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். அதைத்தொடர்ந்து வித்தைக்காரன் மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

    கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது சதீஷுக்கு. அதைத்தொடர்ந்து சட்டம் என் கையில் எனும் படத்தில் நடித்து வருகிறார் இப்படம் ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில வருடங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தை சிக்சர் திரைப்படத்தை இயக்கிய சச்சி இயக்கியுள்ளார். சதீஷுடன் இணைந்து வித்யா பிரதீப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி தற்பொழுது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் சதீஷுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
    • திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் சதீஷ் காமெடியனாக பல படங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காமெடி கலாட்டாக்களை செய்து வந்த இவர் நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். அதைத்தொடர்ந்து வித்தைக்காரன் மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

    கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் சதீஷுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து சட்டம் என் கையில் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

    இப்படத்தை சிக்சர் திரைப்படத்தை இயக்கிய சச்சி இயக்கியுள்ளார். சதீஷுடன் இணைந்து வித்யா பிரதீப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.

    திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. டீசர் காட்சிகள் மிகவும் திரில்லிங்காக அமைந்துள்ளது. யாரோ ஒருவர் கொலை செய்கிறார். அது யார் செய்தது என்பதை தேடும் பணிகளில் காவல் அதிகாரிகள் இருக்க மறுபக்கம் சதீஷ் இச்சம்பவத்தில் எப்படி உள்ளே வந்தார் என டீசர் காட்சிகள் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சட்டம் என் கையில் எனும் படத்தில் சதீஷ் நடித்துள்ளார்.
    • இப்படத்தை சிக்சர் திரைப்படத்தை இயக்கிய சச்சி இயக்கியுள்ளார்.

    நடிகர் சதீஷ் காமெடியனாக பல படங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காமெடி கலாட்டாக்களை செய்து வந்த இவர் நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக உருமாறினார். அதைத்தொடர்ந்து வித்தைக்காரன் மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

    கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் சதீஷுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து சட்டம் என் கையில் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி செப்டம்பர் மாதம் 27 ஆம் தெதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தை சிக்சர் திரைப்படத்தை இயக்கிய சச்சி இயக்கியுள்ளார்.சதீஷுடன் இணைந்து வித்யா பிரதீப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.

    ஓர் இரவு நடக்கும் சம்பவமாக இப்படம் அமைந்துள்ளது. ஒரு கொலை பழியில் இருந்து தப்பிக்க போராடும் கதையாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. திரைப்படம் தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரைப்படத்தை திரையரங்கிள் காணத்தவறவிட்டவர்கள் ஓடிடியில் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ்
    • அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா மற்றும் பளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக் படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர். திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார். இப்படத்திற்கு கிஸ் என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் பரவி வருகின்றன ஆனால் படக்குழு இதுவரை எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் நடித்துள்ளார்
    • அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார்

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணி சமீபத்தில் முடிவடைந்த நிலையில். படத்தின் டைட்டிலை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. போஸ்டரில் கவின் ஸ்டைலிஷ் தோற்றத்தில் guitar- உடன் இருக்கிறார்.

    இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார். இப்படத்திற்கு கிஸ் என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் பரவி வருகின்றன. இத்திரைப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாணவி சத்தியபிரியா கொலை வழக்கு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • மாணவி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள சதீசுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சத்தியபிரியா (வயது23). போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். அதே குடியிருப்பில் வசித்து வந்த சதீஷ் (23) என்பவர் சத்திய பிரியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். அவரது காதலை சத்திய பிரியா ஏற்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் கடந்த 13-ந்தேதி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் மாணவி சத்தியபிரியாவை மின்சார ரெயில் முன்பு தள்ளி கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக வாலிபர் சதீசை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது முதல்கட்ட விசாரணையை கடந்த 15-ந்தேதி தொடங்கினார்கள். பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட போலீசார் ரெயில் நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    ரெயில் என்ஜின் டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் ரெயில் நிலையம், அதை சுற்றி உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.

    இதன் அடுத்தக்கட்டமாக மாணவி சத்திய பிரியாவின் தோழிகள், குடும்பத்தினர், சம்பவத்தை நேரில் பார்த்து பேட்டி அளித்தவர்கள் ஆகியோர்களின் விவரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் மாணவி சத்தியபிரியாவின் தாயாரான போலீஸ் ஏட்டு ராமலட்சுமி, அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், சதீசின் குடும்பத்தினர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    மாணவி சத்தியபிரியா கொலை வழக்கு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மாணவி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள சதீசுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் சதீஷ் மீதான குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

    இதற்காக சிறையில் உள்ள சதீசை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

    தீபாவளி முடிந்த பிறகு இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது. போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்ததும் இந்த வழக்கு விசாரணை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • இது குறித்து நடிகர் விஜய் ஆண்டனியின் பதிவு வைரலாகி வருகிறது.

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.


     சத்திய பிரியா - சதீஷ்

    இந்த தனிப்படை போலீசார் சென்னை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நள்ளிரவில் துரைப்பாக்கம் கிழக்கு கடற்கரை பகுதியில் சுற்றித் திரிந்த, கொலையாளி சதீசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

    விசாரணைக்குப் பிறகு இன்று பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை ௧௫ நாட்கள் அதாவது 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.


    விஜய் ஆண்டனி

    இந்நிலையில், மாணவி சத்திய பிரியா கொலை வழக்கு குறித்து நடிகர் விஜய் ஆண்டனியின் பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ×