search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சாம்பியன்ஷிப் போட்டி"

    • 8 முறை உலக சாம்பியன் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன்.
    • மகன்கள் இருவரும் மாநில, மாவட்ட போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர்

    திருவனந்தபுரம்:

    பகலில் ஆட்டோ டிரைவர்.... இரவில் ஜிம்மில் பயிற்சி... சாதனை படைத்தும் நிதி இல்லாததால்... சாம்பியன் கோப்பை போட்டியில் பங்கேற்க முடியாத சூழல். இது கேரள மாநில ஆட்டோ டிரைவர் ஒருவரின் சோகம்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவுகத் அலி. இவர் பொழுது போக்காக தனது பள்ளிப் பருவத்தில் மல்யுத்தம் செய்ய தொடங்கினார். உடற்பயிற்சி கூடம் சென்ற அவர், அங்கு கை மல்யுத்த விளையாட்டை அறிந்து அதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். படிப்புக்கு பிறகு ஆட்டோ டிரைவரான சவுகத் அலி, பல்வேறு போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    தேசிய கை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப்பதக்கம், ஒரு வெண்கல பதக்கம் வென்ற அவர், அக்டோபர் மாதம் கோவாவில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கும், மால்டோவாவில் நடைபெற உள்ள உலக சாம்பியன் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். ஆனால் நிதி இல்லாமை காரணமாக அவர் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க இயலாத நிலையில் உள்ளார்.

    இதுபற்றி சவுகத் அலி கூறுகையில், நான் படிக்கும் காலத்தில் விடுமுறையின் போது கட்டுமான தளங்களில் வேலை பார்த்தேன். அப்போது செங்கல் சுமந்தது, வலுவான தசைகளை உருவாக்க உதவியது. 18 வயதில் தொழில் ரீதியாக கை மல்யுத்தம் போட்டியில் பங்கேற்றேன். இது வரை தங்கம், வெள்ளி, வெண்கலம் என 14 பதக்கங்கள் வென்றுள்ளேன். 10 முறை தேசிய அளவிலான சாம்பியன் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். 8 முறை உலக சாம்பியன் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன். ஆனால் போதிய நிதி திரட்ட முடியாததால் அதில் பங்கேற்க முடிவதில்லை. தற்போதும் நிலுவை தேதிக்கு முன்னதாக ரூ.1.8 லட்சம் திரட்ட வேண்டி உள்ளது. அது என்னால் முடியாது.

    தற்போது எனது மனைவி நஜ்முன்னிசா, மகன்கள் முகமது இர்பான், முகமது ஷர்பான் ஆகியோரும் கை மல்யுத்தத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மகன்கள் இருவரும் மாநில, மாவட்ட போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர், மனைவி நஜ்முன்னிசா மாநில ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இருப்பினும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க முடியாமல் இருப்பது வேதனையாக தான் உள்ளது. ஆனால் என்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்கேற்கலாம் என்ற ஆர்வத்தில் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன் என்றார்.

    • உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் செப்டம்பர் 16-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் செப்டம்பர் 16-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வுக்கான போட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால கமிட்டி நடத்துகிறது. ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணி வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுப்பி வைக்க ஜூலை 15-ந் தேதி கடைசி நாளாகும்.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்து இருப்பதுடன் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியை தங்களுக்கு ஆகஸ்டு மாதத்தில் நடத்த வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்டு இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி போராட்டத்தில் ஈடுப்பட்ட மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, சத்யவார்த் காடியன், ஜிதேந்தர் கின்ஹா மற்றும் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் ஆகியோருக்கு ஆசிய விளையாட்டு மற்றும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளித்துள்ளது. அவர்கள் தங்கள் எடைப்பிரிவில் முதலிடத்தை பிடிப்பவர்களுடன் ஆகஸ்டு 5 முதல் 15-ந் தேதிக்குள் நடைபெறும் தகுதி போட்டியில் ஒரு முறை மோதுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது இந்திய வீரர்.
    • பாரீசில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

    எகிப்த் நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் கலந்து கொண்ட 18 வயதான இந்திய வீரர் ருத்ராங்கஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் இத்தாலி வீரர் டானிலோ டென்னிஸ் சொலாஸ்ஸோவை 17-13 என்ற கணக்கில் அவர் வீழ்த்தினார்.

    இதன் மூலம் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி துப்பாக்கிச் சூடும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் உறுதி செய்துள்ளார்.

    ×