என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கார்விங் கலை"
- பல்வேறு உருவங்கள் மற்றும் எழுத்துக்களை செதுக்கி கலைத்திறனை வெளிப்படுத்தி வருகிறார் அரவிந்தன்
- சாக்பீசில் ‘அ’ என்ற எழுத்துக்களை வெட்டியெடுத்து அவற்றை வைத்து திருவள்ளுவரின் உருவத்தை உருவாக்கி உள்ளார்.
சீர்காழி:
சீர்காழி அருகே அரவிந்தன் என்ற பட்டதாரி வாலிபர், கார்விங் முறையில் மிகச்சிறிய அளவில் சிற்பங்களை செதுக்குவதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரத்தைச் சேர்ந்த அரவிந்தன், சிறுவயது முதலே ஓவியம் வரைவதிலும் சிற்பங்கள் செதுக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். 4000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ள இவர், சோப்பு, பென்சில் முனை, சாக்பீஸ் போன்றவற்றில் கார்விங் முறையில் பல்வேறு உருவங்கள் மற்றும் எழுத்துக்களை செதுக்கி தொடர்ந்து தனது கலைத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த சாதனைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் 1330 குறட்பாக்களையும் பென்சில் முனையில் செதுக்கி சாதனை படைத்துள்ளார். இந்த எழுத்துக்களை வெறும் கண்ணால் பார்க்க இயலாது, லென்ஸ் மூலமாகவே பார்க்க முடியும்.
இதேபோல் சாக்பீசில் 'அ' என்ற எழுத்துக்களை 1330 எண்ணிக்கையில் மிகவும் நுணுக்கமாக வெட்டியெடுத்து அவற்றை வைத்து திருவள்ளுவரின் உருவத்தை உருவாக்கி உள்ளார். இதற்காக நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் செலவிட்டு, 7 நாளில் வெற்றிகரமாக முடித்துள்ளார்.
அவரது சாதனையை சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களை நிற்க வைத்து திருவள்ளுவர் உருவத்தை வரைந்துள்ளார்.
தனது கலைப் பயணம் பற்றி பேசிய அரவிந்தன், தொடர்ந்து முயற்சி செய்து கின்னஸ் சாதனை படைப்பதே தனது லட்சியம் என்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்