search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்"

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

    கோபன்ஹெகன்:

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, சீன தைபே வீராங்கனையான பை யூ போ உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 21-8 என பிவி சிந்து வென்றார். இரண்டாவது செட்டில் 13-7 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது சீன தைபே வீராங்கனை போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ஏற்கனவே நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப் ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.
    • கால் இறுதியில் லக்‌ஷயா சென் ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதுகிறார்.

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.

    முன்னாள் சாம்பியனான அவர் சிங்கப்பூரின் லோ கீன்யூலிடம் 13-21, 15-21 என்ற நேர்செட் கணக்கில் தோற்று வெளியேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-9, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் பிரணாய்யை தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடைபெறும் கால் இறுதியில் லக்‌ஷயா சென் ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதுகிறார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடக்கும் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரெங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோவூய்யிக் ஜோடியுடன் மோதுகிறது.

    ×