என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவோடு மழைநீர்"

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குப்பை கழிவோடு மழைநீர் தேங்கி நிற்பதில் மாணவர்கள் நடந்து செல்கிறார்கள் .
    • உரிய தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கோரிக்கை வைக்கின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த சிலநாட்க ளாக பலத்து மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதேபோல திருநாவ லூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கன மழை நீடித்து வரு கிறது. செங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் குப்பை கழிவோடு மழைநீர் தேங்கி நிற்பதில் மாணவர்கள் நடந்து செல்கிறார்கள் .

    அதனால் மாணவர்களுக்கு நோய் தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பச்சிளம் குழந்தை களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற காலம் கடத்தா மல் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அதி காரிகள் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கோரிக்கை வைக்கின்றனர்.

    ×