என் மலர்
நீங்கள் தேடியது "தடை செய்யப்பட்ட புகையிலை"
- மளிகை கடையில் பதுக்கி விற்பனை
- 10 பாக்கெட்டுகள் பறிமுதல்
வாலாஜா
வாலாஜா நெல்லிசெட்டி தெருவில் வாலிபர் ஒருவர் மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் கடையில் சோதனை நடத்தி 10 பாக்கெட் புகையிலை பொருட் களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- ரிஷிவந்தியம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அப்துல்பரித்(60) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியம் காவல் உதவி ஆய்வாளர் துர்காதேவி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரிஷிவந்தியம் காமராஜர் தெருவை சேர்ந்த அப்துல்வகாப் மகன் அப்துல்பரித்(60) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 5 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.