என் மலர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் கொடி"
- முஸ்தாக் கான் தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி உள்ளார்
- முஸ்தாக் கான் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராய்கர்:
சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டம் அடல் சவுக் பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் கான். இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் முஸ்தாக் கான் தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி உள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று நடவடிக்கை எடுத்து முஸ்தாக் கானை கைது செய்தனர்.
அவர் மீது 153 'ஏ' பிரிவின் கீழ் (மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்கள் இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கு பாதகமான செயல்களை செய்தல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவரது வீட்டில் இருந்த பாகிஸ்தான் கொடியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- உத்தரகாண்ட் மாநிலம் நேபாளம் மற்றும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்துள்ளது.
- உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாகிஸ்தான் நாட்டு கொடிகள், பேனர்கள் கிடந்தன.
உத்தர்காசி:
உத்தரகாண்ட் மாநிலம் நேபாளம் மற்றும் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசி மாவட்டத்தில் துல்யாடா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதிக்குள் பாகிஸ்தான் நாட்டு கொடிகள் மற்றும் பேனர்கள் கிடந்தன.
வனப்பகுதியில் கிடந்த பலூன்களில் பாகிஸ்தான் கொடிகள் மற்றும் உருது மொழியில் எழுதப்பட்ட பேனர்கள் கிடந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அங்கு ஆய்வு செய்தனர்.
மத்திய விசாரணை அமைப்புகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.