என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை வானிலை"

    தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியுள்ளது.

    சென்னை புறநகர் பகுதிகளிலும் காற்று பலமாக வீசவதால் வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இருப்பினும், காலை முதல்  வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென வானம்  மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இது வெயிலை தணித்து இதமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால், பொது மக்கள் உற்சாகமாக உள்ளனர். மேலும், பலத்த மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மயைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • வேலூர், கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், புதுச்சேரி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெப்பம் சதம்.
    • வேலூரில் காலை முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்த நிலையில் காற்றுடன் கூடிய கனமழை.

    தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதன்படி, வேலூர், கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், புதுச்சேரி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 104.18 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. கடலூரில் 102.56 டிகிரி, ஈரோட்டில் 101.84 டிகிரி, மதுரையில் 100.4 டிகிரி, சேலம் மற்றும் புதுச்சேரியில் தலா 100.4 டிகிரி, திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் தலா 103 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    வேலூரில் காலை முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்த நிலையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    • சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.
    • தமிழகம், புதுச்சேரியில் வரும் 5ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் வரும் 5ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் உள்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 13 செ.மீ., பெரம்பூரில் 12 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

    • வழக்கமான அளவைவிட தென்மேற்கு பருவமழை 8 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.
    • சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 74 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.

    தென்மேற்கு பருவக்காற்று வலிகிவிட்டது என்றும் இன்னும் 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழை இன்றுடன் நிறைவடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த 3 தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் தொடங்கும்.

    வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் சற்று வலுவிழந்து காணப்படும்.

    அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் வரும் 21ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழை காலத்தில் 354 மிமீ மழை பெய்துள்ளது. வழக்கமான அளவைவிட தென்மேற்கு பருவமழை 8 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.

    சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 74 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • தமிழ்நாட்டில் நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.
    • அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், வயதானவர்கள், கர்ப்பிணிகள் பகல் நேரத்தில் வெளியே செல்லவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    தமிழ்நாட்டில் நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது.

    குறிப்பாக, திருப்பத்தூர் - 106.88, ஈரோடு - 104, சேலம் - 103.28, கரூர் பரமத்தி - 102.56, தருமபுரி, நாமக்கல் - 102.2, மதுரை விமான நிலையம் - 101.12, திருத்தணி - 100.94, வேலூர் - 100.76, திருச்சி - 100.58, மதுரை நகரம் - 100.4 ஆகும்.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, தஞ்சை, நெல்லை, திருவாரூர், கன்னியாகுமரி, நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    • ஏப்ரல் 13ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
    • ஏப்ரல் 14, 15ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் மழைபெய்யக்கூடும்.

    தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கேவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், ஏப்ரல் 13ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 14, 15ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • இன்று முதல் 6ம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
    • நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் வெப்ப அலை பதிவாகியுள்ளது.

    தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கோடை காலம் என்பதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இருக்கும்.

    தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகரிக்கும்.

    குறிப்பாக, தருமபுரி, திருத்தணி, திருப்பதூர் உட்பட 10 இடங்களில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகும்.

    இன்று முதல் 6ம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

    நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    நாளை முதல் கத்திரி வெயில் தொடங்கவுள்ள நிலையில், முதல் ஒரு வாரம் வெப்பம் அதிகரித்து காணப்படும்.

    சென்னையை பொருத்தவரையில் கோடை மழை பெய்ய வாய்ப்பில்லை.

    கால நிலை மாற்றம் மட்டுமே வெப்ப அலைக்கு காரணம் இல்லை.

    நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் வெப்ப அலை பதிவாகியுள்ளது.

    அடுத்த 5 நாட்கள் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் கனமழை பெய்யும்.
    • அரபிக்கடல், வங்க கடலில் உள்ள 2 நிகழ்வுகளால் கனமழை பெய்யும்.

    தமிழகத்தின் வானிலை தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தென் கிழக்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தஞ்சை, திருவாரூர், தேனி, மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் கனமழை பெய்யும்.

    15ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் கனமழை பெய்யும்.

    16ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டில் கனமழை பெய்யும்.

    சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரித்து 15,16 தேதிகளில் அதிகனமழை பெய்யும்.

    முன்னதாக, அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 95.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    அரபிக்கடல், வங்க கடலில் உள்ள 2 நிகழ்வுகளால் கனமழை பெய்யும்.

    மழை தொடர்பான அனைத்து தகவல்களும் அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மழை தொடர்பான அரசு அதிகாரிகளுடன், தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்.

    இயல்பான காலத்தில் பருவ மழை தொடங்குகிறது. அடுத்த 5 தினங்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்.

    கன மழை, மிக கனமழை, அதிகனமழை என்று தான் கூறமுடியும். எவ்வளவு செ.மீ மழை பெய்யும் என்பதை முன்கூட்டியே கணித்துக் கூறும் அளவுக்கு அறிவியல் வளரவில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
    • இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும்.

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், இதுதொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும்.

    அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும்.

    இலங்கை மற்றும் தமிழக கடற்பகுதியை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். புயல் என்பது கடலின் வெப்ப நிலைமை பொறுத்து உருவாகும்.

    டெல்டா மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும். இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு நாளை முதல் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.

    சென்னையில் 27 மற்றும் 28ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடற்பகுதிகளில் 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் காலை, மாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது.
    • காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. இதனால், சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இருப்பினும், பெரும்பாலான இடங்களில் பனிக்காலம் தொடங்கிய நிலையில் வானிலை காணப்படுகிறது.

    இதனால், காலை, மாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், சென்னையில் இன்றைய காற்றின் தரம் மோசடைந்து இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது

    அதாவது, சென்னையில் கடந்த 10 நாட்களில் காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் காற்றின் தரக்குறியீடு 39ல் இருந்து 142 ஆக மோசமடைந்து மிதமான பாதிப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை அடுத்த மணலியில் காற்று தரக்குறியீடு 238 ஆக உயர்ந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    அபிராமிபுரத்தில் 193 புள்ளிகள், அச்சுதன் நகரில் 151 புள்ளிகள், அந்தோணி பிள்ளை நகரில் 201 புள்ளிகள், அரும்பாக்கத்தில் 181 புள்ளிகள், காந்திநகர் எண்ணூரில் 116 புள்ளிகள், ஐஎன்டியுசி நகரில் 177 புள்ளிகள், கொடுங்கையூரில் 221 புள்ளிகள், கொரட்டூரில் 152 புள்ளிகள், குமாரசாமி நகரில் 187 புள்ளிகள், ராயபுரத்தில் 205 புள்ளிகள், பெருங்குடிகள் 187 புள்ளிகள், பொத்தேரியில் 167 புள்ளிகள், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 164 புள்ளிகள் என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்து இருக்கிறது.

    ×