search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வர்த்தக இலக்கு"

    • முன்னோர்கள் வாழ்ந்ததற்கும், வியாபாரம் செய்ததற்கான சான்று உள்ளது.
    • கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    நொய்யல் கரையில், திருப்பூர் பொங்கல் திரு விழா, 15 ல் துவங்கி நடைபெற்றது. கலெக்டர் வினீத் நேற்று மாலை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு கலெக்டர் வினீத் தலைமைவகித்தார். ஜீவநதி நொய்யல் சங்க தலைவர் ரத்தினசாமி வரவேற்றார்.

    எம்.பி., சுப்பராயன், அமைச்சர் கயல்விழி, எம்.எல்ஏ., செல்வராஜ், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- நொய்யலை பாதுகாப்ப தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நொய்யல் நதிக்கரைக்கு இடதுபுறம் கொடு மணல் உள்ளது. அங்கு முன்னோர்கள் வாழ்ந்த தற்கும், வியாபாரம் செய்ததற்கான சான்று உள்ளது.

    பொருட்கள்

    கொடுமணல் ஊராட்சி காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது.கொடுமணல் சென்று அங்கு பொருட்களை அனைவரும் பார்க்க வேண்டும். தமிழ்நாடு பல்வேறு இடங்களில் தமிழர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தார்கள் என கீழடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சான்று உள்ளது.

    திருப்பூர் தொழிலுக்கு நல்ல வழிவகை செய்ய ப்படும். முதலமைச்சர் தோள் கொடுப்போம் தொழிலுக்கு என்ற கூட்டத்தை திருமுருகன் பூண்டியில் நடத்தினார்.

    இந்திய அளவில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு 13-ம் இடத்தில் இருந்தது. தற்போது 3-ம் இடத்தில் வகிக்கிறது. முதலமைச்சர் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

    பின்னலாடை உற்பத்தி தொழில்

    பஞ்சு விலையில் நிலையற்ற தன்மை, கொரோனா, தொடரும் உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நெருக்கடியான இந்த நிலை மாறும். தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு கைகொடுக்கும். லட்சம் கோடி ரூபாய் என்ற வர்த்தக இலக்கை திருப்பூர் பின்னலாடை துறை விரைவில் எட்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

    மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பால சுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், 'டிப்' தலைவர் மணி உள்பட பலர் பங்கேற்றனர். பொறி யாளர் சண்முகராஜ் நன்றி கூறினார்."

    • திருப்பூரில் பெத்திசெட்டிபுரத்தில் உள்ள ஆடிட்டர் அசோசியேஷனில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு கடனுதவி மற்றும் அரசு மானிய உதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் சார்பில், நாடுமுழுவதும், குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு கடனுதவி மற்றும் அரசு மானிய உதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் திருப்பூரில் பெத்திசெட்டிபுரத்தில் உள்ள ஆடிட்டர் அசோசியேஷனில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஆடிட்டர் அசோசியேஷன் திருப்பூர் கிளை தலைவர் வரதராஜன், செயலாளர் செந்தில் குமார் முன்னிலை வகித்தனர்.

    இதில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசுகையில், 1984 பஞ்சப்படி பிரச்சினை எழுந்தபோதே, பின்னலாடை தொழில் இனி தாக்குப்பிடிக்காது என்றே பலரும் நினைத்தனர். ஆனால் இன்று அடுத்தடுத்து பல சோதனைகளை கடந்து தொழில் வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.வங்கிகள், தொழில் முனைவோருக்கு தொடர்ந்து கடனுதவி வழங்கி, பின்னலாடை துறை வளர்ச்சிக்கு கைகொடுக்க வேண்டும் என்றார்.

    மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:- திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை ஒரு லட்சம் கோடி என்கிற வர்த்தக இலக்கை நோக்கி வேகமாக பயணித்து வருகிறது. மாநகர உள்கட்டமைப்பு மேம் பாட்டுக்கு தொழில்துறையினர் கைகொடுக்கவேண்டும்.சாயக்கழிவுநீர் பிரச்சினை உட்பட எத்தனையோ சோதனைகளை கடந்துதான் இன்று சாதித்து கொண்டிருக்கிறது. தேவையான கடனுதவிகளை வழங்கி வங்கிகளும், ஆலோசனைகளை வழங்கி ஆடிட்டர்களும் தொழில் வளர்ச்சிக்கு பக்கபலமாக உள்ளனர். நாட்டின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலைநகராக திருப்பூர் உயர்ந்துள்ளது. பிற நாடுகளுடனான போட்டியை எதிர்கொண்டு திருப்பூர் பின்னலாடை துறை வர்த்தக இலக்கை விரைவில் எட்டிப் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×