search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிச்சரிவு"

    • சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
    • பனிச்சரிவு காரணமாக சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த 172 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் உள்ள கான்செர்பால் மாவட்டம் சர்பால் கிராமத்தில் ஜோஜிவா சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 172 தொழிலாளர்களும் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் சுரங்கத்துக்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்தனர்.

    இதுதொடர்பாக இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு ராணுவ வீரர்கள் விரைந்து சென்றனர்.

    அவர்கள் பனிச்சரிவு காரணமாக சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த 172 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டனர்.

    • ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது.
    • பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

    ஜம்மு:

    கடந்த சில தினங்களாகவே ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் மச்சிலி செக்டாரில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

    இந்த பனிச்சரிவில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் சிக்கினர். இதில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×