என் மலர்
நீங்கள் தேடியது "நூலக"
- 55-வது தேசிய நூலக வார விழா நடந்தது
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் (பொ) சந்திரசேகரன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் அகவி முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட துணை தலைவர் தமிழ்குமரன், முன்னாள் வாசகர் வட்ட தலைவர் டாக்டர் கோசிபா, அரியலூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் தமிழ்மாறன், வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் வைரமணி உட்பட பலர் பேசினர்.
பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் தேசிய நூலக வார விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவி களிடையே நடந்த கட்டுரை , ஓவியம், பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில், பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித்தேர்வுக்கான அனைத்து புத்தங்களும் இடம்பெற்றுள்ளது. இங்கு படித்த தேர்வாளர் 30 பேர் குரூப்-2 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நூலகத்தை கல்லூரி மாணவ,மாணவிகள், போட்டிதேர்வர்கள் அனை வரும் பயன்படுத்தி டிக்கொண்டு தங்களது கல்வி அறிவினை மேம்படுத்தி க்கொள்ளலாம். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமர்ந்து படிக்க வசதியாக இருக்கை அறை கேட்டனர். செய்துகொடுத்துள்ளேன். இது போல் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என தெரிவித்தார்.
இதில் நூலக அலுவலர்கள், நூலர்கள், மைய நூலக ப்பணியாளர்கள், போட்டி த்தேர்வாளர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட மைய நூலகர் செல்வராஜ் வரவேற்றார். முடிவில் நூலகர் பாண்டியன் நன்றி கூறினார்.