search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் 2024"

    • ரிங்கு சிங் கடந்த 6 மாதங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.
    • தென் ஆப்பிரிக்கா மண்ணில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்.

    புதுடெல்லி:

    ஐசிசி சார்பில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர். இந்த அணி குறித்து முன்னாள் வீரர்கள் ஆதரவும் எதிர்ப்பு தெரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங்கை 15 பேர் கொண்ட அணியில் எடுக்காதது குறித்து அஜித் அகார்கரை முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிழித்தெடுத்துள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரிங்கு சிங் கடந்த 6 மாதங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ரிங்கு சிங் சிறப்பாக இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

    குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் கடைசி டி20 போட்டியில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்தார். ரிங்கு 69 ரன்கள் குவித்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இந்திய அணி 212 ரன்கள் குவித்தது.

    இப்படிப்பட்ட வீரரை இந்திய அணியில் சேர்க்காதது அநியாயம். இந்த தேர்வு மிகவும் மோசமான முடிவு. அவர் இந்திய அணிக்காக உயிரை கொடுத்து விளையாடுகிறார். அவரை பழிகாடாக ஆக்கி விட்டார்கள். அவரை இந்திய அணியில் மீண்டும் சேர்ப்பது கடினம். ஐபிஎல் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைப்படது கடினம். இனி ரிங்கு சிங்கை மக்கள் மறந்து விடுவார்கள்.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார். 

    • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் 12 அணிகளில் குரூப் 12-ல் போட்டியிட்டன
    • இரண்டு குரூப்பின் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இதில் 8 அணிகள் நேரடியாக குரூப் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. மீதமுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் இருந்து இரண்டு அணிகள் குரூப் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    அதன்பின் குரூப் 12-ல் உள்ள அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இரண்டு பிரிவுகளிலும் தலா முதல் இரண்டு இடங்களை பிடித்த அணி அரையிறுதிக்கு முன்னேறின. அதன் பிறகு இறுதிப் போட்டி.

    2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் எவ்வாறு நடத்தப்படும் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளன.

    அதன் விவரம் வருமாறு:-

    1. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.

    2. 20 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படும்.

    3. ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரு அணி மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    4. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் தலா இரண்டு அணிகள் சூப்பர் 8 குரூப்பிற்கு முன்னேறும்.

    8. சூப்பர் 8 குரூப்பிற்கு தகுதிப் பெற்ற 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும்.

    9. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பிடித்துள்ள அணிகள் அதே பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

    10. இரண்டு பிரிவிலும் தலா முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    11. அதன்பின் இறுதிப் போட்டி.

    தற்போது 12 அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றுள்ளன. மீதமுள்ள 8 அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி முன்னேறும்.

    டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

    ×