search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிகுண்டு சோதனை"

    • கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோவில்குக்கர் குண்டுவெடிப்பு நடைபெற்றது.
    • 100 மீட்டர் அளவில் உள்ள கடைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோவில்குக்கர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போலீசார் ஐ எஸ். ஐ. எஸ். அமைப்பில் தொடர்புடைய நபர்களை கைது செய்தும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று திண்டிவனத்தில் உள்ள கோவில்கள் ,மசூதிகள்,வணிக நிறுவனங்கள்,ரயில் நிலையம், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சப்-இன்ஸ்பெக்டர் ரவி,தலைமையிலான சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், ரவிக்குமார்,காவலர்கள் இளங்கோ,மாதவன்,வருண் நெடுஞ்செழியன் ஆகியோர் கொண்ட குழு மோப்பநாய் ராணி உதவியுடன் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.

    திண்டிவனம் பஸ் நிலையத்தில் சோதனை செய்து கொண்டு இருக்கும்போது மோப்பநாய் ராணி திடீரென அங்கு பெண் ஒருவரை கவ்வி பிடித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்தப் பெண் மற்றும் அங்கிருந்து 100 மீட்டர் அளவில் உள்ள கடைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர் மேலும் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்து அவரை அனுப்பி வைத்தனர்.

    • மயிலம், திருவக்கரை கோவில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுப்பட்டனர்.
    • பாதுகாப்பு துறை உதவி யாளர் ஜீவானந்தம்,தலைமை காவலர் செல்வ வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் மங்களூரில்ஆட்டோவில் குக்கர் வெடிப்பு நடந்தது. மேலும் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல பல்வேறு இடங்களில் (ஐ.எஸ்.ஐ.எஸ்.) அமை ப்பில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்தும் அவர்கள் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் எஸ்ஐக்கள் முருகன், ரவிச்சந்திரன், பா ர்த்தசாரதி, வெங்கடேசன், சிறப்பு உதவி யாளர் ராம வெங்கடேசன், வெங்கடேசன், தலைமையி லான வெடிகுண்டு நிபுணர்கள் மயிலம் முருகன் கோவில், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில், திண்டிவனம் ெரயில்வே நிலையம் மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களில் மெட்டல் டிடக்டர் உதவியுடனும் மற்றும் மோப்பநாய் தமிழ் வர வைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் முன்னெ ச்சரிக்கை நடவடி க்கையாக சோதனை நடத்தினார்.திண்டிவனம் ரயில்வே நிலைய த்தில்ரயில்வே பாதுகாப்பு துறை உதவி யாளர் ஜீவானந்தம்,தலைமை காவலர் செல்வ வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர். இதனால் திண்டிவனம் மற்றும் மயிலம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×