என் மலர்
நீங்கள் தேடியது "புதுச்சேரி ரங்கசாமி"
- அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு, புதுவை முதலமைச்சர் ரங்கசாமி விருந்தினர் தங்குமிடத்திற்கு வந்தார்.
- விடுதிக்கு வெளியே துப்பாக்கி ஏந்தி நின்றிருந்த தமிழக போலீசார் முதலமைச்சர் ரங்கசாமிக்கு துப்பாக்கியுடன் மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி:
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி முருக பக்தர். அவர் அடிக்கடி திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு விருந்தினர் தங்குமிடத்திற்கு வந்தார். மேல் சட்டையின்றி துண்டு மட்டும் அணிந்து இருந்த நிலையில் விடுதிக்கு வெளியே துப்பாக்கி ஏந்தி நின்றிருந்த தமிழக போலீசார் முதலமைச்சர் ரங்கசாமிக்கு துப்பாக்கியுடன் மரியாதை செலுத்தினர்.
இதை ஏற்கும் வகையில் அவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில் வணக்கம் செலுத்தினார். மேல் சட்டையின்றி துண்டு-வேட்டியுடன் முதல்வர் போலீஸ் மரியாதை ஏற்ற வீடியோ எளிமையான போலீஸ் மரியாதை என குறிப்பிட்டு வைரலாகி வருகிறது.
- முதலமைச்சர் ரங்கசாமி தனது காரில் சட்டசபைக்கு வந்தார்.
- அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நன்றி கூற சட்டசபைக்கு வந்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசுத்துறைகளில் 625 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் மேல்நிலை எழுத்தர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
ஆனாலும் இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமைசெயலாளர் மற்றும் அதிகாரிகள், அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உதவியாளர் பணியிடங்களை மேல்நிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்பவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதேபோல் அமைச்சக ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடமும் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நன்றி கூற சட்டசபைக்கு வந்தனர். சட்டசபைக்கு வெளியே முதலமைச்சரின் வருகைக்காக அவர்கள் காத்திருந்தனர்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி தனது காரில் சட்டசபைக்கு வந்தார். அங்கு காத்திருந்த அமைச்சக ஊழியர்கள் மனித சங்கிலி போன்று நீண்ட வரிசையில் நின்று கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தனர்.
- தமிழகத்தில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது.
- புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு உட்பட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை. எனவே கடந்த ஆண்டை போல பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன்கார்டுகளுக்கு ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி, பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரொக்கப் பணம் ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டத.
இந்நிலையில், புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூ.750 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அப்பா பைத்தியம் சாமி கோவிலில் அர்ஜூன்ராம் மேக்வால் சாமி தரிசனம்.
- ரங்கசாமியுடன் மத்திய மந்திரி சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு புறப்பட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்க மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை மந்தரி அர்ஜூன்ராம் மேக்வால் புதுச்சேரிக்கு வந்தார்.
கவர்னர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்துவிட்டு, கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு சென்றார்.
அங்குள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலில் இணை மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி தீபாராதனை காண்பித்து, மத்திய மந்திரிக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். அதன்பின்பு, முதல்-அமைச்சர் வீட்டில் ரங்கசாமியுடன் மத்திய மந்திரி சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு புறப்பட்டு சென்றார்.