என் மலர்
நீங்கள் தேடியது "பிரதம மந்திரி கிசான் திட்டம்"
- ஆண்டுக்கு ரூ.6000, மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.
- பி.எம். கிஷான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெருமாநல்லூர் :
தமிழ்நாட்டில் "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டமானது 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 விதம் ஆண்டுக்கு ரூ.6000, மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பண பரிமாற்றம் அந்தந்த பகுதியின் ஒன்றியங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் 13-வது தவணையாக அதாவது 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத் தொகை பி.எம். கிஷான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது ஊத்துக்குளி வட்டார விவசாயிகள் பொது சேவை மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ தங்கள் ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறையில் பதிவு செய்து கொள்ளலாம். ஆகவே தங்களது அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று தனது பெயரை பி.எம். கிஷான் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியின் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம்.கிஷான் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு ஊத்துக்குளி வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குனர் சசிரேகா தெரிவித்துள்ளார்.