என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரீநாத்"
- சமீபத்தில் ஸ்ரீநாத் மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு, அவர் படங்களில் நடிக்க தடை விதித்தது.
- தற்போது ஸ்ரீநாத் மீதான தடையை மலையாள தயாரிப்பாளர் சங்கம் நீக்கி உள்ளது.
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் தனது, 'சட்டம்பி' படம் தொடர்பாக பேட்டி அளித்தபோது, ஒரு கேள்வியால் எரிச்சல் அடைந்து பெண்ணை ஆபாசமாக திட்டியதாக கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ரீநாத் மீது மராடு போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் ஸ்ரீநாத் மீது ஒரு பெண் பாலியல் புகாரும் தெரிவித்தார். அதன்பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஸ்ரீநாத்
ஸ்ரீநாத் மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் ஸ்ரீநாத் படங்களில் நடிக்க தற்காலிக தடை விதித்தது. இதனால் புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யாமல் அவரை ஒதுக்கினர். இந்த நிலையில் தற்போது ஸ்ரீநாத் மீதான தடையை மலையாள தயாரிப்பாளர் சங்கம் நீக்கி உள்ளது. இதனால் அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாவார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
- முதல் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான நடுவர்கள் குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை. ஐ.சி.சி.யின் நடுவர்கள் குழுவில் இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் மற்றும் போட்டி நடுவர்கள் குழுவில் முன்னாள் வேகப்பந்து வீரரான ஜவகல் ஸ்ரீநாத்த் இடம் பெற்றனர். இந்த இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் பாகிஸ்தான் செல்ல இயலாது என்று நிதின் மேனன் அறிவித்து விட்டார். தொடர்ந்து நான்கு மாதங்களாக பணியாற்றி வருவதால் தனக்கு விடுப்பு அளிக்குமாறு ஸ்ரீநாத் கேட்டுக் கொண்டார். இதை ஐ.சி.சி. ஏற்றுக்கொண்டது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் கள நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் விவரம்:
நடுவர்கள்: தர்மசேனா (இலங்கை), கிறிஸ் கபானி (நியூசிலாந்து) மைக்கேல் காப், ரிச்சர்டு கெட்டில் போரோ, அலெக்ஸ் ஹர்ப் (இங்கிலாந்து) அட்ரியன் ஹோல்ஸ்டாக் (தென் ஆப் பிரிக்கா) பால் ரீபெல், ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), அசன் ராசா (பாகிஸ்தான்) ஷர்பதுல்லா (வங்கதேசம்), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்).
போட்டி நடுவர்கள்: டேவிட் பூன் (ஆஸ்திரேலியா), ரஞ்சன் மதுகல்லே (இலங்கை), ஆண்ட்ரூ பைகிராப்ட் (ஜிம்பாப்வே).
- தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மனதில் பதிந்தவர் நடிகர் ஸ்ரீனாத்.
- சந்தானம் நடித்து பெரும் வெற்றியை பெற்ற வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தை இயக்கினார்.
உன்னாலே உன்னாலே, உத்தமபுத்திரன் மற்றும் ரௌதிரம் ஆகிய தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மனதில் பதிந்தவர் நடிகர் ஸ்ரீனாத். இவர் 2009 ஆம் ஆண்டு டேனியல் பாலாஜி நடிப்பில் வெளியான முத்திரை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கினார்.
அதைத்தொடர்ந்து சந்தானம் நடித்து பெரும் வெற்றியை பெற்ற வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தை இயக்கினார். தற்பொழுது அவரது 3- வது திரைப்படமான லெக் பீஸ் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் 5 ஆண்களை சுற்றி நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. படத்தில் யோகி பாபு, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி மற்றும் ரமேஷ் திலக் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் சென்னையில் 30 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. படத்தை மணிகண்டனின் ஹீரோ சினிமாஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.