என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க பாராளுமன்றம்"

    • செனட்சபையில் இந்த மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.
    • ஜனாதிபதி ஜோ பைடன் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.

    வாஷிங்டன்

    அமெரிக்காவில் கடந்த 2015-ம் ஆண்டு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது.

    இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் கருக்கலைப்புக்கு தடைவிதித்து சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. இதை தொடர்ந்து, ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தையும் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்யலாம் என்கிற அச்சம் எழுந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமண உரிமையை பாதுக்கும் மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட்சபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் செனட்சபையில் இந்த மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்கள் உள்பட 61 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 36 பேர் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் செனட் சபையில் அந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து அந்த மசோதா தற்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அங்கும் மசோதா நிறைவேறும் பட்சத்தில் அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஜோ பைடன் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.

    • அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 4 பேருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
    • இவர்கள் 4 பேரும் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் முக்கிய குழுக்களில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 4 பேர் நியமிக்கப்பட்டுனர்.

    அந்த எம்.பி.க்கள், ராஜா கிருஷ்ணமூர்த்தி (49), அமி பெரா (57) , பிரமிளா ஜெயபால் (57 ), ரோகன்னா (46) ஆவார்கள். இவர்கள் 4 பேரும் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள்.

    ராஜா கிருஷ்ணமூர்த்தி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் சபையின் சீனாவுக்கான 'ரேங்கிங்' உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவின் நடத்தையின் பல்வேறு அம்சங்கள், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்த விவகாரங்களை இந்தக் குழு கவனிக்கும்.

    அமி பெரா, முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுதான் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.ஐ.ஏ), தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகம் (டி.என்.ஐ), தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ) மற்றும் ராணுவ உளவுத்துறை உள்ளிட்ட நாட்டின் உளவுத்துறை அமைப்பின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும்.

    பிரமிளா ஜெயபால், பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை குழுவின் 'ரேங்கிங்' உறுப்பினராக (குடியேற்றம்) நியமிக்கப்பட்டுள்ளார். குடியேற்ற துணைக்குழுவுக்கு இவர் தலைமை தாங்குவார்.

    ரோகன்னா, சீன கம்யூனிஸ்டு கட்சியுடனான அமெரிக்காவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு போட்டி தொடர்பான புதிய குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • ஜிம் ஜோர்டான் 200 வாக்குகளை பெற்றார். அவருக்கு சொந்த கட்சி உறுப்பினர்கள் 20 பேர் வாக்களிக்க மறுத்து விட்டனர்.
    • தனக்கு எதிராக வாக்களித்த சில குடியரசு கட்சி உறுப்பினர்களை ஜிம் ஜோர்டான் சந்தித்து பேசினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஜனநாயக கட்சி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சி பெரும்பான்மையுடன் உள்ளது. இதற்கிடையே பாராளுமன்ற சபாநாயகராக இருந்த குடியரசு கட்சியின் கெவின் மெக்கார்த்திக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது.

    ஆளுங்கட்சியுடன் இணைக்கமாக இருப்பதாக கூறி அவரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை குடியரசு கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து கெவின் மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டன.

    இதில் குடியரசு கட்சி சார்பில் ஜிம் ஜோர்டன் களம் இறங்கினார். ஆனால் அவருக்கும் சொந்த கட்சி உறுப்பினர்களிடம் எதிர்ப்பு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான முதல் சுற்று ஓட்டெடுப்பு நடந்தது. சபாநாயகர் பதவியை பெற 217 வாக்குகள் பெற வேண்டும்.

    இதில் ஜிம் ஜோர்டன் 200 வாக்குகளை பெற்றார். அவருக்கு சொந்த கட்சி உறுப்பினர்கள் 20 பேர் வாக்களிக்க மறுத்து விட்டனர்.

    ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹக்கீம் ஜெப்ரிஸ் 212 வாக்குகளை பெற்றார். ஆனால் அக்கட்சி பிரதிநிதிகள் சபையில் சிறுபான்மை கட்சியாகும். எனவே அந்த வாக்குகள் போதுமானதாக இல்லை. இதனால் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.

    ஜிம் ஜோர்டன் தனக்கு 221 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தார். 4 வாக்குகள் மட்டுமே இழக்கலாம் என்று கருதினார். ஆனால் அவருக்கு எதிராக 20 வாக்குகள் விழுந்துள்ளது.

    தனக்கு எதிராக வாக்களித்த சில குடியரசு கட்சி உறுப்பினர்களை ஜிம் ஜோர்டன் சந்தித்து பேசினார். ஆனாலும் ஜிம் ஜோர்டனுக்கு எதிரான நிலைப்பாட்டில் சில உறுப்பினர்கள் தீவிரமாகவே உள்ளனர். அவருக்கு தொடர்ந்து ஆதரவு கிடைக்கவில்லை. இதையொட்டி அடுத்த சபாநாயகர் வேட்பாளராக டாம் எம்மர் போட்டியிட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இன்று 2-வது சுற்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

    • அகதிகள் பிரச்சனையால் குடியரசு உறுப்பினர்கள் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தனர்
    • செலவினங்களுக்கு உதவும் வகையில் $459 பில்லியன் ஒதுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது

    அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளின் செலவினங்களுக்கு தேவைப்படும் நிதி பங்கீட்டிற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் வேண்டும்.

    இரு கட்சி ஜனநாயக முறை நிலவி வரும் அமெரிக்காவில், மத்திய அரசின் செலவினங்களில் பெரும் பகுதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், அமெரிக்காவின் தெற்கு எல்லைகள் வழியாக அகதிகள் சட்டவிரோதமாக உள்ளே நுழைவதை தடுக்கும் விதமாக நிதி பங்கீடு அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தி, குடியரசு கட்சி உறுப்பினர்கள், செலவின மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வந்தனர்.

    இதனால், அமெரிக்க அரசின் முக்கிய துறைகளின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பணிகள், நிதியின்றி முடங்கும் அபாயம் ஏற்பட்டது.

    இந்நிலையில், முடக்கத்தை தவிர்க்க கீழ்சபை எனப்படும் பிரதிநிதிகள் சபை (House of Representatives) மற்றும் மேல் சபை எனப்படும் செனட் (Senate) ஆகிய இரு சபை உறுப்பினர்களுக்கும் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில், இறுதியாக ஒரு சமரச முடிவு எட்டப்பட்டது.

    அரசின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கும் மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவறியது. செனட் சபையில் இதற்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன.


    இதன் மூலம், முதற்கட்டமாக, அரசின் செலவினங்களுக்கு உதவும் வகையில் செனட் சபை $459 பில்லியன் ஒதுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக, இரு சபைகளின் ஒப்புதலுடன் நிறைவேறிய இந்த மசோதா, அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

    இதுவரை அமெரிக்காவில் 10 முறை அரசு முடக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பல அரசு ஊழியர்கள் தற்காலிகமாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அரசு பூங்கா பராமரிப்பு ஊழியர்களுக்கு கூட ஊதியம் வழங்க முடியாததால், பூங்காக்கள் மூடப்பட்டன.

    • பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
    • வரி விதிப்பு என்பது அமெரிக்காவை மீண்டும் பணக்கார மற்றும் சிறந்த நாடாக மாற்றும்.

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவி யேற்றார். அவர் பதவி யேற்றபின் முதல் முறையாக பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    அமெரிக்காவின் பொற் காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம். 6 வாரங்களில் 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டேன். 400-க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து உள்ளேன்.

    நான் பதவியேற்ற சில மணி நேரங்களில் நாட்டின் தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்தேன். சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க ராணுவம் மற்றும் எல்லை ரோந்துப் படையினரை அங்கு நிறுத்தினேன்.

    இதன் காரணமாக கடந்த மாதம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபரான ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ், ஒரு மாதத்தில் லட்சக்கணக்கானோர் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்தனர்.

    அமெரிக்கா மீது நியாயமற்ற வரிகள் விதிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக அதிக வரிகளைப் விதித்து வருகின்றன. தற்போது அந்த நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்கும் நேரம் இது.

    ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக கட்டணங்களை நம்மி டம் வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது.

    அமெரிக்காவிடம் இந்தியா வாகன வரி 100 சதவீதம் வசூலிக்கிறது. இது அமெரிக்காவிற்கு நியாயமில்லை.

    இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ஏப்ரல் 2-ந்தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்குகிறது. மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதித்தாலும், அதே வரியை அவர்களுக்கு விதிப்போம்.

    பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வரி விதிப்பு என்பது அமெரிக்காவை மீண்டும் பணக்கார மற்றும் சிறந்த நாடாக மாற்றும்.

    அமெரிக்க கனவு தடுக்க முடியாதது. நமது நாடு மீண்டு வருவதற்கான விளிம்பில் உள்ளது. எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அயராது பணியாற்றி வருகிறோம். உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் நோக்கத்துடன் உள்ளோம். அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டிரம்ப் உரையாற்றியபோது எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். டிரம்ப் ஒவ்வொரு விவகாரம் பற்றி பேசும்போதும், "பொய்" என்று எழுதப்பட்ட பதாகையை காண்பித்தனர்.

    ×