search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடற்படை தளபதி"

    • அப்போதிருந்தே இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.
    • வெவ்வேறு இடங்களுக்கு சென்றாலும் இன்று வரை இருவரும் தொடர்பிலேயே உள்ளனர்

    இந்திய ராணுவத்தின் தளபதியான மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். ராணுவ துணை தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் திவேதி நாட்டின் 30வது ராணுவ தலைமை தளபதியாவார்.

     

    இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பதவியேற்று தற்போது இந்திய கடற்படை தளபதியாக இருந்துவரும் தினேஷ் திரிபாதியும் இந்திய ராணுவத் தலைமைத் உபேந்திரா திவேதியும் ஒரே வகுப்பில் படித்த மாணவர்கள் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

     

    இந்திய வரலாற்றிலேயே ஒரே வகுப்பில் படித்த இருவர் ஒரே நேரத்தில் ராணுவத் தளபதியாகவும் , கடற்படைத் தளபதியாகவும் உள்ளது இதுவே முதல் முறை ஆகும். மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் உள்ள சைனிக் பள்ளியில் இருவரும் 1970களில் ஆண்டு ஐந்தாம் வகுப்பு A பிரிவில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போதிருந்தே இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். ராணுவத் தளபதி உபேந்திராவின் ரோல் நம்பர் 931 ஆகவும், கடற்படைத்  தளபதி தினேஷ் திரிபாதியின் ரோல் நம்பர் 938 ஆகவும் இருந்துள்ளது.

     

    அதன்பின்னர் வெவ்வேறு இடங்களுக்கு சென்றாலும் இன்று வரை இருவரும் தொடர்பிலேயே உள்ளனர். தற்போது இருவரும் நாட்டின் முக்கியமான இரண்டு பொறுப்புகளில் உள்ளது ராணுவப்படைக்கும், கப்பற்படைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும். மேலும் இருவரின் முன்னேற்றம் குறித்து ரேவா சைனிக் பள்ளி ஆசிரியர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். 

    • இந்தியா அதன் பாதுகாப்பு தேவைக்காக தொடர்ந்து பிற நாடுகளை சாரந்து இருக்க முடியாது.
    • 2047ம் ஆண்டிற்குள் இந்திய கடற்படையை தற்சார்பு கடற்படையாக மாற்றுவோம்.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் கூறியுள்ளதாவது: இந்திய பெருங்கடல் பகுதியில் நடக்கும் அனைத்து முன்னேற்றங்களையும் இந்திய கடற்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல சீனக் கப்பல்கள் இயங்குகின்றன 4 முதல் 6 வரை சீன கடற்படைக் கப்பல்கள் மற்றும் சில உளவு கப்பல்கள் இயங்குகின்றன. சீன மீன்பிடிக் கப்பல்களும் இயங்குகின்றன. நாங்கள் அனைத்து முன்னேற்றங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.

    இந்திய பெருங்கடல் பகுதி இது ஒரு முக்கியமான பகுதி என்பதை நாங்கள் அறிவோம், அங்கு அதிக அளவு வர்த்தகம் நடைபெறுகிறது. கடல்சார் துறையில் இந்தியாவின் நலன்களைக் கவனிப்பதே எங்கள் வேலை. நம்பகமான பாதுகாப்பை வழங்குவதே எந்தவொரு ஆயுதப்படையினரின் பணியாகும்.

    இந்தியா அதன் பாதுகாப்பு தேவைக்காக தொடர்ந்து பிற நாடுகளை சாரந்து இருக்க முடியாது. சமீபத்திய உலகளாவிய நிகழ்வுகள் நாம் மற்றவர்களைச் சார்ந்து இருக்க முடியாது என்பதை காட்டுகிறது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அரசு எங்களுக்கு மிகத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 2047ம் ஆண்டிற்குள் இந்திய கடற்படையை தற்சார்பு கடற்படையாக மாற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×