என் மலர்
நீங்கள் தேடியது "ஹேக்கர்கள்"
- "Fantastic Tea Club Pakistan Cyber Force" என்ற குறிப்பு இடம்பெற்றது.
- ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த குறிப்புகள் இடம்பெற்றன.
ராஜஸ்தான் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் பாகிஸ்தான் ஹேக்கர்களால் இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு தாக்குதல் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் படைகளிடம் பிடிபட்டு, சமரசத்துக்குப் பின் பின் நாடு திரும்பிய IAF அதிகாரி அபிநந்தன் தொடர்புடைய கேலிக் குறிப்பு இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. முகப்புப் பக்கத்தில் "Fantastic Tea Club Pakistan Cyber Force" என்ற குறிப்பு இடம்பெற்றது.
மேலும் ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த ஆட்சேபனைக்குரிய குறிப்புகளையும் ஹேக்கர்கள் இணையதளத்தின் முதல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
"பஹல்காம் தாக்குதல் ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும், மக்களை நம்பிக்கையின் அடிப்படையில் பிரித்து போரைத் தூண்டும் இந்திய அரசின் நடவடிக்கை" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வலைத்தளம் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் பேசுகையில், "சைபர் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம், மேலும் இந்தத் தாக்குதலுக்குக் காரணமான குழுவைக் கண்டுபிடித்து தகவல் சேதத்தின் அளவைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதுவரை எந்த முக்கியமான தரவு கசிவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், முழு அமைப்பும் முழுமையாகச் சரிபார்க்கப்படுகிறது என்று திலாவர் மேலும் கூறினார்.
- மருத்துவர்களின் விவகாரங்களை வைத்தே எந்த மருத்துவமனையில் தரவுகள் திருடப்பட்டது என்பதை கிளவுடு செக் அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
- கடந்த வாரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளின் தரவுகளை ஹேக் செய்து ரூ.200 கோடி வேண்டுமென ஹேக்கர்கள் பேரம் பேசினர்.
திருப்பூர்:
இந்த நவீன உலகில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை எல்லாம் ஆன்லைன் வழியாகவே நடக்கிறது. இதனால் பொதுமக்கள் குறித்து பல தரவுகள் ஆன்லைனில் தான் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாகத் தரவுகளைச் சேமித்து வைக்கும்போது, அவை திருடப்படும் வாய்ப்புகளும் இருக்கிறது. ஹேக்கர்கள் இந்த தரவுகளைத் திருடி விற்று வருகின்றனர்.
வெளிநாடுகளில் நிகழும் இந்த சம்பவம் தற்போது தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. திருப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் 1.50 லட்சம் நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகளை சில ஹேக்கர்கள் திருடியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சைபர் கிரைம் தளங்கள் மற்றும் டெலிகிராம் மூலம் அந்த டேட்டாக்களை விற்பனை செய்யும் முயற்சியிலும் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஹேக்கிங்கை முதலில் கிளவுடு செக் என்ற அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்த மருத்துவமனைக்கும், இந்த ஹேக்கிங்கிற்கும் தொடர்பு இல்லை எனவும், மூன்றாம் தரப்பு நபரிடம் இருந்தே தரவுகள் திருடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த 2007 முதல் 2011 வரையிலான நோயாளிகளின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக கிளவுடு செக் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் தங்களிடம் நோயாளிகளின் டேட்டா இருப்பதை காட்ட சிறு தரவுகளை அனைவரும் பார்க்கும் வகையில் பொதுவெளியிலும் பகிர்ந்துள்ளனர். திருடப்பட்ட தரவுகளில் நோயாளிகளின் பெயர்கள், பிறந்த தேதிகள், முகவரி, பாதுகாவலரின் பெயர்கள் மற்றும் மருத்துவரின் விவரங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த மருத்துவர்களின் விவகாரங்களை வைத்தே எந்த மருத்துவமனையில் தரவுகள் திருடப்பட்டது என்பதை கிளவுடு செக் அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்த ஹேக்கிங் குறித்து உறுதி செய்யப்பட்ட உடனே சம்பந்தப்பட்ட நபர்களிடம் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டதாக கிளவுடுசெக் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பழனிசாமி கூறுகையில், எங்களது மருத்துவமனையில் நோயாளிகளின் விபரங்கள் குறித்த தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கிளவுடு செக் அமைப்பிடமிருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது எத்தனை சதவீதம் உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில் எங்கள் மருத்துவமனையில் நோயாளிகளின் பெயர் மற்றும் முகவரி விபரங்கள் மட்டுமே பெறுவதாகவும், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் பின்பற்றுவது போன்ற நடைமுறைகளை இங்கு பின்பற்றுவது இல்லை. அதனால் எங்களது தரவுகள் வெளியே செல்ல வாய்ப்புகள் இல்லை என்றார்.
மேலும் கிளவுடு செக் அமைப்பு எங்களிடம் மருத்துவமனையின் தரவுகளை ஹேக் செய்ய முடியாத அளவிற்கு சாப்ட்வேர் இருப்பதாகவும் அதை வாங்கும் படியும் தெரிவித்துள்ளனர். எனவே அது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளோம். எங்களை பொறுத்தவரை இது ஒரு வதந்தி மட்டுமே. எங்களது மருத்துவமனையின் எந்த தரவுகளும் ஹேக் செய்யப்படவில்லை என்றார்.
கடந்த வாரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளின் தரவுகளை ஹேக் செய்து ரூ.200 கோடி வேண்டுமென ஹேக்கர்கள் பேரம் பேசினர். தற்போது திருப்பூர் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பிரதமர் அலுவலகம், மத்திய வங்கி மற்றும் காவல்துறை இணையதளங்கள் "THE R3SISTANC3" என்ற மர்ம கும்பலால் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
- 'தயாராக இருங்கள், நீதிக்கான சண்டை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது' என்று ஹேக்கர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது.
வங்காளதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரில் பங்கேற்று உயிர் தியாம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில் மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை கடந்த மாத இறுதியில் ஹசீனா தலைமையிலான வங்காளதேச அரசு அறிவித்தது. இந்த இடஒதுக்கீடு பாரபட்சமானது எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

நாடு முழுவதும் போராட்டக்கார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது. ராணுவம் வரவழைக்கப்பட்டு போரட்டக்காரர்களை கண்டதும் சுடுவதற்கான உத்தரவையும் அரசு பிறப்பித்தது. இதற்கிடையே போராட்டத்துக்கு காரணமான இடஒதுக்கீட்டை அரசு ரத்து செய்துள்ளது.
ஆனாலும் போராட்டம் ஓயாமல் நடந்து வரும் நிலையில் தற்போது பிரதமர் அலுவலகம், மத்திய வங்கி மற்றும் காவல்துறை இணையதளங்கள் "THE R3SISTANC3" என்ற மர்ம கும்பலால் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அரசின் இந்த இணையதளங்களில், 'ஆப்ரேஷன் ஹண்ட் டவுன், மாணவர்களை கொள்வதை நிறுத்துங்கள்' என்றும் 'இது இனிமேல் போராட்டம் அல்ல போர்' என்றும் சிவப்பு எழுத்துக்களால் ஹேக்கர்கள் மேற்கோள் காட்டிய வாசகங்கள் திரையில் வருகின்றன.
ஹேக்கர்கள் விடுத்துள்ள பிரகடனத்தில், 'திறன் மிக்க மாணவர்களால் அமைதியான வழியில் நடந்தப்பட்ட போராட்டத்தை அரசு மற்றும் அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து வன்முறையாலும் கொலைகளாலும் ஒடுக்க முயன்றுள்ளது. இனி இது வெறும் போராட்டம் இல்லை. நீதிக்கான, சுதந்திரத்துக்கான, எதிர்காலத்துக்கான போர்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, ' மற்ற ஹேக்கர்கள், பத்திரிகையாளர்கள், இன்டலிஜென்ஸ் நிபுணர்கள் எண்களின் இந்த முன்னெடுப்பில் சேர வேண்டும், உங்களிடம் உள்ள திறனும், தழுவலும், தன்னம்பிக்கையும் எங்களுக்கு தேவை. வேடிக்கை பார்ப்பதற்கான காலம் முடிந்துவிட்டது' என்றும் "THE R3SISTANC3" கும்பல் ஹேக்கர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
'தயாராக இருங்கள், நீதிக்கான சண்டை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது' என்று ஹேக்கர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது. ஹேக்கர்களின் அந்த பிரகடனத்தில் இடம்பெற்ற புகைப்படங்களில், இரண்டு நாயுடன் அடையாளம் தெரியாத 5 நபர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.