என் மலர்
நீங்கள் தேடியது "சொர்க்க வாசல்"
- வருகிற 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
- ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும்.
தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏழுமலையான் கோவில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை நேற்று கூட்டம் நடந்தது.
காணொலி வாயிலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தேவஸ்தான அதிகாரி வீரப்பிரம்மம் தலைமை தாங்கினார். வரும் ஜனவரி 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசி அன்றைய தினம் கோவில்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், வழிபாடு முறைகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதி ஆகியவை குறித்து ஆலோசனை நடந்தது.
வைகுண்ட ஏகாதசி அன்று கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடி நீர் ஆகியவை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.
வரிசையாக பக்தர்கள் செல்ல போதிய ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சாதாரண பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது வி.ஐ.பி.கள் யாராவது வந்தால் சாதாரண பக்தர்களை தடுத்து நிறுத்தக்கூடாது.
அவர்களை எந்தவொரு தொந்தரவும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும்.
வைகுண்ட ஏகாதசி தினம் அன்று சுப்ரபாத சேவை முடிந்தபின் கோவிலின் சொர்க்கவாசல் திறக்கப்படும்.ஜீயர்கள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், நீதிபதிகள், மத்திய மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும்.
அதனை தொடர்ந்து சாதாரண பக்தர்கள் வரிசையில் வைகுண்ட வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
- ஸ்ரீ வாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி நாட்களில் ஏழுமலையானை தரிசனம் செய்தால், துன்பங்கள் நீங்கி, பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும் என்பதால் திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் என தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி தொடங்கும் 2 ந்தேதியில் இருந்து 11-ந் தேதி வரை தினமும் 2000 பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஸ்ரீ வாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. அதன்படி ஸ்ரீ வாணி டிரஸ்ட்க்கு ரூ.10 ஆயிரமும், தரிசனத்திற்கு ரூ.300 என ரூ.10,300 செலுத்தி தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பக்தர்கள் பதிவு செய்தனர்.
இந்த டிக்கெட் பெற்ற பாக்தர்கள் மகா லகு தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 68,469 பேர் தரிசனம் செய்தனர். 27,025 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
- சொர்க்கவாசல் தரிசனத்தில் 10 நாட்கள் அனுமதி.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
அன்று காலை சுப்ரபாத சேவை முடிந்த பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நேற்று 20,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் ஜனவரி 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
- ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
- சொர்க்கவாசல் தரிசனத்தில் 10 நாட்கள் அனுமதி.
திருப்பதி :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
அன்று காலை சுப்ரபாத சேவை முடிந்த பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 20,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் ஜனவரி 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
- நாளை காலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
- நாளை விஐபி பிரேக் தரிசனத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி 11 நாட்களுக்கு தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகைகள் 2.20 லட்சம் ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
இதேபோல் ஜனவரி 2-ந் தேதி முதல் முதல் 11 ஆம் தேதி வரை தினமும் இலவச தரிசனத்தில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்யும் வகையில் திருப்பதியில் 9 இடங்களிலும், திருமலையில் தேவஸ்தான நிர்வாக கட்டிடத்திலும் டைம் ஸ்லாட் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
திருப்பதியில் பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம், ராமா நாயுடு பள்ளி, ராமச்சந்திர புஷ்கரணி, எம்.ஆர். பள்ளி போலீஸ் நிலையம் அருகே உள்ள அரசு பள்ளி மற்றும் ஜீவகோணா உள்ளிட்ட 9 இடங்களில் இலவச டைம் ஸ்லாட் தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி என்று தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்று கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்காததால் பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வைகுண்ட ஏகாதசி ஒட்டி நாளை காலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனால் சுமார் 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை விஐபி பிரேக் தரிசனத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி தினத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அசோக் சிங்கால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேற்று பக்தர்களின் தரிசன வரிசையை ஆய்வு செய்தனர்.
அப்போது பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் போது அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படாமல் தரிசனத்திற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
திருப்பதியில் நேற்று 70,373 பேர் தரிசனம் செய்தனர். 32,954 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர் ரூ.5.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- வருகிற 1-ம் தேதி வரை பகல் பத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை இரவு பத்து நிகழ்ச்சி நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது தான் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில். அது போல் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டின் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது பகல்பத்து உற்சவம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் ஆதி ஜெகநாத பெருமாள் மற்றும் பத்மாசனிதாயார், பட்டாபிஷேக ராமர், சந்தான கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து உற்சவர் பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியுடன் பெருமாள் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் கேடயத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று சனிக்கிழமையும் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 1-ம் தேதி வரை பகல் பத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 2-ந்தேதி மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை இரவு பத்து நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் கோவில் பேஷ்கார் கண்ணன் உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதே போல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலும் வருகின்ற 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று சேது மாதவர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருப்பல்லாண்டு ஆரம்பம் மற்றும் அருளிப்பாடு சேவித்தல் நடைபெற்றது.
- 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவத்திருப்பதி கோவில்களில் பகல்பத்து திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் ஆகிய கோவில்களில் நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு கோவில் மண்டபத்தில் உற்சவ பெருமாள்கள் புஷ்ப அலங்காரத்துடன் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து திருப்பல்லாண்டு ஆரம்பம் மற்றும் அருளிப்பாடு சேவித்தல் நடைபெற்றது.
முதல் 10 நாள் திருமொழி திருநாளாகவும், ஜனவரி 2-ந் தேதி தொடங்கும் விழா திருவாய்மொழி திருநாளாகவும் ஒவ்வொரு நாளும் உற்சவ பெருமாள் அந்தந்த கோவில்களில் உள்ள முன் மண்டபத்தில் எழுந்தருளி அருளிப்பாடு சேவித்தல் நடைபெறும். 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும்.
இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் பெருமாள் சயன திருக்கோலத்தில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 10 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தக்கார்கள் செய்து வருகின்றனர்.
- கூட்ட நெரிசலைத் தவிர்க்க அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
- ஜனவரி 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 3-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா நடக்கின்றன. அதையொட்டி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அலிபிரியில் உள்ள பூதேவி வளாகம், இந்திரா மைதானம் பகுதியில் உள்ள துடா அலுவலகம், ராமச்சந்திரா புஷ்கரணி, ஜீவகோணா ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி வளாகம், விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய தங்கும் விடுதிகள், பைராகிபட்டிடையில் உள்ள மகாத்மா காந்தி பள்ளிக்கூட வளாகம், திருப்பதி சேஷாத்ரி நகர் ஜில்லா பரிஷத் பள்ளி வளாகம் (எம்.ஆர். பள்ளி போலீஸ் நிலையம் பின்பக்கம்), திருப்பதி கோவிந்தராஜசாமி சத்திரங்கள் மற்றும் திருமலையில் உள்ள கவுஸ்தூபம் தங்கும் விடுதி வளாகம் ஆகிய இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன.
பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட இருக்கும் கவுண்ட்டர்களை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் (பொறுப்பு) அனில்குமார் சிங்கால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலில் அவர் அலிபிரியில் உள்ள பூதேவி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டோக்கன் வழங்கும் மையம், தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் கவுண்ட்டர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதி ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் வைகுண்ட துவார தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டிகள் வினியோகம் செய்ய திருப்பதியில் மட்டும் 9 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பக்தர்களுக்கு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க போலீசாரும், தேவஸ்தான அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிற வைணவ கோவில்களில் நடக்க உள்ள ஏகாதசி விழாவை முனனிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், கலெக்டர் மற்றும் பிற துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பதியில் நடந்தது.
கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் (பொறுப்பு) பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரிகள் வீரபிரம்மன், சதாபார்கவி, தேவஸ்தான பாதுகாப்புத்துறை அதிகாரி நரசிம்மகிஷோர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குலசேகர், திருப்பதி கிழக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிகிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருவிழாக்கள் ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளன.
- ஜனவரி 2-ந்தேதி இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம் நடக்கிறது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இங்கு நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வெங்கட கிருஷ்ணராகவும் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், யோகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார்.
இந்த ஆண்டும் இங்கு வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக கடந்த 23-ந்தேதி திருமொழித் திருநாள் எனப்படும் பகல் பத்து விழா தொடங்கி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாய்மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து விழாவும் நடைபெற உள்ளது.
இந்த திருவிழாக்கள் ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளன.இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 2-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 2.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை மூலவர் தரிசனம் நடைபெறும். இதையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு உள் பிரகார புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள். அதன் பிறகு அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் நடக்கிறது.
இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம் நடக்கிறது. 11.30 மணக்கு பார்த்த சாரதி சுவாமி உற்சவர், நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடைபெறுகிறது.
- இலவச தரிசன டோக்கன் பெறாமல் முன்கூட்டியே வர வேண்டாம்.
- முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியையொட்டி 2-ந் தேதி முதல் 11 ம்தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் தரிசனம் செய்யும் வகையில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியிடப்பட்டு விற்று தீர்ந்தன.
இதுதவிர திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கு 10 நாட்களுக்கான இலவச டைம் ஸ்லாட் டிக்கெட் வரும் 1-ந் தேதி முதல் தினமும் 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்படுகிறது.
வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறுகை யில்:-
வைகுண்ட வாசல் தரிசனத்துக்கு ரூ.300 டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1-ந் தேதி இலவச டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கும் பணி தொடங்கும். தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் திருமலையில் உள்ள கிருஷ்ணதேஜா ஓய்வு இல்லத்தில் தரிசன நேரத்திற்கு வரவேண்டும்.
குறைந்த அளவு அறைகள் மட்டுமே உள்ளதால் தரிசன டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தங்கும் அறைகள் வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன் பெறாமல் முன்கூட்டியே வர வேண்டாம்.
தரிசன டிக்கெட் அல்லது இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் மட்டுமே வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமம் அடையாமல் இருக்க இலவச டைம் ஸ்லாட் டோக்கன்கள் பெற்று அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசன நேரத்தில் மட்டுமே தரிசனத்திற்கு வர வேண்டும்.
திருப்பதியில் நேற்று 62,152 பேர் தரிசனம் செய்தனர். 30,682 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- நள்ளிரவு 12.30 மணிக்கும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
- சயன கோலத்தில் சுவாமி இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.
நவதிருப்பதி கோவில்களில் கடந்த 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி பகல் பத்து திருவிழா தொடங்கியது. இராப்பத்து திருவிழாவில் முதல் நாளான வருகிற ஜன.2-ந்தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவத்திருப்பதி கோவில்களில் சுவாமி சயன திருக்கோலத்தில் எழுந்தருளி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரையும் மற்ற கோவில்களில் சுவாமிகள் இரவு 7 மணி வரையும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் இரவு 7 மணிக்கும் தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் இரவு 11மணிக்கும், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நள்ளிரவு 12.30 மணிக்கும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் ஆழ்வார்திருநகரி கோவிலில் இரவு 7 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் சயன திருக்கோலத்தில் சுவாமி பொலிந்து நின்றபிரான் மதியம் 1.30 மணி வரை பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் எனவும் கோவில் நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அக்கட்சியினர் மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் கோவில் நிர்வாகத்திடம் தரிசன நேரத்தை மாற்றக்கூடாது என வலியுறுத்தினர்,
பின்னர் மாவட்ட தலைவர் கூறுகையில், நவதிருப்பதி கோவில்களில் ஆழ்வார்திருநகர் ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஒன்பதாவது திருத்தலமாகும். வைகுண்ட ஏகாதசி அன்று மற்ற கோவில்களுக்கு சென்று வரும் பக்தர்கள் கடைசி கோவிலான ஆழ்வார்திருநகரி வரும்போது மாலை வரை சயன கோலத்தில் சுவாமி இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். அதைவிடுத்து மதியம் 1.30 மணிக்கே சயன கோலம் முடிவிற்கு வந்தால் பக்தர்கள் தரிசனம் செய்யமுடியாமல் போய்விடும். வழக்கமான நடைமுறையை மாற்றக்கூடாது. இதை மீறினால், வருகிற டிசம்பர் 29-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும், 30-ந் முற்றுகை போராட்டமும் நடத்தப்படும், என்றார்.
இதுகுறித்து செயல் அலுவலர் அஜித் கூறுகையில், வைகுண்ட ஏகாதசி திதியை கருத்தில் கொண்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைமுறை பின்பற்றப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஏகாதசி திதி நேரத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆழ்வார்திருநகரி ஜீயர் மற்றும் ஆச்சாரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுவாமி. சயன திருக்கோலத்திற்கு பிறகு பல்வேறு பணிகள் உள்ளது. மூலவர் சன்னதி திறந்திருப்பதால் பக்தர்கள் இரவு வரை சுவாமி தரிசனம் செய்யலாம், என்றார்.
- 3-ந்தேதி துவாதசி விழா நடக்கிறது.
- இலவச தரிசனம் 2-ந்தேதி இரவு 10 மணி வரை நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருகிற 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 3-ந்தேதி துவாதசி விழா நடக்கிறது. 2 நாட்கள் கோவிலில் மார்கழி மாத கைங்கர்யமாக நள்ளிரவு 12.45 மணியில் இருந்து நள்ளிரவு 1.30 மணி வரை மூலவர்களான சீதா, ராமர், லட்சுமணருக்கு தோமால சேவை, கொலு நடக்கிறது.
இதையடுத்து 2-ந்தேதி அதிகாலை 1.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து வைகுண்ட துவாரம் வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இலவச தரிசனம் அன்று இரவு 10 மணி வரை நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் ஆன்மிக பக்தி இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.