search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபி விபத்து"

    • காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், மீட்பு பணிக்காக உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இன்று அதிகாலையில் டபுள் டக்கர் பேருந்து ஒன்று பால் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

    லக்னோ- ஆக்ரா விரைவுச் சாலையில் பீகாரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த டபுள் டக்கர் பேருந்து, பால் கண்டெய்னர் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி, விபத்தில் 18 பேர் இறந்திருக்கலாம் என்றும் 19 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், மீட்பு பணிக்காக உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    • வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று பிரீதம் ராம் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    பிலிபிட்:

    உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியில் பிரீதம் ராம் (28) என்பவர் தனது மனைவி ஈஸ்வரி தேவி, மகள்கள் நந்தினி(5), ரூபி (2) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பிலிபிட்-பிசல்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று பிரீதம் ராம் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர்.

    மேலும் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ×