search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ நிபுணர்கள்"

    • ஸ்லீப் அப்னியா மிதமானது முதல் கடுமையானது வரை பாதிப்பை ஏற்படுத்தலாம்.
    • ஸ்லீப் அப்னியா நோயில் இருந்து விடுபட படுக்கைக்கு செல்லும் முன்பாக மது அருந்தக்கூடாது.

    துபாய்:

    மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறல் மருத்துவத்துறையில் ஸ்லீப் அப்னியா என அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு அவர் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும்போது அவரது மேல் மூச்சுப்பாதையில் அடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சரியாக தூங்க முடியாமல் போகிறது.

    சில நேரங்களில் மூளையில் இருந்து தசைகளுக்கு சரியான சிக்னல்கள் செல்லாவிட்டாலும் ஸ்லீப் அப்னியா ஏற்படும். இந்த நோயால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டு சரி செய்யாவிட்டால் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் வரும்.

    இந்த நோயின் கொடுமை என்னவென்றால் இப்படி ஒரு நோய் தங்களுக்கு இருப்பதே தெரியாமல் இருப்பதுதான். இதில் வெளியில் தெரியக்கூடிய அறிகுறிகளை கூட பெரும்பாலானோர் பெரிதாக கருதுவது இல்லை. ஸ்லீப் அப்னியா உள்ளவர்களுக்கு அதிகமான பகல் நேர தூக்கம் உண்டாகும். அதற்கு அடுத்த படியாக சத்தமான குறட்டையுடன் அயர்ந்து தூங்குவது ஆகும். மூச்சுத்திணறல், காலையில் தலைவலி அல்லது எரிச்சலான மனநிலை, வேலையில் கவனக்குறைபாடு, வாய் வறட்சி, இரவு முழுவதும் தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

    ஸ்லீப் அப்னியா மிதமானது முதல் கடுமையானது வரை பாதிப்பை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் உயிரை பறிக்கும் அளவுக்கு செல்லலாம். இதனை கண்டறிய பாதிக்கப்பட்ட நபர் தூங்கும்போது நடத்தும் சோதனைகள் மூலம் கண்டறியப்படுகிறது. இந்த நோய்க்கு சிபிஏபி என்ற தானியங்கி எந்திரத்தை பயன்படுத்தி தூக்கத்தின்போது மூக்கில் ஏற்படும் காற்றழுத்தத்தை சீராக வைத்து சுவாசப்பாதையில் மூச்சடைப்பு ஏற்படாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த ஸ்லீப் அப்னியா நோயில் இருந்து விடுபட படுக்கைக்கு செல்லும் முன்பாக மது அருந்தக்கூடாது. உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். புகைப்பிடித்தல் கூடவே கூடாது. துபாயில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் பாலின வேறுபாடின்றி துபாயில் வசிக்கும் 21 சதவீதத்தினரில் 51 வயது முதல் 60 வயதுடையவர்கள் ஸ்லீப் அப்னியா எனப்படும் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    குறட்டை சத்தம் தாங்க முடியாமல் தங்கள் துணைகளை அழைத்து வருவோர் அதிகரித்து வருகின்றனர். அவர்களின் துணைவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம், மன இறுக்கம், ஸ்லீப் அப்னியா ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் முறையான மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உலக நாடுகளில் தற்போது பல நாடுகள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி உள்ளது.
    • தடுப்பூசி காரணமாக வயது முதிர்ந்தவர்களும் நோய் பரவலில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

    புதுடெல்லி:

    உலகின் சில நாடுகளில் மீண்டும் உருமாறிய கொரோனா பரவல் தொடங்கி உள்ளது.

    இதையடுத்து இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதன் ஒருபகுதியாக பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இதுபோல இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கார்பெவாக்ஸ், கோவாக்ஸ் மற்றும் கோவாக்சின் என 3 வகை தடுப்பூசிகளை குழந்தைகளுக்கும் போடலாம் எனக்கூறப்பட்டுள்ளது.

    தற்போது கொரோனா பரவ தொடங்கியிருப்பதை கட்டுப்படுத்த இந்த தடுப்பூசிகளை குழந்தைகளுக்கும் போட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ பணிக்குழுவின் உறுப்பினர் டாக்டர் பிரமோத் ஜோக் கூறும்போது, இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவாமல் இருக்க இம்முறை குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது விவேகமான செயலாக இருக்கும்.

    12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் பக்க நோய்களான நீரிழிவு, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்கள் பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இதன்மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

    உலக நாடுகளில் தற்போது பல நாடுகள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி உள்ளது. மேலும் தடுப்பூசி காரணமாக வயது முதிர்ந்தவர்களும் நோய் பரவலில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

    மேலும் பல நாடுகளில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • பொது இடங்களில் மீண்டும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்குவது போன்ற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஒமைக்ரானின் துணை வைரசான பிஎப்.7 துணை வைரஸ்களின் பரவலால் சீனா, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

    அந்நாடுகளில் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    நாடு முழுவதும் இதுவரை 220 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் புதிய வகை தொற்று இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொற்று பாதித்த 2 பேரின் மாதிரிகளை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்ததில் அவர்களுக்கு பிஎப்.7 வகை திரிபு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதே போல மேலும் குஜராத்தில் மேலும் ஒருவருக்கும், ஒடிசாவில் ஒரு பெண்ணுக்கும் என இதுவரை நாடு முழுவதும் 4 பேருக்கு பிஎப்.7 வகை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தொற்று பாதிக்கப்பட்ட 4 பேருக்குமே பெரிய அளவில் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மேலும் நோயாளிகள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றதையடுத்து குணம் அடைந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று சுகாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் பேசிய அவர், கொரோனா பரவல் ஓய்ந்து விடவில்லை. நாம் அனைவரும் விழி்ப்புணர்வுடன் இருக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையையும் நாம் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்றார்.

    இதற்கிடையே புதிய வகை தொற்று பரவல் கண்காணிப்பை அனைத்து மாநில அரசுகளும் தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    தற்போது வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் தொற்று பரிசோதனை செய்யப்படுவது இல்லை. இந்நிலையில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா திரிபுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

    பொது இடங்களில் மீண்டும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்குவது போன்ற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுதவிர பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துமாறும் அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுவரை 28 சதவீதம் பேருக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே தகுதி உடையவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக மூத்த குடிமக்கள் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் கேட்டுக்கொண்டுள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில், பொது மக்கள் கூட்டமான இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

    நோயாளிகள் அல்லது வயதில் மூத்தவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது. புதிய வகை தொற்று குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் என கூறி உள்ளார்.

    இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா புதிய வகை கொரோனா பற்றி பீதியடைய தேவையில்லை என்று தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

    சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு பற்றிய செய்தி கவலை அளிக்கிறது. நமது சிறந்த தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் சாதனை பதிவை கருத்தில் கொண்டு நாம் புதிய வகை கொரோனா பரவல் பற்றி பீதியடைய தேவையில்லை.

    இந்திய அரசு நிர்ணயித்த வழிகாட்டுதல்களை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

    ×