என் மலர்
நீங்கள் தேடியது "பிஎப் 7"
- பண்டிகைக் காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மருத்துவமனையில் போதிய அளவு படுக்கைகள், உபகரணங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
புதுடெல்லி:
வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா பரவுவதை அடுத்து இந்தியாவில் இது தொடர்பாக முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. வெளிநாட்டு விமான பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இன்றைய தினம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் போதிய அளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா உறுதியான மாதிரிகளை மரபணு ஆய்வகத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும். உருமாற்றம் பெற்ற கொரோனா இருப்பது கண்டுபிடிப்பதற்கு இந்த பரிசோதனை பயன்படும்.
சீனாவில் பிஎப் 7 கொரோனா அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவில் தற்போது 10 வகையான உருமாறிய கொரோனா தொற்று இருப்பதும், மேலும் பிஎப் 7 இருப்பது கண்டறியவும் மரபணு ஆய்வு உதவும்.
மேலும் மருத்துவமனையில் போதிய அளவு படுக்கைகள், உபகரணங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பண்டிகைக் காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர பொது இடங்களில் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நாம் ‘டெல்டா’ என்ற மிக மோசமான கொரோனா அலையையே பார்த்து விட்டோம்.
- சீனாவில் தடுப்பூசி செலுத்த மக்கள் முன்வரவில்லை.
ஐதராபாத்:
உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்.) இயக்குனர் வினய் கே.சந்திகூரி ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பொதுவாக உருமாறிய கொரோனாக்கள் அனைத்தும் கவலை அளிக்கக்கூடியவைதான். அவை நோய் எதிர்ப்பு சக்தியை மீறி செயல்படும். தடுப்பூசி போட்டவர்களை தாக்கும். ஒமைக்ரானால் தாக்கப்பட்டவர்களை கூட தாக்கும்.
நாம் 'டெல்டா' என்ற மிக மோசமான கொரோனா அலையையே பார்த்து விட்டோம். உடனே தடுப்பூசி போடும் பணியை தொடங்கினோம். 'ஒமைக்ரான்' வந்தது. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டோம்.
இப்போது வந்துள்ள பி.எப்.7 என்ற புதியவகை கொரோனா, டெல்டா அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது. அந்த அளவுக்கு நாம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளோம். மற்ற வைரஸ்களின் தாக்குதலுக்கு ஆளாகி, நாம் ஏற்கனவே மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று விட்டோம். எனவே, இப்போது சீனாவில் ஏற்படுத்தியது போல், இந்தியாவில் பி.எப்.7 கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது. எல்லா வழிகளிலும் நாம் வேறு பட்டவர்கள்.
சீனாவில் 'பூஜ்ய கொரோனா' கொள்கையை பின்பற்றியதுதான் தற்போதைய கொரோனா பரவலுக்கு காரணம். அங்கு தடுப்பூசி குறைவான அளவுக்கு போட்டிருப்பது நோயின் தீவிரத்தை அதிகரித்து விட்டது.
இந்தியாவில் வயதானவர்கள் கூட தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். ஆனால் சீனாவில் அப்படி தடுப்பூசி செலுத்த மக்கள் முன்வரவில்லை.
இந்தியாவில் கொரோனா அலை வரும் என்றோ, வராது என்றோ தற்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் உடனே அலை வரும் என்பதற்கான பீதியான அறிகுறி தெரியவில்லை. அதே சமயத்தில், இந்தியாவில் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி, சிகிச்சை போன்ற கட்டமைப்பு வசதிகள் தாராளமாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.